குறிப்பு : இந்தக் கவிதை எழுதப்பட்டது 07.05.2013 ல்
மழை
மழை இனி
பெய்யுமா ?
உலகம் இனி
உய்யுமா ?
இனி ,
மேகம் என்பது
வெறும்
பஞ்சுதானா ?
நிலத்தடி நீர்
என்றாலே - அது
நஞ்சுதானா ?
கயிறு போல
இளைத்து விட்டது
காவிரி !
வாய்க்காலானது
வைகை !
தரிசானது
தாமிரபரணி !
ஏட்டளவுதான்
எந்தச் சட்டமும் !
உயராது அதனால்
எந்த அணையின்
நீர் மட்டமும் !
இனி,
அளந்தே குடிப்போம்
தண்ணீரை !
எதற்கும் கொஞ்சம்
சேமித்து வைப்போம்
கண்ணீரை !
இனி,
வடநாட்டில்
இருந்துதான்
தண்ணீரைக்
கொண்டு வரவேண்டும் !
அயல்நாடு போனாலும்
அங்கிருந்தும் கொஞ்சம்
மொண்டு வரவேண்டும் !
இனி,
குழாயடியில்
சண்டை வராது !
கைதுடைக்கும்
காகித வியாபாரிகள்
கோடீஸ்வரர்கள் !
கதிரியக்கக் குளியல்
அமலுக்கு
வரப் போகிறது !
அழுக்கு ஒட்டாத
ஆடைகள்
நடைமுறைக்கு வரலாம் !
கடல் நீரைக்
குடிநீராக்கும்
குட்டி இயந்திரம்
வீடுதோறும்
விநியோகிக்கப் படலாம் !
கோவில்களில்
அபிஷேகத்திற்கு
தடை வரும் !
வானிலை அதிகாரிகள்
வேலை இழப்பார்கள் !
குடிநீர் வங்கி
உருவாகும் !
மழை
எந்த நாட்டில்
பெய்தாலும்
அதை
அதிசய நிகழ்ச்சியாக
தொலைக்காட்சியில்
ஒளிபரப்புவார்கள் !
' வீட்டுக்கு
ஒரு லிட்டர்
குடிநீர் இலவசம் '
என்று சொல்லியே
அரசியல்வாதிகள்
ஆட்சியைப் பிடிப்பார்கள் !
' ஒருகாலத்தில்
மழை நீரில்
காகிதக் கப்பல்
செய்து விட்டார்கள் '
என்பது
அரிய செய்தியாக
முகநூலில்
பகிரப்படும் !
வானவில்
என்ற வார்த்தை
வழக்கொழிந்து போகும் !
பரிணாம வளர்ச்சியில்
இனி பிறக்கும்
குழந்தைகட்கு
வியர்வைச்சுரப்பியும்
கண்ணீர்ச் சுரப்பியும்
இருக்கப் போவதில்லை !
விவசாயிகள்
எல்லாம்
கண்ணீர்க் கலப்பை
கொண்டு - தமது
கன்ன வயலில்
உழுதால்தான் உண்டு !
( கண்ணீர் கலப்பை , கன்னவயல் - நன்றி கவிஞர் வாலி )
மழை
மழை இனி
பெய்யுமா ?
உலகம் இனி
உய்யுமா ?
இனி ,
மேகம் என்பது
வெறும்
பஞ்சுதானா ?
நிலத்தடி நீர்
என்றாலே - அது
நஞ்சுதானா ?
கயிறு போல
இளைத்து விட்டது
காவிரி !
வாய்க்காலானது
வைகை !
தரிசானது
தாமிரபரணி !
ஏட்டளவுதான்
எந்தச் சட்டமும் !
உயராது அதனால்
எந்த அணையின்
நீர் மட்டமும் !
இனி,
அளந்தே குடிப்போம்
தண்ணீரை !
எதற்கும் கொஞ்சம்
சேமித்து வைப்போம்
கண்ணீரை !
இனி,
வடநாட்டில்
இருந்துதான்
தண்ணீரைக்
கொண்டு வரவேண்டும் !
அயல்நாடு போனாலும்
அங்கிருந்தும் கொஞ்சம்
மொண்டு வரவேண்டும் !
இனி,
குழாயடியில்
சண்டை வராது !
கைதுடைக்கும்
காகித வியாபாரிகள்
கோடீஸ்வரர்கள் !
கதிரியக்கக் குளியல்
அமலுக்கு
வரப் போகிறது !
அழுக்கு ஒட்டாத
ஆடைகள்
நடைமுறைக்கு வரலாம் !
கடல் நீரைக்
குடிநீராக்கும்
குட்டி இயந்திரம்
வீடுதோறும்
விநியோகிக்கப் படலாம் !
கோவில்களில்
அபிஷேகத்திற்கு
தடை வரும் !
வானிலை அதிகாரிகள்
வேலை இழப்பார்கள் !
குடிநீர் வங்கி
உருவாகும் !
மழை
எந்த நாட்டில்
பெய்தாலும்
அதை
அதிசய நிகழ்ச்சியாக
தொலைக்காட்சியில்
ஒளிபரப்புவார்கள் !
' வீட்டுக்கு
ஒரு லிட்டர்
குடிநீர் இலவசம் '
என்று சொல்லியே
அரசியல்வாதிகள்
ஆட்சியைப் பிடிப்பார்கள் !
' ஒருகாலத்தில்
மழை நீரில்
காகிதக் கப்பல்
செய்து விட்டார்கள் '
என்பது
அரிய செய்தியாக
முகநூலில்
பகிரப்படும் !
வானவில்
என்ற வார்த்தை
வழக்கொழிந்து போகும் !
பரிணாம வளர்ச்சியில்
இனி பிறக்கும்
குழந்தைகட்கு
வியர்வைச்சுரப்பியும்
கண்ணீர்ச் சுரப்பியும்
இருக்கப் போவதில்லை !
விவசாயிகள்
எல்லாம்
கண்ணீர்க் கலப்பை
கொண்டு - தமது
கன்ன வயலில்
உழுதால்தான் உண்டு !
( கண்ணீர் கலப்பை , கன்னவயல் - நன்றி கவிஞர் வாலி )
சமூக விழிப்புணர்வு கொண்ட அருமையான படைப்பு. பாராட்டுக்கள்.
ReplyDelete