Skip to main content
மன்னிக்காதே தாயே



இந்த நூற்றாண்டின்

இறுதி விவசாயி நான் !


மகன் மென்பொருள் மேதை !

மகள் அமெரிக்கப் பேதை !


அடுத்த தை வந்தால் ,

அகவை அறுபது !

பத்தினி போய்ச்சேர்ந்து

ஆகிவிட்டன ஆண்டுகள் இருபது !


இப்போதெல்லாம் நான் ,

பேச முடிந்த ஊமை !

கேட்க முடிந்த செவிடன் !

பார்வையைப்பற்றிக் கேட்கிறீர்களா ?

கண்களைத் தான்

தொலைக்காட்சிப்பெட்டிக்குத்

தாரை வார்த்துத் தந்துவிட்டேனே !


"ஒரு காலத்தில் ,

யானை கட்டிப் போரடித்தோம் !

கழனி கழனியாய்

உழவு செய்தோம் !

களம் களமாய்

நெல் குவித்தோம் !

இப்போதைய சாகுபடி என்ன ? "

முந்தாநாள் கனவில்

முப்பாட்டன் வந்து கேட்டான் !


விதை விதைத்தவன்

வீழ்ந்து விட்ட ,

நாற்று நட்டவன்

நாணிச் செத்த ,

நேற்றைய நிலவரத்தை

கடைசி வரை மறைத்துவிட்டேன் !


இப்போதெல்லாம்

அரிசிக்கு பதில் அசைவம் !

அதிகாலையில் ஆட்டிறைச்சி !

மதியத்தில் மாட்டிறைச்சி !

இராப்பொழுதில் இறால் , மீன் , நண்டு இத்யாதிகள் .....


மாட்டிறைச்சிக்கு மாற்றாய் ,

மனித இறைச்சி வருவதற்குள் ,

மாண்டு விட வேண்டும் !


வெளியே என் அன்னை

குற்றுயிரும் குலையுயிருமாய்க் கிடக்கிறாள் !

அவளைக்கூறு போட்டுக் கூவி ,

விற்கின்றன வியாபார நாய்கள் !


ஒரு காலத்தில் ,

பச்சை பச்சையாய்ப் பூத்தவள் !

வண்ண வண்ணமாய் விளைந்தவள் !

கார்மேகப் போர்வைக்குள்

மழைத்தந்தையுடன்

உறவாடிக்களித்தவள் !


தன் உதிரத்தை உணவாக்கி

உலகுக்கெல்லாம் ஊட்டி விட்டவள் !

தென்றலாய்த் தாலாட்டி

தரணியையே தூங்கச் செய்தவள் !


தங்கம் தங்கமாய்த் தந்தவள் - இப்போது

அங்கம் அங்கமாய் அறுபட்டுக்கிடகிறாள் !


அவள் பாகங்களைப்

பங்கு போட்டு பணம் பண்ணும்

பிசினஸ் புண்ணியவான்கள்

பயங்கரமாய்ச் சிரிக்கிறார்கள் !


என் அன்னை என்ன செய்வாளோ ?

பாவம் ! புழம்பித் தள்ள அவளிடம்

புழுதியும் மீதி இல்லை !

கதறியழ கண்ணீரில் ஈரம் இல்லை !

வெளியே சென்றால் ,

காப்பாற்றச் சொல்லி

தறுவாளே என நான்

வீட்டுக்குள்ளேயே சிறை இருக்கிறேன் !


அன்னையே ,

தாயே ,

அம்மா ,

என்போன்ற

மானங்கெட்ட மகன்களை

முடிந்தவரை மன்னிக்காதே !!!











Comments

  1. Ji... wonderfull...
    vegetation of Green soon will perish...
    Something has to be done

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்குபோட்டுப் பிரிப்பதுதான் ! ஏதோவொன்றை எண்ணைச்சட்டியில் பொரிப்பதுதான் ! நரகாசுரன் நமக்குள்ளே மரிப்பதுதான் ! ஒரு சங்கல்பத்தை நெஞ்சுக்குள் வரிப்பதுதான் ! வண்ண வேடிக்கையை வான் வெளியில் விர