குறிப்பு : தமிழும் , தமிழ் கவிஞர்களும் என்னை மன்னித்து விடுங்கள்
கவிதை எழுதுவது எப்படி ?
அது ஒன்னும் பெரிய
பிரமாதம் கிடையாது !
"௮ " வுக்கு " ௮ " போடு !
" க " வுக்கு " க " போடு !
" ஒ " வுக்கு " ஒ " போட்டா
ஓஹோன்னு இருக்கும் !
அது மாதிரியே
மைக்கு மை !
பைக்கு பை !
என்ன புரியலையா ?
அன்பேன்னு ஆரம்பிக்கறியா
அடுத்ததா ஆட்டுக்குட்டியேன்னு
அடிச்சுவிடு !
அம்மான்னு தொடங்கினா
சும்மான்னு முடி !
மகிழ்ச்சின்னா
நெகிழ்ச்சி , முகிழ்ச்சி .......
இடையில இகழ்ச்சியக்கூட
இழுத்து வுட்டுக்கலாம் !
"வாடா மச்சி " க்கு
இருக்கவே இருக்கு
"வாழக்கா பச்சி " !
காதல்ன்னா ,
கனவு , கற்பனை ,
கன்றாவி , கசுமாலம் ........
கடைசியா
மோதலையும் , சாதலையும்
மறந்துடாத மவனே !
பொம்பளையப் பாடுறியா
மரஞ்செடி கொடியில ஆரம்பிச்சு
மாங்கா , தேங்கா வரைக்கும் சும்மா
தோரணம் கட்டித் தொங்கவிடலாம் !
நடு நடுவுல மானே , தேனே
பொன்மானே எல்லாம் போட்டுக்கணும் !
ஊருக்கு உபதேசம் பண்ணறியா
வாலிபான்னு ஆரம்பிச்சா
வகை வகையா
வரிஞ்சு தள்ளலாம் !
உதாரணத்துக்கு ஒன்னு !
" வாலிபா கேள் !
சிப்பிக்குள் முத்து - அது
சிறைப்பட்ட சொத்து !
ஈரஞ்சு பத்து - நீ
வெற்றியோட வித்து ! "
யாருகிட்ட !
ஒரு வரியில சொல்லறத
ஒம்போது வரியில சொன்னா
அதுதாண்டா கவித !
இப்ப
" எனக்கு ரெண்டு நாளா பின்னாடி புடுங்கிகிச்சு " ன்னா
அது செய்தி !
அதையே
" எனக்கு
ரெண்டு நாளா
பின்னாடி
புடுங்கிகிச்சு ! " ன்னா
அது கவிதை !
அப்பப்ப ஆச்சர்யக்குறி
போட்டுக்க
அசத்தலா தெரியும் !
சினிமாவுலயும்
சின்னதா கவனம் வச்சுக்க
பழைய பாட்டோ
புதிய பாட்டோ
உருவி உள்ளவிட்டா
எவனும் ஏன்னு கேக்க மாட்டான் !
ஒன்னு தெரியுமா ?
தமிழ் ரொம்ப
நல்லமொழி !
எவ்வளவு அடிச்சாலும் தாங்கும் !
சரக்கு தீந்துடுச்சுன்னு
நெனைக்கிறப்ப எல்லாம்
சரக்கடி !
எங்கே
பட்டயப் போட்டுக்கிட்டு சும்மா
பட்டயக் கெளப்பு பாக்கலாம் !!!
en kanna thiranthitinga thalaiva ..... enimel nanum oru kavingyan than
ReplyDelete