Skip to main content
நீர்
தெளிக்கப்போகிறதாம்
' வானிலை ' !
அறிவித்தது
வானிலை !

==========================
.
அந்தச்
சாலையைக் கடக்க
ஒரு கூட்டம்
காத்திருக்கிறது
ஒருவனின்
முதலடிக்காக !

==========================

யாரோ வரும்போது
மின்சாரம் வந்தால்
வெளிச்சமாக
அவர்கள்
வந்திருக்கிறார்கள் !
யாரோ வரும்போது
மின்சாரம் போனால்
வெளிச்சத்திற்கு பதிலாக
அவர்கள்
வந்திருக்கிறார்கள் !

==========================

பண்டிகை
விடுமுறையில்
ஊருக்குப்
போய்விட்டு வந்த
அந்த
தேநீர் ஆற்றுபவனை
ஆற்றிக்கொண்டிருக்கிறது
தேநீர் !

==========================

ஏதோ ஒருவிதத்தில்
அழகானவர்கள்
மட்டுமே
காதலிக்கிறார்கள் !
அப்படியானால்
காதல் என்பது
என்ன ?

==========================

இங்கே
காமம் என்ற
வார்த்தையை விட
கற்பு என்ற
வார்த்தை
இன்னும்
கவர்ச்சியானது !

==========================

வீடுகளில் .........
அது
அடுப்பைப்
பற்ற வைக்கிறது !
இது
அடிவயிற்றைப்
பற்றவைக்கிறது !
அது
தீப்பெட்டி !
இது
காதல் !
அவ்வளவுதான் !

==========================

பறித்தவனுக்கு
பறித்தது மட்டும்
சொந்தம் !
பார்த்து ரசிப்பவனுக்கு
பூந்தோட்டமே
சொந்தம் !

==========================

பேசத் தெரிந்தவனுக்கு
மேடை
கிடைப்பதில்லை !
எழுதத் தெரிந்தவனுக்கு
பேனா
கிடைப்பதில்லை !
'நடிக்கத் தெரிந்தவனுக்கு'
இரண்டுமே
கிடைக்கிறது !

==========================

கணவர்களே ..........
உங்கள்
மனைவியின்
டைரியில்
சில
கவிதைகளும்
இருக்கலாம் !

==========================

எதிரில் வரும்
அந்த
அழகற்றவளுக்காக
அந்த
அழகானவளைத்
தவிர்த்து விடு
நண்பா !

==========================

அந்த
அறைநண்பன்
வாங்கி வந்த
பார்சலில்
சுமந்து வருகிறான்
கொஞ்சம்
அம்மாவையும் !

==========================

பகலில் நம்மைத்
திட்டு விட்டுப்
போய் விடுகிறது
அப்பா என்கிற
சூரியன் !
இரவில் வந்து
சமாதானப்படுத்துகிறது
அம்மா என்கிற
நிலவு !




- குருச்சந்திரன்








Comments

Popular posts from this blog

அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
அபார்ட்மெண்ட் சிறுவனே ................... அடே ! சிறுவா ! உன்னைத்தான் ! இங்கே பார் ! கணினி விளையாட்டை கணநேரம் ஒத்திவை ! கேள் ! விரிந்திருகிறது வீதி !  அதில், விளையாடுவது தானே நீதி ? கட்டம் கட்டு, குறுக்கே கோடிடு ! ஆடலாம் சடுகுடு ! கைக்குட்டை எடு , கண்ணைக் கட்டு ! ஆடு கண்ணாமூச்சி ! ஓடித்தொடுதல் ஆடியதுண்டா ? ஒற்றைக் காலிலும் ஓடித் தொடலாம் ! அதற்குப் பெயர்தான் நொண்டி ! ஆரோக்கியக் காசுகள் சேர்ப்பதில், அதுவொரு அற்புத உண்டி ! அப்புறம் இன்னோர் விளையாட்டு ! ஒருகால் மடக்கிக் குந்து ! தேவையில்லை பந்து ! குச்சியால் குச்சியை உந்து ! எம்பியெழுவதை, ' கில்லித்தட்டு '   -  என்றே நீ சொல்லித்தட்டு !  நிறம் கூறித் துரத்தும் ஆட்டம் பரிச்சையமுண்டா ? திருடன் போலீஸ் தெரியுமா ? நூல் பிடித்தோடி பட்டம் விட்டதில்லையா ? உத்திரத்தில் கயிறு கட்டி தூரி.............? என்னடா உனக்கு எதுவுமே தெரியவில்லை ! மேற்கண்ட விளையாட்டில் வலிமையாகும் உன் தசை ! வெறும் கணினியைத் தட்டுவதில் விரலுக்கு மட்டுமே விசை ! யாருமில்லையா வீட்டில் ? ஓ ! இரவுப்பணி முடித்து இன்னும் உறங்கும் தந்தை ! அழகுநிலையம் சென்று...
கலி , கலாச்சாரம், கற்பு கலி இங்கே முற்றிவிட்டது ! கலாச்சார நதி வற்றிவிட்டது ! நாகரீகத் தீ பற்றிவிட்டது ! ஆபாசப் பாம்பு சுற்றிவிட்டது ! எல்லாம் இங்கே கெட்டு விட்டது ! பண்பாட்டு மரம் பட்டு விட்டது ! எல்லாருமே காமத்தில் கொழுக்கிறார்கள் ! பெரும்பாலோர் பிஞ்சிலேயே பழுக்கிறார்கள் ! சல்லடை போட்டுத் தேடினாலும் கற்புக்கரசர்களை - இங்கு காண முடியாது ! ஸ்ரீ ராமனே வந்தாலும் நூறு சதம் கற்பை - இனி பேண முடியாது ! ஒருத்திக்கு ஒருவன் என்றில்லாத நிலை வரப்போகிறது ! கண்காட்சிக் கூடத்தில் கற்புக்கும் ஒரு சிலை வரப்போகிறது ! கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு சிதையப் போகிறது ! உறவெனும் கோவில் உருத்தெரியாமல் புதையப் போய்கிறது ! அதென்ன அச்சு பிசகாமல் அழகானவர்களுக்கே காதல் வருகிறது ! சொல்லி வைத்தாற்போல சொடக்குப் போடுவதற்குள் மோதல் வருகிறது ! எல்லா காதலர்களும் காது சூடேற பேசுகிறார்கள் காமத்தை ! மோகத்தீயில் வேக வைக்கிறார்கள் அர்த்தராத்திரி சாமத்தை ! அலைபேசியில் அழைக்கும் போது மாறிவிடுகிறது ...