குறிப்பு : இக்கவிதை வயது வந்தவர்களுக்கு மட்டும்
ஆதலால் காதல் செய்வீர்
பேருந்து நிறுத்தத்தில்
பேருந்துக்காகக் காத்திருந்தேன் !
என்னைத் தவிர அங்கே ,
இரண்டு சிட்டுக்குருவிகள்
இருந்தன !
ஒன்று ஆண் !
இன்னொனொன்று பெண் !
இரண்டும்
என்னைப் பார்த்து
எதோ பேசிக்கொண்டன !
அநேகமாகத் திட்டியிருக்கலாம் !
"கூடிப்பேசிக் கூடல் செய்வதைக்
கெடுக்க வந்த கயவன் ! " - என்றிருக்கலாம் !
நான் சுரணையற்று
நின்றிருந்தேன் !
அப்போதுதான்
எங்கிருந்தோ அவள் வந்தாள் !
சுற்றுப்புறத்தில்
சுகந்தம் வீசியது !
கடைந்தெடுத்த சந்தனத்தின் அம்சம் அவள் !
வடிவான அரபுக்குதிரை வம்சம் அவள் !
செதுக்கிய தேகத்தில்
பாகங்கள் பதுக்கப்பட்டிருந்தன !
கச்சிதமான கண் மை !
உறுத்தாத உதட்டுச்சாயம் !
நெகிழ்ந்தாலும்
சேலை நேர்த்தியாய் இருந்தது !
இடுப்பு உடுக்கை
போலிருந்தாலும்
பாங்கான மடிப்பு
படுக்கைக்கு அழைத்தது !
கண்ணின் விழிகள்
காமத்தின் மொழி பேசின !
உதட்டு மச்சம் - அது
உணர்ச்சியின் உச்சம் !
முகத்தில்
மன்மதக் கடலையே
குடிவைத்திருந்தாள் !
காமத்தின் கலையை
பேசாமல் பேசினாள்
மோகத்தின் வலையை
வீசாமல் வீசினாள் !
மொத்தத்தில் கட்டழகி !
மன்மத மொட்டழகி !
அவளின்
அருகாமைக் கதகதப்பில்
உருகியபடியே
உறைந்து கொண்டிருந்தேன் !
முப்பதின் முதிர்ச்சி
முகத்தில் இருந்தாலும் - என்
இளமைக்கு இன்ப அதிர்ச்சியை
அயராது தந்துகொண்டிருந்தாள் !
கற்றை முடியைக் கோதியபடி
ஒற்றைப் பார்வையை வீசினாள் !
அந்தப் பார்வையில்
ஒரு " அழைப்பு " இருந்தது !
என் வாலிபம் மலைத்து நின்றது !
அவள் ,
புடவையை சரிசெய்வது போல
பாகங்களைப் படையலிட்டாள் !
கழுத்தை வருடியபடி
காமத்தைக் கடைவிரித்தாள் !
கீழுதட்டைக் கடித்து
பல்லிடுக்கில் கசிய விட்டாள் !
யம்மா ..........
உப்பி உப்பி வெடிக்கப்போகும்
ஊதப்பட்ட பலூனாய்
காமக் கொந்தளிப்பில் ,
தேகம் தத்தளித்தேன் !
சத்தியமாக
என் வசத்தில் நான் இல்லை !
அவள் எங்கே
அழைத்தாலும் ,
வாலைச் சுருட்டியபடி
பின்னாலேயே போகும்
நாயின் நிலையில்தான்
நான் நின்றிருந்தேன் !
அப்போது பார்த்து
அலைபேசி அதிர்ந்தது !
சே ! காதலி கூப்பிடுகிறாள் !
"என்ன " என்றேன்
எடுத்தவுடன் !
இனியவள் ,
இனிமையை இரண்டால் பெருக்கி
" என்ன செய்கிறாய் ? " என்றாள் !
நான்
நக்கலை நான்கால் பெருக்கி
" சிரைத்துக் கொண்டிருக்கிறேன் " என்றேன் !
" ஏதாவது கோபமா ?
நான் பிறகு அழைக்கிறேன் " என்றாள்
ஏமாற்றத்தை எட்டால் வகுத்தபடி !
அவள் பாவம்
என்று தோன்றியது !
" இரு இரு ......... என்ன சொல் ? " என்றேன்
புறக்கணிப்பை பத்தால் வகுத்தபடி !
" சும்மாதான் " என்ற
செல்ல சினேகிதி சிரித்துவிட்டாள் !
அதுவரையிருந்த காமம்
அப்போது கழுவப்பட்டது !
இதற்குள்
நடுத்தர வயதுக்காரன் ஒருவன்
நிறுத்தத்தினுள் நுழைந்தான் !
மந்தாகினி இப்போது
என்னை விட்டு
அவனைப் பார்க்க ஆரம்பித்தாள் !
பிடித்த காதலியுடன்
பேச்சு வளர வளர
மனிதனாய் இருந்தவன்
புனிதனாய் மாறிப் போனேன் !
பேச்சு வளர வளர
மனிதனாய் இருந்தவன்
புனிதனாய் மாறிப் போனேன் !
காலம் கடந்த போது ,
பட்சி ,
கட்சி மாறிப் பறந்து போனது !
நான் என்னவளுடன்
பேசிக்கொண்டே இருந்தேன் !
" நல்லவேளை " என்று
நினைத்துக் கொண்டேன் !
இறுதியாக
ஒன்றே ஒன்றை மட்டும்
சொல்லிக்கொள்கிறேன் !
வாலிபம் என்பது வங்கக்கடல் !
ஆசைகள், ஆவேச அலைகள் !
காதல் , காப்பாற்றும் கடவுள் - அதுமட்டுமே
கரை சேர்க்கும் கப்பல் !
ஆதலால்
காதல் செய்வீர் !!!
adada...
ReplyDelete