Skip to main content
குறிப்பு : தமிழும் , தமிழ் கவிஞர்களும் என்னை மன்னித்து விடுங்கள்



கவிதை எழுதுவது எப்படி ?


அது ஒன்னும் பெரிய

பிரமாதம் கிடையாது !


" " வுக்கு " " போடு !

" " வுக்கு " " போடு !

" " வுக்கு " " போட்டா

ஓஹோன்னு இருக்கும் !


அது மாதிரியே

மைக்கு மை !

பைக்கு பை !


என்ன புரியலையா ?


அன்பேன்னு ஆரம்பிக்கறியா

அடுத்ததா ஆட்டுக்குட்டியேன்னு

அடிச்சுவிடு !


அம்மான்னு தொடங்கினா

சும்மான்னு முடி !


மகிழ்ச்சின்னா

நெகிழ்ச்சி , முகிழ்ச்சி .......

இடையில இகழ்ச்சியக்கூட

இழுத்து வுட்டுக்கலாம் !


"வாடா மச்சி " க்கு

இருக்கவே இருக்கு

"வாழக்கா பச்சி " !


காதல்ன்னா ,

கனவு , கற்பனை ,

கன்றாவி , கசுமாலம் ........

கடைசியா

மோதலையும் , சாதலையும்

மறந்துடாத மவனே !


பொம்பளையப் பாடுறியா

மரஞ்செடி கொடியில ஆரம்பிச்சு

மாங்கா , தேங்கா வரைக்கும் சும்மா

தோரணம் கட்டித் தொங்கவிடலாம் !

நடு நடுவுல மானே , தேனே

பொன்மானே எல்லாம் போட்டுக்கணும் !


ஊருக்கு உபதேசம் பண்ணறியா

வாலிபான்னு ஆரம்பிச்சா

வகை வகையா

வரிஞ்சு தள்ளலாம் !


உதாரணத்துக்கு ஒன்னு !

" வாலிபா கேள் !

சிப்பிக்குள் முத்து - அது

சிறைப்பட்ட சொத்து !

ஈரஞ்சு பத்து - நீ

வெற்றியோட வித்து ! "


யாருகிட்ட !


ஒரு வரியில சொல்லறத

ஒம்போது வரியில சொன்னா

அதுதாண்டா கவித !


இப்ப

" எனக்கு ரெண்டு நாளா பின்னாடி புடுங்கிகிச்சு " ன்னா

அது செய்தி !

அதையே

" எனக்கு

ரெண்டு நாளா

பின்னாடி

புடுங்கிகிச்சு ! " ன்னா

அது கவிதை !


அப்பப்ப ஆச்சர்யக்குறி

போட்டுக்க

அசத்தலா தெரியும் !


சினிமாவுலயும்

சின்னதா கவனம் வச்சுக்க

பழைய பாட்டோ

புதிய பாட்டோ

உருவி உள்ளவிட்டா

எவனும் ஏன்னு கேக்க மாட்டான் !


ஒன்னு தெரியுமா ?

தமிழ் ரொம்ப

நல்லமொழி !

எவ்வளவு அடிச்சாலும் தாங்கும் !


சரக்கு தீந்துடுச்சுன்னு

நெனைக்கிறப்ப எல்லாம்

சரக்கடி !


எங்கே

பட்டயப் போட்டுக்கிட்டு சும்மா

பட்டயக் கெளப்பு பாக்கலாம் !!!





Comments

  1. en kanna thiranthitinga thalaiva ..... enimel nanum oru kavingyan than

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
அபார்ட்மெண்ட் சிறுவனே ................... அடே ! சிறுவா ! உன்னைத்தான் ! இங்கே பார் ! கணினி விளையாட்டை கணநேரம் ஒத்திவை ! கேள் ! விரிந்திருகிறது வீதி !  அதில், விளையாடுவது தானே நீதி ? கட்டம் கட்டு, குறுக்கே கோடிடு ! ஆடலாம் சடுகுடு ! கைக்குட்டை எடு , கண்ணைக் கட்டு ! ஆடு கண்ணாமூச்சி ! ஓடித்தொடுதல் ஆடியதுண்டா ? ஒற்றைக் காலிலும் ஓடித் தொடலாம் ! அதற்குப் பெயர்தான் நொண்டி ! ஆரோக்கியக் காசுகள் சேர்ப்பதில், அதுவொரு அற்புத உண்டி ! அப்புறம் இன்னோர் விளையாட்டு ! ஒருகால் மடக்கிக் குந்து ! தேவையில்லை பந்து ! குச்சியால் குச்சியை உந்து ! எம்பியெழுவதை, ' கில்லித்தட்டு '   -  என்றே நீ சொல்லித்தட்டு !  நிறம் கூறித் துரத்தும் ஆட்டம் பரிச்சையமுண்டா ? திருடன் போலீஸ் தெரியுமா ? நூல் பிடித்தோடி பட்டம் விட்டதில்லையா ? உத்திரத்தில் கயிறு கட்டி தூரி.............? என்னடா உனக்கு எதுவுமே தெரியவில்லை ! மேற்கண்ட விளையாட்டில் வலிமையாகும் உன் தசை ! வெறும் கணினியைத் தட்டுவதில் விரலுக்கு மட்டுமே விசை ! யாருமில்லையா வீட்டில் ? ஓ ! இரவுப்பணி முடித்து இன்னும் உறங்கும் தந்தை ! அழகுநிலையம் சென்று...
கலி , கலாச்சாரம், கற்பு கலி இங்கே முற்றிவிட்டது ! கலாச்சார நதி வற்றிவிட்டது ! நாகரீகத் தீ பற்றிவிட்டது ! ஆபாசப் பாம்பு சுற்றிவிட்டது ! எல்லாம் இங்கே கெட்டு விட்டது ! பண்பாட்டு மரம் பட்டு விட்டது ! எல்லாருமே காமத்தில் கொழுக்கிறார்கள் ! பெரும்பாலோர் பிஞ்சிலேயே பழுக்கிறார்கள் ! சல்லடை போட்டுத் தேடினாலும் கற்புக்கரசர்களை - இங்கு காண முடியாது ! ஸ்ரீ ராமனே வந்தாலும் நூறு சதம் கற்பை - இனி பேண முடியாது ! ஒருத்திக்கு ஒருவன் என்றில்லாத நிலை வரப்போகிறது ! கண்காட்சிக் கூடத்தில் கற்புக்கும் ஒரு சிலை வரப்போகிறது ! கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு சிதையப் போகிறது ! உறவெனும் கோவில் உருத்தெரியாமல் புதையப் போய்கிறது ! அதென்ன அச்சு பிசகாமல் அழகானவர்களுக்கே காதல் வருகிறது ! சொல்லி வைத்தாற்போல சொடக்குப் போடுவதற்குள் மோதல் வருகிறது ! எல்லா காதலர்களும் காது சூடேற பேசுகிறார்கள் காமத்தை ! மோகத்தீயில் வேக வைக்கிறார்கள் அர்த்தராத்திரி சாமத்தை ! அலைபேசியில் அழைக்கும் போது மாறிவிடுகிறது ...