எப்போது பாயப் போகிறாய் ?
எங்கே உனது தன்மானம் ?
வீழ்ந்து கிடப்பது அவமானம் !
வானம் உனக்கொரு உவமானம் !
வரும் காலம் உனது வெகுமானம் !
விழுந்தால் தானடா
எழ முடியும் !
விழித்தால் தானடா
விடியல் தெரியும் !
ஒன்று தெரியுமா ?
வெற்றி என்பது ,
தோல்வியின் குழந்தை !
முதலில் ,
தோல்வின் காலைத் தழுவு !
பிறகு ,
வெற்றி வந்து மடியில் தவழும் !
சிறகுகள் உன்னிடம் இருக்கும்போது
ஏணியை ஏனடா தேடுகிறாய் ?
காலடியில் கதிரவன் காத்திருக்க ,
விளக்குக்காக அலைகிறாய் !
சோம்பல் என்பது
ஊன்றுகோல் ! அதை
உதறிப்போடு !
முயற்சி என்பதே
மந்திரக்கோல் ! அதை
கைகளில் ஏந்து !
கவலைகள் எல்லாம்
மாயமாய் மறையும் !
அடிபட்ட தழும்புகள்
இருப்பதால்
உன்னை வரிக்குதிரை என்று
எவன் சொன்னது ?
அந்தத் தழும்புகள் ,
புலியிடமும் இருக்கின்றன !
இதுவரை பதுங்கி விட்டாய் !
எப்போது பாயப் போகிறாய் ?
எங்கே உனது தன்மானம் ?
வீழ்ந்து கிடப்பது அவமானம் !
வானம் உனக்கொரு உவமானம் !
வரும் காலம் உனது வெகுமானம் !
விழுந்தால் தானடா
எழ முடியும் !
விழித்தால் தானடா
விடியல் தெரியும் !
ஒன்று தெரியுமா ?
வெற்றி என்பது ,
தோல்வியின் குழந்தை !
முதலில் ,
தோல்வின் காலைத் தழுவு !
பிறகு ,
வெற்றி வந்து மடியில் தவழும் !
சிறகுகள் உன்னிடம் இருக்கும்போது
ஏணியை ஏனடா தேடுகிறாய் ?
காலடியில் கதிரவன் காத்திருக்க ,
விளக்குக்காக அலைகிறாய் !
சோம்பல் என்பது
ஊன்றுகோல் ! அதை
உதறிப்போடு !
முயற்சி என்பதே
மந்திரக்கோல் ! அதை
கைகளில் ஏந்து !
கவலைகள் எல்லாம்
மாயமாய் மறையும் !
அடிபட்ட தழும்புகள்
இருப்பதால்
உன்னை வரிக்குதிரை என்று
எவன் சொன்னது ?
அந்தத் தழும்புகள் ,
புலியிடமும் இருக்கின்றன !
இதுவரை பதுங்கி விட்டாய் !
எப்போது பாயப் போகிறாய் ?
Comments
Post a Comment