Skip to main content
குப்பா ..............




குடித்து விட்டு
தெருவில் கிடக்கும்
குப்பா !
நினைவிருக்கிறதா
நீ
மூன்று பிள்ளைகளுக்கு
அப்பா !

அவிழ்ந்து
கிடக்கிறது உன்
வேட்டி !
இன்னுமா
எடுக்கிறாய்
உறக்கத்தைப்
பேட்டி ?

புலர்ந்து விட்டது
காலை !
நிரம்பி விட்டது
சாலை !
இன்னும் உனக்கு
புழுதியில்  என்ன
வேலை ?

குப்பா ..........
உன் தினப்படி
சங்கதியென்ன ?

உழைத்தே
உன் முதுகை நீ
ஓடிக்கிறாய் !
காசு கேட்கும்
மனைவியை
அடிக்கிறாய் !
மாலை வந்ததும்
குடிக்கிறாய் !
இப்படியே
ஒவ்வொரு நாளையும்
முடிக்கிறாய் !

குடி எனும்
கூர்வாளால்
உன் குடும்பத்தோரணம்
கிழிகிறது !
குடித்துக் குடித்தே
உன் உடம்பு கெட்டு
அழிகிறது !
உன் பொழுதெல்லாம்
இப்படியே நாளும்
கழிகிறது !

இன்னும் காயவில்லை
உன் வியர்வையின்
திவலை !
உனக்கென்ன
அப்படியொரு
கவலை ?
இடிக்கத்தான் வேண்டுமா
உரலில் இட்டு
அவலை ?

குப்பா ...........
நீ
கட்டியிருக்கிறாய்
ஒருத்திக்குத்
தாலி !
உன்
வாழ்வுப்பயிருக்கு
அதுதானே
வேலி !
இப்படியே குடித்தால்
வெகு விரைவில்
உன் ஆரோக்கியம்
காலி !
போதை தருவதில்
மனைவியைத் தவிர
மற்றதெல்லாம்
போலி !

குப்பா .........
உழைப்பைக்
காரணங்காட்டி
இங்கே நீ
குடித்தால் .....
ஓராயிரம்
காரணம் கூறி
உன் மனைவியும்
அங்கே குடிக்கலாம் !

குப்பா ....................
இனி உன் கால்கள்
தேர்ந்தெடுக்கட்டும்
வீடு செல்லும்
வீதியை !
இனி காட்டாதே
குடும்பத்திற்கு
பசி எனும்
பீதியை !
நாளும் கடைபிடி,
சம்பாதித்ததை
சம்சாரத்திடம் தரும்
நீதியை !
வாங்கிக் கொள்,,,
செலவழித்து
அவள் தரும்
மீதியை !
அப்புறம் அறிவாய்
வாழ்வில்
வசந்தம் வரும்
சேதியை !

குப்பா .........
ஆயிரம் பேர்
சொருகலாம்
அறிவுரை எனும்
கத்தியை !
நீ
நினைத்தாலொழிய
மாற்ற முடியாது
யாரும் உன்
புத்தியை !.

நீயாகத்தான்
திருந்த வேண்டும் !
தவறை நினைத்து
வருந்த வேண்டும் !

அதற்குள்
வந்து விடும்
முதுமை !
மலராது
உன் வாழ்வில்
புதுமை !

ஆனால் ...........

ஒரே
ஒரு வேண்டுகோள் !

தொடக்கக்கல்வி
வரையிலாவது
உன் பிள்ளைகள்
படிக்கட்டும் !

நாளை,
உன்னைப் போலவே
கூலி பெற்று
குடிக்கப் போகும்
உன் பிள்ளைகளில்
ஒருவனாவது
இதைப் படித்துத்
திருந்தட்டும் !!!!!

Comments

  1. அறிவுரைப்பாடல் அருமை தான். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. " அறிவுரைப்பாடலை " ரசித்து பின்னூட்டம் இட்டதற்கு நன்றி ஐயா !

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
கலி , கலாச்சாரம், கற்பு கலி இங்கே முற்றிவிட்டது ! கலாச்சார நதி வற்றிவிட்டது ! நாகரீகத் தீ பற்றிவிட்டது ! ஆபாசப் பாம்பு சுற்றிவிட்டது ! எல்லாம் இங்கே கெட்டு விட்டது ! பண்பாட்டு மரம் பட்டு விட்டது ! எல்லாருமே காமத்தில் கொழுக்கிறார்கள் ! பெரும்பாலோர் பிஞ்சிலேயே பழுக்கிறார்கள் ! சல்லடை போட்டுத் தேடினாலும் கற்புக்கரசர்களை - இங்கு காண முடியாது ! ஸ்ரீ ராமனே வந்தாலும் நூறு சதம் கற்பை - இனி பேண முடியாது ! ஒருத்திக்கு ஒருவன் என்றில்லாத நிலை வரப்போகிறது ! கண்காட்சிக் கூடத்தில் கற்புக்கும் ஒரு சிலை வரப்போகிறது ! கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு சிதையப் போகிறது ! உறவெனும் கோவில் உருத்தெரியாமல் புதையப் போய்கிறது ! அதென்ன அச்சு பிசகாமல் அழகானவர்களுக்கே காதல் வருகிறது ! சொல்லி வைத்தாற்போல சொடக்குப் போடுவதற்குள் மோதல் வருகிறது ! எல்லா காதலர்களும் காது சூடேற பேசுகிறார்கள் காமத்தை ! மோகத்தீயில் வேக வைக்கிறார்கள் அர்த்தராத்திரி சாமத்தை ! அலைபேசியில் அழைக்கும் போது மாறிவிடுகிறது ...
அபார்ட்மெண்ட் சிறுவனே ................... அடே ! சிறுவா ! உன்னைத்தான் ! இங்கே பார் ! கணினி விளையாட்டை கணநேரம் ஒத்திவை ! கேள் ! விரிந்திருகிறது வீதி !  அதில், விளையாடுவது தானே நீதி ? கட்டம் கட்டு, குறுக்கே கோடிடு ! ஆடலாம் சடுகுடு ! கைக்குட்டை எடு , கண்ணைக் கட்டு ! ஆடு கண்ணாமூச்சி ! ஓடித்தொடுதல் ஆடியதுண்டா ? ஒற்றைக் காலிலும் ஓடித் தொடலாம் ! அதற்குப் பெயர்தான் நொண்டி ! ஆரோக்கியக் காசுகள் சேர்ப்பதில், அதுவொரு அற்புத உண்டி ! அப்புறம் இன்னோர் விளையாட்டு ! ஒருகால் மடக்கிக் குந்து ! தேவையில்லை பந்து ! குச்சியால் குச்சியை உந்து ! எம்பியெழுவதை, ' கில்லித்தட்டு '   -  என்றே நீ சொல்லித்தட்டு !  நிறம் கூறித் துரத்தும் ஆட்டம் பரிச்சையமுண்டா ? திருடன் போலீஸ் தெரியுமா ? நூல் பிடித்தோடி பட்டம் விட்டதில்லையா ? உத்திரத்தில் கயிறு கட்டி தூரி.............? என்னடா உனக்கு எதுவுமே தெரியவில்லை ! மேற்கண்ட விளையாட்டில் வலிமையாகும் உன் தசை ! வெறும் கணினியைத் தட்டுவதில் விரலுக்கு மட்டுமே விசை ! யாருமில்லையா வீட்டில் ? ஓ ! இரவுப்பணி முடித்து இன்னும் உறங்கும் தந்தை ! அழகுநிலையம் சென்று...