Skip to main content
கள்ளம்




கயமை  என்ற
எரிபொருளால்
உடல்
நனைந்து விட்டது !
காமத் தீ,
அங்கே எரிகிறது !
குளிர்காய்வதற்கு முன்,
கொஞ்சம் யோசிக்கலாமே !

நெறி கொண்டு
பயணித்தால்தான்
அது நதி !
நெறி பிறழ்ந்து
பயணித்தால்,
அது வெள்ளம் !

உறக்கம்
கண்ணில்
இருக்கும் வரை
இருட்டு
சுகமானதுதான் !

ஏதோ ஒரு மனதை
வெட்டிக்
கூறு போட்டுத்தான்,
மாமிசம்
உண்ண வேண்டுமா ?

பள்ளத்தில் விழும்
அனைவருக்கும்,
கிளைகள்
கிடைத்துவிடுவதில்லை !

காமம் என்பது
புண் !
மருந்திடலாமா ?
சொறியலாமா ?
முடிவு நம்மிடம் !

எந்த ஒரு
தப்புக்கும்
ஒருநொடி அவகாசம்,
குறைந்தபட்சம்
இருக்கிறது !

உள்ளத்தில்
பள்ளத்தைத் தோண்டி - அதில்
கள்ளத்தைப்
புதைத்து வைத்தாலும்,
எவனும், எவளும்
தப்ப முடியாது !
சூனியத்தின் வேர்கள்
என்றாவது
கழுத்தை
நெரிக்கத்தான் நெரிக்கும் !

மனதில் கள்ளத்தனம்
எட்டிப் பார்க்கும்
போதெல்லாம்,
சின்னச் சின்ன
தண்டனைகள்
உடனே
கிடைக்கப் பெறுபவர்கள்
பாக்கியசாலிகள் !

' ஒரே இணை ' என்ற
அமைப்பு தரும்
சலிப்பில் தான்
கள்ளத்தனம்
பிறக்கிறது
என்பவர்களுக்காக.................

வெறும்
பசியைத்
தணித்துக் கொள்வது
மட்டுமல்ல
தாம்பத்யம் !
அது,
ஒருவருக்காக
மற்றொருவர்
சுவாசிப்பது !
சுவாசம், 
சலிக்குமா என்ன ?

Comments

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்குபோட்டுப் பிரிப்பதுதான் ! ஏதோவொன்றை எண்ணைச்சட்டியில் பொரிப்பதுதான் ! நரகாசுரன் நமக்குள்ளே மரிப்பதுதான் ! ஒரு சங்கல்பத்தை நெஞ்சுக்குள் வரிப்பதுதான் ! வண்ண வேடிக்கையை வான் வெளியில் விர