Skip to main content
முதல் தருணம் .........



இளங்கலை இறுதியாண்டில் ,

உன்னிடம் உள்ளம் திறந்தேன் !


மௌனமாகப் பார்த்தாய் !


" சம்மதமா ? " என்றேன் !


சின்னதாகச் சிரித்தாய் !


நொடிபொழுதில் ,

நிறம் மாறித்தெரிந்தது உலகம் !


இம்சையே இல்லாமல் ,

இரண்டு இதயங்கள்

இனிதாய் இடம் மாறின !


பார்வைகளை

வார்த்துக்கொண்டு ,

காதலைப் பருகினோம் !


சிறிது தூரம் ஒன்றாக நடந்தோம் !


வழியில் ஒரு ரோஜாச்செடி !


" ரோஜா வேண்டுமா ? " என்றேன் .


" அதற்கு வலிக்குமே ! " என்றாய் !


" அதைத் தலையில் சூடினால் உனக்கு வலிக்கும் .

வலிக்கும் வலிக்கும் சரியாப் போகும் ! " என்றேன் .


"குறும்பு ......" என்றபடி குத்தினாய் .

குழைத்து குறுகுறுத்தது உயிர் !


நாம் இன்னும் நடந்தோம் .

பட்டாம்பூச்சி ஒன்றைப் பார்த்து ,

" பிடித்துத்தா " என்றாய் !

" தருகிறேன் ... உன்னைப்பிடித்து

பட்டாம்பூச்சியிடம் " என்றேன் .

கன்னத்தைத் தான் கிள்ளினாய்

செத்து செத்து பிழைத்து வந்தேன் !


சிறிது தொலைவில் ,

தேநீர் கடை வந்தது !


எதிரெதிரே அமர்ந்து ,

தேநீர் பருகினோம் !

எதிர் பாராத நொடியில் ,

நீ குடித்த தேநீரின் மீதத்தை

பிடுங்கிக் குடித்துவிட்டு ,

" இதோ வந்துவிடுகிறேன்

கொஞ்சம் வேலை இருக்கிறது "

என்று எழுந்தேன் .


" எங்கே போகிறாய் ? " என்றாய் .


நான் சொன்னேன் .....

" தேவர்களைப் பார்க்க ........

அமுதத்திற்கு அர்த்தத்தை

அவர்களிடம் சொல்லியே ஆக வேண்டும் " .


உதட்டைச் சுழித்து

ஒழுங்கு காட்டினாய் !


அப்போது தான் உன் கைகளை

முதன் முறையாகப் பற்றினேன் !

அவைகளை எடுத்து

என் நெஞ்சில் வைத்துக்கொண்டு சொன்னேன் .

" இன்று நமது பந்தத்தின்

ஆயிரமாவது யுகத் தொடக்க விழா ! "


சட்டென்று அழுது விட்டாய் !

" அழாதே ! அழாதே ! " என்றபடியே

நானும் அழுதேன் !


அதன் பிறகு ,

நாம் உடல்களால் மட்டும்

பிரிந்து சென்றோம் !!!

Comments

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
கவிதை செய்தல் உயிரை உருக்கித் தயாரிக்கும் உணர்வின் இரசம் ! மூளையைப் பிழிதெடுக்கும் மொழிச்சாறு ! உணவுண்ணும் போதும் கனவுண்ணும் கைங்கர்யம் ! கற்பனையின் , கையில் அகப்பட்டது கைவிட்டுப் போகாதிருக்க கையோடு இருக்கும் கைக்குறிப்பு ! குளியலறையிலும் குதித்தாடும் சிந்தனைகள் ! பணி நடுவிலும் அணிவகுக்கும் அழகுணர்ச்சி ! சக மனிதனின் சூழல் திருடும் சாமார்த்தியம் ! உலகப் படைப்புகளில் ஊழல் செய்யும் சாணக்கியம் ! ரகசியங்களை ரசனைப் படுத்தும் ரசாயனம் ! பழமையைப் புறந்தள்ளும் பௌதிகம் ! பிறப்பெடுத்த மலர்ச்சியிலும் பிரசவித்த அயர்ச்சி ! புத்தி சொல்லும் கேனத்தனம் புத்தி இழக்கும் ஞானத்தனம் ! உணர்ச்சிக்கு வடிவம் கொடுக்கும் வித்தை ! - மொழியுடனான புணர்ச்சிக்கு படுக்கை விரிக்கும் மெத்தை ! எண்ணங்களின் வானவில்லுக்குப் பேனாவால் மழை பொழிதல் ! உண்மையின் அந்தரங்கம் மறைக்க பொய்யால் ஆடை நெய்தல் ! ஒரே ஒரு வார்த்தைக்கும் வாரக்கணக்கில் மெனக்கெடுதல் !