Skip to main content
குறிப்பு : தமிழும் , தமிழ் கவிஞர்களும் என்னை மன்னித்து விடுங்கள்



கவிதை எழுதுவது எப்படி ?


அது ஒன்னும் பெரிய

பிரமாதம் கிடையாது !


" " வுக்கு " " போடு !

" " வுக்கு " " போடு !

" " வுக்கு " " போட்டா

ஓஹோன்னு இருக்கும் !


அது மாதிரியே

மைக்கு மை !

பைக்கு பை !


என்ன புரியலையா ?


அன்பேன்னு ஆரம்பிக்கறியா

அடுத்ததா ஆட்டுக்குட்டியேன்னு

அடிச்சுவிடு !


அம்மான்னு தொடங்கினா

சும்மான்னு முடி !


மகிழ்ச்சின்னா

நெகிழ்ச்சி , முகிழ்ச்சி .......

இடையில இகழ்ச்சியக்கூட

இழுத்து வுட்டுக்கலாம் !


"வாடா மச்சி " க்கு

இருக்கவே இருக்கு

"வாழக்கா பச்சி " !


காதல்ன்னா ,

கனவு , கற்பனை ,

கன்றாவி , கசுமாலம் ........

கடைசியா

மோதலையும் , சாதலையும்

மறந்துடாத மவனே !


பொம்பளையப் பாடுறியா

மரஞ்செடி கொடியில ஆரம்பிச்சு

மாங்கா , தேங்கா வரைக்கும் சும்மா

தோரணம் கட்டித் தொங்கவிடலாம் !

நடு நடுவுல மானே , தேனே

பொன்மானே எல்லாம் போட்டுக்கணும் !


ஊருக்கு உபதேசம் பண்ணறியா

வாலிபான்னு ஆரம்பிச்சா

வகை வகையா

வரிஞ்சு தள்ளலாம் !


உதாரணத்துக்கு ஒன்னு !

" வாலிபா கேள் !

சிப்பிக்குள் முத்து - அது

சிறைப்பட்ட சொத்து !

ஈரஞ்சு பத்து - நீ

வெற்றியோட வித்து ! "


யாருகிட்ட !


ஒரு வரியில சொல்லறத

ஒம்போது வரியில சொன்னா

அதுதாண்டா கவித !


இப்ப

" எனக்கு ரெண்டு நாளா பின்னாடி புடுங்கிகிச்சு " ன்னா

அது செய்தி !

அதையே

" எனக்கு

ரெண்டு நாளா

பின்னாடி

புடுங்கிகிச்சு ! " ன்னா

அது கவிதை !


அப்பப்ப ஆச்சர்யக்குறி

போட்டுக்க

அசத்தலா தெரியும் !


சினிமாவுலயும்

சின்னதா கவனம் வச்சுக்க

பழைய பாட்டோ

புதிய பாட்டோ

உருவி உள்ளவிட்டா

எவனும் ஏன்னு கேக்க மாட்டான் !


ஒன்னு தெரியுமா ?

தமிழ் ரொம்ப

நல்லமொழி !

எவ்வளவு அடிச்சாலும் தாங்கும் !


சரக்கு தீந்துடுச்சுன்னு

நெனைக்கிறப்ப எல்லாம்

சரக்கடி !


எங்கே

பட்டயப் போட்டுக்கிட்டு சும்மா

பட்டயக் கெளப்பு பாக்கலாம் !!!





Comments

  1. en kanna thiranthitinga thalaiva ..... enimel nanum oru kavingyan than

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்குபோட்டுப் பிரிப்பதுதான் ! ஏதோவொன்றை எண்ணைச்சட்டியில் பொரிப்பதுதான் ! நரகாசுரன் நமக்குள்ளே மரிப்பதுதான் ! ஒரு சங்கல்பத்தை நெஞ்சுக்குள் வரிப்பதுதான் ! வண்ண வேடிக்கையை வான் வெளியில் விர