Skip to main content
முதல் தருணம் .........



இளங்கலை இறுதியாண்டில் ,

உன்னிடம் உள்ளம் திறந்தேன் !


மௌனமாகப் பார்த்தாய் !


" சம்மதமா ? " என்றேன் !


சின்னதாகச் சிரித்தாய் !


நொடிபொழுதில் ,

நிறம் மாறித்தெரிந்தது உலகம் !


இம்சையே இல்லாமல் ,

இரண்டு இதயங்கள்

இனிதாய் இடம் மாறின !


பார்வைகளை

வார்த்துக்கொண்டு ,

காதலைப் பருகினோம் !


சிறிது தூரம் ஒன்றாக நடந்தோம் !


வழியில் ஒரு ரோஜாச்செடி !


" ரோஜா வேண்டுமா ? " என்றேன் .


" அதற்கு வலிக்குமே ! " என்றாய் !


" அதைத் தலையில் சூடினால் உனக்கு வலிக்கும் .

வலிக்கும் வலிக்கும் சரியாப் போகும் ! " என்றேன் .


"குறும்பு ......" என்றபடி குத்தினாய் .

குழைத்து குறுகுறுத்தது உயிர் !


நாம் இன்னும் நடந்தோம் .

பட்டாம்பூச்சி ஒன்றைப் பார்த்து ,

" பிடித்துத்தா " என்றாய் !

" தருகிறேன் ... உன்னைப்பிடித்து

பட்டாம்பூச்சியிடம் " என்றேன் .

கன்னத்தைத் தான் கிள்ளினாய்

செத்து செத்து பிழைத்து வந்தேன் !


சிறிது தொலைவில் ,

தேநீர் கடை வந்தது !


எதிரெதிரே அமர்ந்து ,

தேநீர் பருகினோம் !

எதிர் பாராத நொடியில் ,

நீ குடித்த தேநீரின் மீதத்தை

பிடுங்கிக் குடித்துவிட்டு ,

" இதோ வந்துவிடுகிறேன்

கொஞ்சம் வேலை இருக்கிறது "

என்று எழுந்தேன் .


" எங்கே போகிறாய் ? " என்றாய் .


நான் சொன்னேன் .....

" தேவர்களைப் பார்க்க ........

அமுதத்திற்கு அர்த்தத்தை

அவர்களிடம் சொல்லியே ஆக வேண்டும் " .


உதட்டைச் சுழித்து

ஒழுங்கு காட்டினாய் !


அப்போது தான் உன் கைகளை

முதன் முறையாகப் பற்றினேன் !

அவைகளை எடுத்து

என் நெஞ்சில் வைத்துக்கொண்டு சொன்னேன் .

" இன்று நமது பந்தத்தின்

ஆயிரமாவது யுகத் தொடக்க விழா ! "


சட்டென்று அழுது விட்டாய் !

" அழாதே ! அழாதே ! " என்றபடியே

நானும் அழுதேன் !


அதன் பிறகு ,

நாம் உடல்களால் மட்டும்

பிரிந்து சென்றோம் !!!

Comments

Popular posts from this blog

அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
அபார்ட்மெண்ட் சிறுவனே ................... அடே ! சிறுவா ! உன்னைத்தான் ! இங்கே பார் ! கணினி விளையாட்டை கணநேரம் ஒத்திவை ! கேள் ! விரிந்திருகிறது வீதி !  அதில், விளையாடுவது தானே நீதி ? கட்டம் கட்டு, குறுக்கே கோடிடு ! ஆடலாம் சடுகுடு ! கைக்குட்டை எடு , கண்ணைக் கட்டு ! ஆடு கண்ணாமூச்சி ! ஓடித்தொடுதல் ஆடியதுண்டா ? ஒற்றைக் காலிலும் ஓடித் தொடலாம் ! அதற்குப் பெயர்தான் நொண்டி ! ஆரோக்கியக் காசுகள் சேர்ப்பதில், அதுவொரு அற்புத உண்டி ! அப்புறம் இன்னோர் விளையாட்டு ! ஒருகால் மடக்கிக் குந்து ! தேவையில்லை பந்து ! குச்சியால் குச்சியை உந்து ! எம்பியெழுவதை, ' கில்லித்தட்டு '   -  என்றே நீ சொல்லித்தட்டு !  நிறம் கூறித் துரத்தும் ஆட்டம் பரிச்சையமுண்டா ? திருடன் போலீஸ் தெரியுமா ? நூல் பிடித்தோடி பட்டம் விட்டதில்லையா ? உத்திரத்தில் கயிறு கட்டி தூரி.............? என்னடா உனக்கு எதுவுமே தெரியவில்லை ! மேற்கண்ட விளையாட்டில் வலிமையாகும் உன் தசை ! வெறும் கணினியைத் தட்டுவதில் விரலுக்கு மட்டுமே விசை ! யாருமில்லையா வீட்டில் ? ஓ ! இரவுப்பணி முடித்து இன்னும் உறங்கும் தந்தை ! அழகுநிலையம் சென்று...
கலி , கலாச்சாரம், கற்பு கலி இங்கே முற்றிவிட்டது ! கலாச்சார நதி வற்றிவிட்டது ! நாகரீகத் தீ பற்றிவிட்டது ! ஆபாசப் பாம்பு சுற்றிவிட்டது ! எல்லாம் இங்கே கெட்டு விட்டது ! பண்பாட்டு மரம் பட்டு விட்டது ! எல்லாருமே காமத்தில் கொழுக்கிறார்கள் ! பெரும்பாலோர் பிஞ்சிலேயே பழுக்கிறார்கள் ! சல்லடை போட்டுத் தேடினாலும் கற்புக்கரசர்களை - இங்கு காண முடியாது ! ஸ்ரீ ராமனே வந்தாலும் நூறு சதம் கற்பை - இனி பேண முடியாது ! ஒருத்திக்கு ஒருவன் என்றில்லாத நிலை வரப்போகிறது ! கண்காட்சிக் கூடத்தில் கற்புக்கும் ஒரு சிலை வரப்போகிறது ! கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு சிதையப் போகிறது ! உறவெனும் கோவில் உருத்தெரியாமல் புதையப் போய்கிறது ! அதென்ன அச்சு பிசகாமல் அழகானவர்களுக்கே காதல் வருகிறது ! சொல்லி வைத்தாற்போல சொடக்குப் போடுவதற்குள் மோதல் வருகிறது ! எல்லா காதலர்களும் காது சூடேற பேசுகிறார்கள் காமத்தை ! மோகத்தீயில் வேக வைக்கிறார்கள் அர்த்தராத்திரி சாமத்தை ! அலைபேசியில் அழைக்கும் போது மாறிவிடுகிறது ...