பார்வையற்றவன்
அவன் ஒரு
குருடன் !
அந்தப்
பேருந்து நிறுத்தத்திற்கு
எங்கிருந்தோ
அவன்
வந்து சேர்ந்தான் !
என்னைத் தவிர
இன்னும் சிலர்
அங்கே
நின்றிருந்தார்கள் !
நான்
பாக்கெட்டைத் தொட்டு
சில்லறை இருப்பதை
உறுதி செய்துகொண்டேன் !
யாரிடமும்
அவன்
காசு கேட்காதது
கொஞ்சம்
உறுத்தலாக இருந்தது !
கையிலிருந்த
குச்சியால்
தட்டித் தட்டி
தனக்கான
இடத்தைத்
தேர்ந்தெடுத்து
நின்றுகொண்டான் அவன் !
என்னைப் போலவே
இன்னும் சிலர்
அவனைப்
பரிதாபமாகப்
பார்த்தனர் !
அவன்
எங்கு போகவேண்டும் ?
அவனுக்கான
பேருந்து எது ?
யாரும்
அவனிடம்
கேட்கவில்லை !
அவனும்
யாரிடமும்
கேட்கவில்லை !
நிச்சயம்
இந்தஇடத்திற்கு
அவன்
புதியவன் தான் !
எந்தநம்பிக்கையில்
இங்கே வந்து நிற்கிறான் ?
யாராவது
அவனுக்கு
உதவுங்களேன் !
இவனும்
வாயைத் திறந்து
கேட்கிறானா பார் !
எனக்கும்
அவனை அணுக
கொஞ்சம்
தயக்கமாகஇருந்தது !
எதற்கு
வீண் வம்பு ?
பவித்ராவுக்கு
இதெல்லாம்
சுத்தமாகப்
பிடிக்காது !
மறக்காமல்
தெருமுக்குக் கடையில்
குழந்தைக்கு
பேபி பவுடர்
வாங்கவேண்டும் !
எனக்கான
பேருந்து வந்ததும்
பெருமூச்சு விட்டேன் !
ஜன்னலோரத்தில்
அமர்ந்து
மீண்டும் அவனைப்
பார்த்தேன் !
தனக்கான
பேருந்திற்காக
அவன்
காத்திருந்தான் !
எப்படிக்
கண்டு பிடிப்பான் ?
நடத்துனர்
தெரிந்தவரோ ?
இவனுக்கு
வெளியில்
என்னவேலை ?
வாயைத் திறந்து
யாரிடமாவது
கேட்டால் தானே !
ஒருவேளை
அவன்
கூடவே
ஊமையாகவும்
செவிடாகவும்
இருந்தால் ...............
சுருக்
என்றது !
என்
பேருந்து
புறப்பட்டு விட்டது !
எட்டிப் பார்த்தேன் !
எவனோ
ஒரு இளைஞன்
அவனை
அணுகிக் கொண்டிருந்தான் !
மனசுக்குள்
ஒரு
அசட்டுத் திருப்தி !
அவன் ஒரு
குருடன் !
அந்தப்
பேருந்து நிறுத்தத்திற்கு
எங்கிருந்தோ
அவன்
வந்து சேர்ந்தான் !
என்னைத் தவிர
இன்னும் சிலர்
அங்கே
நின்றிருந்தார்கள் !
நான்
பாக்கெட்டைத் தொட்டு
சில்லறை இருப்பதை
உறுதி செய்துகொண்டேன் !
யாரிடமும்
அவன்
காசு கேட்காதது
கொஞ்சம்
உறுத்தலாக இருந்தது !
கையிலிருந்த
குச்சியால்
தட்டித் தட்டி
தனக்கான
இடத்தைத்
தேர்ந்தெடுத்து
நின்றுகொண்டான் அவன் !
என்னைப் போலவே
இன்னும் சிலர்
அவனைப்
பரிதாபமாகப்
பார்த்தனர் !
அவன்
எங்கு போகவேண்டும் ?
அவனுக்கான
பேருந்து எது ?
யாரும்
அவனிடம்
கேட்கவில்லை !
அவனும்
யாரிடமும்
கேட்கவில்லை !
நிச்சயம்
இந்தஇடத்திற்கு
அவன்
புதியவன் தான் !
எந்தநம்பிக்கையில்
இங்கே வந்து நிற்கிறான் ?
யாராவது
அவனுக்கு
உதவுங்களேன் !
இவனும்
வாயைத் திறந்து
கேட்கிறானா பார் !
எனக்கும்
அவனை அணுக
கொஞ்சம்
தயக்கமாகஇருந்தது !
எதற்கு
வீண் வம்பு ?
பவித்ராவுக்கு
இதெல்லாம்
சுத்தமாகப்
பிடிக்காது !
மறக்காமல்
தெருமுக்குக் கடையில்
குழந்தைக்கு
பேபி பவுடர்
வாங்கவேண்டும் !
எனக்கான
பேருந்து வந்ததும்
பெருமூச்சு விட்டேன் !
ஜன்னலோரத்தில்
அமர்ந்து
மீண்டும் அவனைப்
பார்த்தேன் !
தனக்கான
பேருந்திற்காக
அவன்
காத்திருந்தான் !
எப்படிக்
கண்டு பிடிப்பான் ?
நடத்துனர்
தெரிந்தவரோ ?
இவனுக்கு
வெளியில்
என்னவேலை ?
வாயைத் திறந்து
யாரிடமாவது
கேட்டால் தானே !
ஒருவேளை
அவன்
கூடவே
ஊமையாகவும்
செவிடாகவும்
இருந்தால் ...............
சுருக்
என்றது !
என்
பேருந்து
புறப்பட்டு விட்டது !
எட்டிப் பார்த்தேன் !
எவனோ
ஒரு இளைஞன்
அவனை
அணுகிக் கொண்டிருந்தான் !
மனசுக்குள்
ஒரு
அசட்டுத் திருப்தி !
மிகவும் அழகான யதார்த்தமான படைப்பு. நம்மில் பலரும் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் கண்ணிருந்து குருடர்கள் போலவே தான் செயல்பட வேண்டியுள்ளது.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றிகள். பாராட்டுக்கள்.
கவிதையின் யதார்த்தத்தை உணர்ந்த தங்களுக்கு நன்றிகள் ஐயா !
Deleteஉண்மை சுடும்...
ReplyDeleteநன்றி தனபாலன் !
Delete