நீர்
தெளிக்கப்போகிறதாம்
' வானிலை ' !
அறிவித்தது
வானிலை !
==========================
.
அந்தச்
சாலையைக் கடக்க
ஒரு கூட்டம்
காத்திருக்கிறது
ஒருவனின்
முதலடிக்காக !
==========================
யாரோ வரும்போது
மின்சாரம் வந்தால்
வெளிச்சமாக
அவர்கள்
வந்திருக்கிறார்கள் !
யாரோ வரும்போது
மின்சாரம் போனால்
வெளிச்சத்திற்கு பதிலாக
அவர்கள்
வந்திருக்கிறார்கள் !
==========================
பண்டிகை
விடுமுறையில்
ஊருக்குப்
போய்விட்டு வந்த
அந்த
தேநீர் ஆற்றுபவனை
ஆற்றிக்கொண்டிருக்கிறது
தேநீர் !
==========================
ஏதோ ஒருவிதத்தில்
அழகானவர்கள்
மட்டுமே
காதலிக்கிறார்கள் !
அப்படியானால்
காதல் என்பது
என்ன ?
==========================
இங்கே
காமம் என்ற
வார்த்தையை விட
கற்பு என்ற
வார்த்தை
இன்னும்
கவர்ச்சியானது !
==========================
வீடுகளில் .........
அது
அடுப்பைப்
பற்ற வைக்கிறது !
இது
அடிவயிற்றைப்
பற்றவைக்கிறது !
அது
தீப்பெட்டி !
இது
காதல் !
அவ்வளவுதான் !
==========================
பறித்தவனுக்கு
பறித்தது மட்டும்
சொந்தம் !
பார்த்து ரசிப்பவனுக்கு
பூந்தோட்டமே
சொந்தம் !
==========================
பேசத் தெரிந்தவனுக்கு
மேடை
கிடைப்பதில்லை !
எழுதத் தெரிந்தவனுக்கு
பேனா
கிடைப்பதில்லை !
'நடிக்கத் தெரிந்தவனுக்கு'
இரண்டுமே
கிடைக்கிறது !
==========================
கணவர்களே ..........
உங்கள்
மனைவியின்
டைரியில்
சில
கவிதைகளும்
இருக்கலாம் !
==========================
எதிரில் வரும்
அந்த
அழகற்றவளுக்காக
அந்த
அழகானவளைத்
தவிர்த்து விடு
நண்பா !
==========================
அந்த
அறைநண்பன்
வாங்கி வந்த
பார்சலில்
சுமந்து வருகிறான்
கொஞ்சம்
அம்மாவையும் !
==========================
பகலில் நம்மைத்
திட்டு விட்டுப்
போய் விடுகிறது
அப்பா என்கிற
சூரியன் !
இரவில் வந்து
சமாதானப்படுத்துகிறது
அம்மா என்கிற
நிலவு !
- குருச்சந்திரன்
தெளிக்கப்போகிறதாம்
' வானிலை ' !
அறிவித்தது
வானிலை !
==========================
.
அந்தச்
சாலையைக் கடக்க
ஒரு கூட்டம்
காத்திருக்கிறது
ஒருவனின்
முதலடிக்காக !
==========================
யாரோ வரும்போது
மின்சாரம் வந்தால்
வெளிச்சமாக
அவர்கள்
வந்திருக்கிறார்கள் !
யாரோ வரும்போது
மின்சாரம் போனால்
வெளிச்சத்திற்கு பதிலாக
அவர்கள்
வந்திருக்கிறார்கள் !
==========================
பண்டிகை
விடுமுறையில்
ஊருக்குப்
போய்விட்டு வந்த
அந்த
தேநீர் ஆற்றுபவனை
ஆற்றிக்கொண்டிருக்கிறது
தேநீர் !
==========================
ஏதோ ஒருவிதத்தில்
அழகானவர்கள்
மட்டுமே
காதலிக்கிறார்கள் !
அப்படியானால்
காதல் என்பது
என்ன ?
==========================
இங்கே
காமம் என்ற
வார்த்தையை விட
கற்பு என்ற
வார்த்தை
இன்னும்
கவர்ச்சியானது !
==========================
வீடுகளில் .........
அது
அடுப்பைப்
பற்ற வைக்கிறது !
இது
அடிவயிற்றைப்
பற்றவைக்கிறது !
அது
தீப்பெட்டி !
இது
காதல் !
அவ்வளவுதான் !
==========================
பறித்தவனுக்கு
பறித்தது மட்டும்
சொந்தம் !
பார்த்து ரசிப்பவனுக்கு
பூந்தோட்டமே
சொந்தம் !
==========================
பேசத் தெரிந்தவனுக்கு
மேடை
கிடைப்பதில்லை !
எழுதத் தெரிந்தவனுக்கு
பேனா
கிடைப்பதில்லை !
'நடிக்கத் தெரிந்தவனுக்கு'
இரண்டுமே
கிடைக்கிறது !
==========================
கணவர்களே ..........
உங்கள்
மனைவியின்
டைரியில்
சில
கவிதைகளும்
இருக்கலாம் !
==========================
எதிரில் வரும்
அந்த
அழகற்றவளுக்காக
அந்த
அழகானவளைத்
தவிர்த்து விடு
நண்பா !
==========================
அந்த
அறைநண்பன்
வாங்கி வந்த
பார்சலில்
சுமந்து வருகிறான்
கொஞ்சம்
அம்மாவையும் !
==========================
பகலில் நம்மைத்
திட்டு விட்டுப்
போய் விடுகிறது
அப்பா என்கிற
சூரியன் !
இரவில் வந்து
சமாதானப்படுத்துகிறது
அம்மா என்கிற
நிலவு !
- குருச்சந்திரன்
Comments
Post a Comment