என்ன சொல்லிப் பாடுவது ?
உன்னை என்ன
சொல்லிப்பாடுவது அன்பே ?
வார்த்தைக்கு
வலைவிரித்தாலும் ,
வரிகளை
வளைத்துப்பிடித்தாலும் ,
கவிதையைக் கைதுசெய்ய
என்னால் முடியவில்லை !
எதுகைகள்
எட்டாக்கனி என்றால்
மோனைகள்
முயற்கொம்புகள் !
உனக்காக
மொழியோடு மோதியதில்
மூளை மட்டும் மழுங்கிவிட்டது !
காவியங்களிடம்
கடன் வாங்கினாலும் ,
இதிகாசத்திடம்
இரவல் கேட்டாலும் ,
கற்பனை என்னவோ
கானல் நீர் தான் !
நிலா ,
வானம் ,
வானவில் ,
மேகம் ,
மழை ,
மின்னல் ,
தூறல் ,
தென்றல் ,
ஓடை ,
அருவி,
நதி ,
கடல் ,
மலர்,
தேன்
அன்னம்,
மயில்,
குயில்,
வண்ணத்துப்பூச்சி,
தங்கம்,
முத்து,
பவளம்,
வைரம்,
வைடூரியம் ,
இதயம் ,
சுவாசம்,
உயிர்,
இறைவன் ,
சொர்க்கம் ,
பேரின்பம் ,
- என யாவற்றையும்
வம்புக்கிழுத்து
உன்னோடு உவமைப்படுத்தினாலும்
உவப்புக்கொள்ள ஏனோ மறுக்கிறாய் !
நீயே சொல்லேன் ,
உன்னை என்ன சொல்லிப்பாடுவது ?
Ji nalla irukku
ReplyDelete