Skip to main content
பயணம்

குறிப்பு : இந்தக் கவிதை பேருந்தைப் பற்றியதல்ல




ஊருக்குப் போவதில்
உறுதியாக இருந்தால்
ஒரு பேருந்தை விட்டாலும்
இன்னொரு பேருந்தைப்
பிடித்தாவது
நாம்
ஊருக்குப் போய்விடுவோம் !

பேருந்து
உரிய நேரத்திற்கு
வரவில்லை !
நம்மைப் போலவே
இன்னும் சிலர் காத்திருக்கிறார்கள்
எனும் போது
தாமதித்தாலும்
வரவேண்டிய பேருந்து
வந்தே தீரும் !

பேருந்து
கல்லறை நோக்கிப்
போகிறது எனில்
பயணம் சுகமாயிருந்து
யாதொரு பயனும் இல்லை !
பேருந்து,
பூந்தோட்டத்தை நோக்கிப்
போகிறது எனில்
பயணம் கடினமாயிருப்பதில்
பிழையொன்றும் இல்லை !

ஐம்பது பேர்
உடன் பயணித்தும்
பக்கத்து இருக்கைக்காரனுடன்
பேசாதவன்
தனியாகத் தான்
பயணிக்கிறான் !

எங்கும் நிற்காத
பாயிண்ட் டு பாயிண்ட்
பேருந்தில் ஏறினாலும்
அதுவும் ஏதாவது
ஒரு இடத்தில்
நிற்கவே செய்யும்  !

ஒரே இடத்தில் ஏறி
ஒரே இடத்தில்
இறங்கினாலும்
பயண நோக்கம்
ஒருவருக்கொருவர்
வேறுபடத்தான் செய்கிறது !

தொலைவு
அதிகமாக இருந்தால்
பயணச்சீட்டின் விலையும்
அதிகமாகத் தான் இருக்கும் !

நிறுத்தம் வருவது
தெரியாமல்
தூங்கிக் கொண்டிருப்பவர்களை
விழித்துக் கொண்டிருப்பவர்கள்
சற்று
எழுப்பி விடலாமே !

நடக்கக்கூடிய அளவுதான்
கடக்கக்கூடிய தொலைவு
என்றால்
நடந்தே போய்விடலாமே !
பேருந்திற்காகக்
காத்திருபானேன் ?

Comments

  1. //ஐம்பது பேர்
    உடன் பயணித்தும்
    பக்கத்து இருக்கைக்காரனுடன்
    பேசாதவன்
    தனியாகத் தான்
    பயணிக்கிறான் !//

    அருமையாகச் சொன்னீர்கள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. பயணம் குறித்த தங்கள் கருத்து சரிதான்...பதிவுகள் எழுதி வெகு நாளாகி விட்டதோ...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
அபார்ட்மெண்ட் சிறுவனே ................... அடே ! சிறுவா ! உன்னைத்தான் ! இங்கே பார் ! கணினி விளையாட்டை கணநேரம் ஒத்திவை ! கேள் ! விரிந்திருகிறது வீதி !  அதில், விளையாடுவது தானே நீதி ? கட்டம் கட்டு, குறுக்கே கோடிடு ! ஆடலாம் சடுகுடு ! கைக்குட்டை எடு , கண்ணைக் கட்டு ! ஆடு கண்ணாமூச்சி ! ஓடித்தொடுதல் ஆடியதுண்டா ? ஒற்றைக் காலிலும் ஓடித் தொடலாம் ! அதற்குப் பெயர்தான் நொண்டி ! ஆரோக்கியக் காசுகள் சேர்ப்பதில், அதுவொரு அற்புத உண்டி ! அப்புறம் இன்னோர் விளையாட்டு ! ஒருகால் மடக்கிக் குந்து ! தேவையில்லை பந்து ! குச்சியால் குச்சியை உந்து ! எம்பியெழுவதை, ' கில்லித்தட்டு '   -  என்றே நீ சொல்லித்தட்டு !  நிறம் கூறித் துரத்தும் ஆட்டம் பரிச்சையமுண்டா ? திருடன் போலீஸ் தெரியுமா ? நூல் பிடித்தோடி பட்டம் விட்டதில்லையா ? உத்திரத்தில் கயிறு கட்டி தூரி.............? என்னடா உனக்கு எதுவுமே தெரியவில்லை ! மேற்கண்ட விளையாட்டில் வலிமையாகும் உன் தசை ! வெறும் கணினியைத் தட்டுவதில் விரலுக்கு மட்டுமே விசை ! யாருமில்லையா வீட்டில் ? ஓ ! இரவுப்பணி முடித்து இன்னும் உறங்கும் தந்தை ! அழகுநிலையம் சென்று...
கலி , கலாச்சாரம், கற்பு கலி இங்கே முற்றிவிட்டது ! கலாச்சார நதி வற்றிவிட்டது ! நாகரீகத் தீ பற்றிவிட்டது ! ஆபாசப் பாம்பு சுற்றிவிட்டது ! எல்லாம் இங்கே கெட்டு விட்டது ! பண்பாட்டு மரம் பட்டு விட்டது ! எல்லாருமே காமத்தில் கொழுக்கிறார்கள் ! பெரும்பாலோர் பிஞ்சிலேயே பழுக்கிறார்கள் ! சல்லடை போட்டுத் தேடினாலும் கற்புக்கரசர்களை - இங்கு காண முடியாது ! ஸ்ரீ ராமனே வந்தாலும் நூறு சதம் கற்பை - இனி பேண முடியாது ! ஒருத்திக்கு ஒருவன் என்றில்லாத நிலை வரப்போகிறது ! கண்காட்சிக் கூடத்தில் கற்புக்கும் ஒரு சிலை வரப்போகிறது ! கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு சிதையப் போகிறது ! உறவெனும் கோவில் உருத்தெரியாமல் புதையப் போய்கிறது ! அதென்ன அச்சு பிசகாமல் அழகானவர்களுக்கே காதல் வருகிறது ! சொல்லி வைத்தாற்போல சொடக்குப் போடுவதற்குள் மோதல் வருகிறது ! எல்லா காதலர்களும் காது சூடேற பேசுகிறார்கள் காமத்தை ! மோகத்தீயில் வேக வைக்கிறார்கள் அர்த்தராத்திரி சாமத்தை ! அலைபேசியில் அழைக்கும் போது மாறிவிடுகிறது ...