Skip to main content
விலை





அவளொரு
தாசி !
பாவ ஆற்றில்
இச்சை மீன்கள்
தின்னும்
பாசி !
ஆண்கள்
மட்டுந்தான்
அவளுக்கு
ராசி !

அவள் நடையில்
எப்போதுமிருக்கும் - ஒரு
பீடு !
இன்பம் தருவதில்
வானுலக ரம்பை
அவளுக்கு,
ஈடு !
ஒதுக்குப்புறமானது
அவள்,
வீடு !

அவள் மேனி,
ஒரு சிலையை
நிகர்க்கும் !
எப்படிப்பட்ட
பிரம்மச்சர்யத்தையும்
அவள் பார்வை
தகர்க்கும் !

எப்படிப்பார்த்தாலும்
அவள்,
அழகி !
போனால்
திரும்பிவரலாம்
இன்பத்தை
அவளிடம்
பழகி !

அவளிடம்,
துன்பம் நடுங்கும்
பருந்தைக்கண்ட
அரவு போல !
கவலை மறையும்
பகலவன் உதித்த
இரவு போல !
அவளிடம் சென்றால்,
அந்நாள் ஆகும்
நம்
இன்பக்கணக்கில் - ஒரு
வரவு போல !

அன்று.....................

அவள்,
குளித்து விட்டு
செயற்கையாக
வேர்த்திருந்தாள் !
மயக்கும் வித்தைகளை
மனதோடு
சேர்த்திருந்தாள் !
திறந்த வாசலில்
யாரையோ - எதிர்
பார்த்திருந்தாள் !

அவன்
வந்தான் !

அவன்,
தோற்றத்தில்
முப்பதை
முடித்திருந்தான் !
சொல்ல முடியாத
சோகத்தை
முகம் முழுக்க
வடித்திருந்தான் !

அவனைக்கண்டு
அவள்,
சிரித்தாள் !
பார்வையால்
அவனை
உரித்தாள் !
பெருமூச்சால்,
அந்த அறையையே
எரித்தாள் !

அவன்,
சட்டென எழுந்தான்
கட்டிலிலிருந்து !
எடுத்து விட்டான்
கவலைக் குழந்தையை
தன் மனமெனும்
தொட்டிலிலிருந்து !

அவனுக்கு,
இணையவில்லையாம்
இருமனம் !
ஆகவில்லையாம்
திருமணம் !

ஒவ்வொன்றாய்
முடித்தானாம்
கடமையை !
முடித்து விட்டு
உணர்ந்தானாம்
வாலிபம் தொலைத்த
மடமையை !

அவன்,
நாடி வரவில்லையாம்
அவளிடம்
சுகத்தை !
தடவ வேண்டுமாம்
அன்பு வார்த்தைகளால்
அவன்,
அகத்தை !
தொடக்கூட
மாட்டானாம்
அவன்,
அவள்,
நகத்தை !

அவள்,
அமைதியாக
அவனை
ஏறிட்டாள் !
பிறகு,
பின்வரும்
வார்த்தைகளால்
அவனை இரண்டாகக்
கூறிட்டாள் !

" ஐயா,.
ஒட்டிக்கொள்கிறேன்
உங்களிடம்
அட்டை போல !
அணியலாம்
நீங்கள் என்னை
சட்டை போல !
கிடக்கிறேன்
இரவெல்லாம் - மர
கட்டை போல !

உடம்புக்கு
மட்டுந்தான்
இங்கே,
விலை !
உங்கட்கு
உகந்தல்ல
என்,
நிலை !
இன்ப விருந்தென்றால்,
இதோ இருக்கிறது
இலை !

அனுதினமும்
உடம்பால்
மட்டுந்தான்
எனக்கு
சாவு !
மனதையும்
கொடுக்க மாட்டேன்
மற்றவனுக்குக்
காவு !
தர முடியாது,
உங்கள்
மனப்பசிக்கு
ஆறுதல்தோசை வார்க்க
மாவு !

கற்கவில்லை
நான் இன்னும்
மனதை விற்கும்
கலையை !
எதிர்பார்க்க வேண்டாம்
தெப்பக்குளத்தில்
கடல்,
அலையை !

மனது
மட்டுமாவது
என்னிடம்
எஞ்சட்டும் !
நரகத்தின் கதவுகள்,
இதற்காகவாவது
என்னைக்கண்டு - சற்று
அஞ்சட்டும் !

நீங்கள்
போகலாம்  !  "

இப்படியாக,
இறுதிவரை
அவள்,
அவனுக்கு
இணங்கவில்லை !
அதன் பிறகு
அவனை
அவள்,
வணங்கவில்லை !

அவனுக்கு
அந்தப்பணம்
திருப்பித்தரப்பட்டது !

அவனுக்கு
அந்தக்கதவு
சாத்தப்பட்டது !


Comments

  1. விலையில்லை இதற்கு
    வெகுமதிதான் உங்களுக்கு..

    நல்ல கவிக்காட்சிப் பதிவு!

    வரிகளை ரசித்தேன்... வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. கவிதையின் காட்சிப்பதிவை ரசித்துக் கருத்திட்ட தங்களுக்கு நன்றி இளமதி

      Delete
  2. சொல்லாடல்கள் எல்லாமே மிகவும் சுவையாக உள்ளன. பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. இக்கவிதையின் சொல்லாடல்களை ரசித்த தங்களுக்கு மிக்க நன்றி ஐயா !

      Delete
  3. அருமையான கவிதை! வாலி போல எழுத முயற்சிப்பது புலனாகிறது! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. ஆம் நண்பரே ! தமிழ்நாடு தன்னை இழந்த வலி தெரியாமல் பார்த்துக் கொள்ளும்படி என் குருவான வாலி என்னிடம் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார் ! அதனால் தான் ! கவிதைகளில் பிழையிருப்பின் பொறுத்தருளவும் !

      Delete

Post a Comment

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்குபோட்டுப் பிரிப்பதுதான் ! ஏதோவொன்றை எண்ணைச்சட்டியில் பொரிப்பதுதான் ! நரகாசுரன் நமக்குள்ளே மரிப்பதுதான் ! ஒரு சங்கல்பத்தை நெஞ்சுக்குள் வரிப்பதுதான் ! வண்ண வேடிக்கையை வான் வெளியில் விர