Skip to main content
குப்பா ..............




குடித்து விட்டு
தெருவில் கிடக்கும்
குப்பா !
நினைவிருக்கிறதா
நீ
மூன்று பிள்ளைகளுக்கு
அப்பா !

அவிழ்ந்து
கிடக்கிறது உன்
வேட்டி !
இன்னுமா
எடுக்கிறாய்
உறக்கத்தைப்
பேட்டி ?

புலர்ந்து விட்டது
காலை !
நிரம்பி விட்டது
சாலை !
இன்னும் உனக்கு
புழுதியில்  என்ன
வேலை ?

குப்பா ..........
உன் தினப்படி
சங்கதியென்ன ?

உழைத்தே
உன் முதுகை நீ
ஓடிக்கிறாய் !
காசு கேட்கும்
மனைவியை
அடிக்கிறாய் !
மாலை வந்ததும்
குடிக்கிறாய் !
இப்படியே
ஒவ்வொரு நாளையும்
முடிக்கிறாய் !

குடி எனும்
கூர்வாளால்
உன் குடும்பத்தோரணம்
கிழிகிறது !
குடித்துக் குடித்தே
உன் உடம்பு கெட்டு
அழிகிறது !
உன் பொழுதெல்லாம்
இப்படியே நாளும்
கழிகிறது !

இன்னும் காயவில்லை
உன் வியர்வையின்
திவலை !
உனக்கென்ன
அப்படியொரு
கவலை ?
இடிக்கத்தான் வேண்டுமா
உரலில் இட்டு
அவலை ?

குப்பா ...........
நீ
கட்டியிருக்கிறாய்
ஒருத்திக்குத்
தாலி !
உன்
வாழ்வுப்பயிருக்கு
அதுதானே
வேலி !
இப்படியே குடித்தால்
வெகு விரைவில்
உன் ஆரோக்கியம்
காலி !
போதை தருவதில்
மனைவியைத் தவிர
மற்றதெல்லாம்
போலி !

குப்பா .........
உழைப்பைக்
காரணங்காட்டி
இங்கே நீ
குடித்தால் .....
ஓராயிரம்
காரணம் கூறி
உன் மனைவியும்
அங்கே குடிக்கலாம் !

குப்பா ....................
இனி உன் கால்கள்
தேர்ந்தெடுக்கட்டும்
வீடு செல்லும்
வீதியை !
இனி காட்டாதே
குடும்பத்திற்கு
பசி எனும்
பீதியை !
நாளும் கடைபிடி,
சம்பாதித்ததை
சம்சாரத்திடம் தரும்
நீதியை !
வாங்கிக் கொள்,,,
செலவழித்து
அவள் தரும்
மீதியை !
அப்புறம் அறிவாய்
வாழ்வில்
வசந்தம் வரும்
சேதியை !

குப்பா .........
ஆயிரம் பேர்
சொருகலாம்
அறிவுரை எனும்
கத்தியை !
நீ
நினைத்தாலொழிய
மாற்ற முடியாது
யாரும் உன்
புத்தியை !.

நீயாகத்தான்
திருந்த வேண்டும் !
தவறை நினைத்து
வருந்த வேண்டும் !

அதற்குள்
வந்து விடும்
முதுமை !
மலராது
உன் வாழ்வில்
புதுமை !

ஆனால் ...........

ஒரே
ஒரு வேண்டுகோள் !

தொடக்கக்கல்வி
வரையிலாவது
உன் பிள்ளைகள்
படிக்கட்டும் !

நாளை,
உன்னைப் போலவே
கூலி பெற்று
குடிக்கப் போகும்
உன் பிள்ளைகளில்
ஒருவனாவது
இதைப் படித்துத்
திருந்தட்டும் !!!!!

Comments

  1. அறிவுரைப்பாடல் அருமை தான். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. " அறிவுரைப்பாடலை " ரசித்து பின்னூட்டம் இட்டதற்கு நன்றி ஐயா !

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்குபோட்டுப் பிரிப்பதுதான் ! ஏதோவொன்றை எண்ணைச்சட்டியில் பொரிப்பதுதான் ! நரகாசுரன் நமக்குள்ளே மரிப்பதுதான் ! ஒரு சங்கல்பத்தை நெஞ்சுக்குள் வரிப்பதுதான் ! வண்ண வேடிக்கையை வான் வெளியில் விர