Skip to main content
Note : This poem is based on the spectrum broad band issue ............................



விரைந்து வருவாயா தலைவா ?


தோரணங்களில் நீ சிரிக்க எனக்கு

காரணங்கள் தேவையில்லை !


நீ சிரிக்க வேண்டும் !

அது போதும் !


நீ

மேடைகளில்

முழங்கும்போது - உனக்கு

மாலை போட

முண்டியடிப்பவன் நான் !


என்னை உனக்குத் தெரியாது

எனக்கு உன்னை மட்டுமே தெரியும் !


உனக்கு வணக்கம் சொல்லாமல்

எனக்குப் பொழுதுகள் விடிவதில்லை !


உன்னை வாழ்த்திப்பாடாமல்

என் இரவுகள் இனிப்பதில்லை !


தலைவன் என்று

நீ வந்துவிட்டதால் ,

இறைவன் என்று

எவன் இருந்தாலும்

ஏற்றுக்கொள்ள மறுக்கிறேன் !


என் வீட்டில் ஒருவேளை

அடுப்பு எரிந்தாலும் ,

அரிசியில் உன் முகத்தையே

தரிசிக்கிறேன் !


குடிசையில் நான் இருந்தாலும் - நீ

கோபுரத்தில் வாழ வேண்டும் !


மண்தரையில் நான் படுத்தாலும் - நீ

மலர் மஞ்சத்தில் உறங்கவேண்டும் !


என்னைப் பொறுத்தவரை ,

மாநாடுகள் தான்

மகிழ்ச்சியான திருநாள்கள் !

பொதுக்கூட்டங்கள் தான்

பிடித்தமான பண்டிகைகள் !


சுவரொட்டியில் உனது

சிரிப்பைக் கண்டால்தான்

சிந்தனையே சீராகும் !


கரைவேட்டியைக்

கட்டினாலே போதும் ,

கவலைகள் மறந்து

கம்பீரம் பிறந்து விடும் !


கொடிகளைக் கண்ட மனமோ

களிப்படைந்து கொண்டாடும் !


எதோ பெரிய இழப்பாம் !

தொகை மட்டும்

லட்சங்களின் கோடியாம் !


புலன் ஆய்ந்தவர்கள்

பட்டியல் நீட்டி ,

வில்லங்கத்திற்கு

விஞ்ஞான விளக்கம் சொல்கிறார்கள் !

வீணாய்ப்போன மண்டைக்குத்தான்

விளங்க மாட்டேன் என்கிறது !


பத்திரிக்கைகள்

பக்கம் பக்கமாய் எழுதுகின்றன !


எதிர்க்கட்சிகள்

ஏளனமாய்ச் சிரிக்கின்றன !


அண்டை வீட்டுக்காரன் கூட

ஆவேசமாய் ஏசுகிறான் !


யாவற்றையும் ,

நிலவின் களங்கம் - என்று கூறி ,

நாசூக்காய்

நகர்ந்து விடுகிறேன் !


மனசாட்சி மட்டும்

முரண்டு பிடிக்கிறது

மது இருந்தால் அதுவும்

மாண்டு போகும் !


இது வேறு ஒன்றுமில்லை தலைவா !


சூழ்நிலை பின்னிய

சூழ்ச்சிவலை !

விதி செய்த சதி !

காலம் போட்ட கோலம் !


சரித்திரத்தின் சோதனை இது

சோர்ந்து விடாதே !


வரலாற்றின் வேதனை இது

வீழ்ந்து விடாதே !


ஆனால் ,


மௌனத்தை எப்போது

உடைக்கப் போகிறாய் ?

கறைகளை எப்போது

துடைக்கப் போகிறாய் ?


இகழ்ச்சிகளை

இல்லாமல் செய்வாயா ?

தூற்றுதல்களைத்

தூக்கி எறிய வருவாயா ?


எப்போது என

நான் நம்பிக்கையோடு காத்திருக்கிறேன் !


நாளைய தீர்ப்பில் ,

நியாயத்தின் பக்கம்

நீ இல்லை என்றானாலும் ,

நாணிச் சாக நானிருக்கிறேன் !

நீ நிமிர்ந்தே நட !


இறுதியாக ,

ஒரே ஒரு வேண்டுகோள் !


எனக்காகவோ

உனக்காகவோ வேண்டாம் - நம்

உறவுக்காகவாவது ,

உண்மையை உலகிற்கு உரைத்திட

விரைந்து வருவாயா தலைவா ???







Comments

Popular posts from this blog

அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
அபார்ட்மெண்ட் சிறுவனே ................... அடே ! சிறுவா ! உன்னைத்தான் ! இங்கே பார் ! கணினி விளையாட்டை கணநேரம் ஒத்திவை ! கேள் ! விரிந்திருகிறது வீதி !  அதில், விளையாடுவது தானே நீதி ? கட்டம் கட்டு, குறுக்கே கோடிடு ! ஆடலாம் சடுகுடு ! கைக்குட்டை எடு , கண்ணைக் கட்டு ! ஆடு கண்ணாமூச்சி ! ஓடித்தொடுதல் ஆடியதுண்டா ? ஒற்றைக் காலிலும் ஓடித் தொடலாம் ! அதற்குப் பெயர்தான் நொண்டி ! ஆரோக்கியக் காசுகள் சேர்ப்பதில், அதுவொரு அற்புத உண்டி ! அப்புறம் இன்னோர் விளையாட்டு ! ஒருகால் மடக்கிக் குந்து ! தேவையில்லை பந்து ! குச்சியால் குச்சியை உந்து ! எம்பியெழுவதை, ' கில்லித்தட்டு '   -  என்றே நீ சொல்லித்தட்டு !  நிறம் கூறித் துரத்தும் ஆட்டம் பரிச்சையமுண்டா ? திருடன் போலீஸ் தெரியுமா ? நூல் பிடித்தோடி பட்டம் விட்டதில்லையா ? உத்திரத்தில் கயிறு கட்டி தூரி.............? என்னடா உனக்கு எதுவுமே தெரியவில்லை ! மேற்கண்ட விளையாட்டில் வலிமையாகும் உன் தசை ! வெறும் கணினியைத் தட்டுவதில் விரலுக்கு மட்டுமே விசை ! யாருமில்லையா வீட்டில் ? ஓ ! இரவுப்பணி முடித்து இன்னும் உறங்கும் தந்தை ! அழகுநிலையம் சென்று...
கலி , கலாச்சாரம், கற்பு கலி இங்கே முற்றிவிட்டது ! கலாச்சார நதி வற்றிவிட்டது ! நாகரீகத் தீ பற்றிவிட்டது ! ஆபாசப் பாம்பு சுற்றிவிட்டது ! எல்லாம் இங்கே கெட்டு விட்டது ! பண்பாட்டு மரம் பட்டு விட்டது ! எல்லாருமே காமத்தில் கொழுக்கிறார்கள் ! பெரும்பாலோர் பிஞ்சிலேயே பழுக்கிறார்கள் ! சல்லடை போட்டுத் தேடினாலும் கற்புக்கரசர்களை - இங்கு காண முடியாது ! ஸ்ரீ ராமனே வந்தாலும் நூறு சதம் கற்பை - இனி பேண முடியாது ! ஒருத்திக்கு ஒருவன் என்றில்லாத நிலை வரப்போகிறது ! கண்காட்சிக் கூடத்தில் கற்புக்கும் ஒரு சிலை வரப்போகிறது ! கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு சிதையப் போகிறது ! உறவெனும் கோவில் உருத்தெரியாமல் புதையப் போய்கிறது ! அதென்ன அச்சு பிசகாமல் அழகானவர்களுக்கே காதல் வருகிறது ! சொல்லி வைத்தாற்போல சொடக்குப் போடுவதற்குள் மோதல் வருகிறது ! எல்லா காதலர்களும் காது சூடேற பேசுகிறார்கள் காமத்தை ! மோகத்தீயில் வேக வைக்கிறார்கள் அர்த்தராத்திரி சாமத்தை ! அலைபேசியில் அழைக்கும் போது மாறிவிடுகிறது ...