வாலிபா .........
நெருப்பு இருக்கிறது !
விறகா ? விளக்கா ?
தேர்ந்தெடுப்பது உன்கையில் !
கரிப்பதாலேயே அது
கண்ணீராகி விடாது !
கடலாகக் கூட இருக்கலாம்
எவர் கண்டது ?
கீழே பார்த்து
"பள்ளம் .... பள்ளம் " என்று
பதறுகிறாய் !
முட்டாளே !
கோபுரத்தின் மீது நிற்பதை
உணரவில்லையா நீ ?
தங்கமாகவே இருந்தாலும்
உரசிப்பார்க்காமல்
தரம் தெரியாது !
வெளியிலேயே இருந்தாலும்
விழித்துப் பார்க்காமல்
விடியல் தெரியாது !
நதியே உனது
சொந்தமென்றாலும் ,
மீன்களைப் பிடிக்க
வலையை வீசித்தான் ஆகவேண்டும் !
முத்தாகவே இருந்தாலும்
சிப்பிக்குள் சிறை இருந்தே
தீரவேண்டும் !
கறித்துண்டுகளை ,
பத்திரப்படுத்து !
வருங்காலத்தில் அவை
வைரமாக மாறலாம் !
என்னது ?
உறக்கத்திற்காக
போதையை நாடுகிறாயா ?
உடல் நோக உழைத்துப்பார் !
பூப்பாதை போட்டு
உறக்கம் உன்னை வரவேற்கும் !
வெற்றித்தாய்
உனக்காகக் காத்திருக்கிறாள் !
சிரத்தை மட்டும் சற்றே தாழ்த்து !
அவள் உனக்கு
மகுடம் சூட்டி மகிழ்ந்து போவாள் !!!
arumyaga erunthathu .....
ReplyDelete