Skip to main content
 குறிப்பு : இந்தக் கவிதை எழுதப்பட்டது 07.05.2013  ல்


மழை   





மழை இனி
பெய்யுமா ?
உலகம் இனி
உய்யுமா ?

இனி ,
மேகம் என்பது
வெறும்
பஞ்சுதானா ?
நிலத்தடி நீர்
என்றாலே - அது
நஞ்சுதானா ?

கயிறு போல
இளைத்து விட்டது
காவிரி !
வாய்க்காலானது
வைகை !
தரிசானது
தாமிரபரணி !

ஏட்டளவுதான்
எந்தச் சட்டமும் !
உயராது அதனால்
எந்த அணையின்
நீர்  மட்டமும் !

இனி,
அளந்தே குடிப்போம்
தண்ணீரை !
எதற்கும் கொஞ்சம்
சேமித்து வைப்போம்
கண்ணீரை !

இனி,
வடநாட்டில்
இருந்துதான்
தண்ணீரைக்
கொண்டு வரவேண்டும் !
அயல்நாடு போனாலும்
அங்கிருந்தும் கொஞ்சம்
மொண்டு வரவேண்டும் !

இனி,
குழாயடியில்
சண்டை வராது !

கைதுடைக்கும்
காகித வியாபாரிகள்
கோடீஸ்வரர்கள் !

கதிரியக்கக் குளியல்
அமலுக்கு
வரப் போகிறது !

அழுக்கு ஒட்டாத
ஆடைகள்
நடைமுறைக்கு வரலாம் !

கடல் நீரைக்
குடிநீராக்கும்
குட்டி இயந்திரம்
வீடுதோறும்
விநியோகிக்கப் படலாம் !

கோவில்களில்
அபிஷேகத்திற்கு
தடை வரும் !

வானிலை அதிகாரிகள்
வேலை இழப்பார்கள் !

குடிநீர் வங்கி
உருவாகும் !

மழை
எந்த நாட்டில்
பெய்தாலும்
அதை
அதிசய நிகழ்ச்சியாக
தொலைக்காட்சியில்
ஒளிபரப்புவார்கள் !

' வீட்டுக்கு
ஒரு லிட்டர்
குடிநீர் இலவசம் '
என்று சொல்லியே
அரசியல்வாதிகள்
ஆட்சியைப் பிடிப்பார்கள் !

' ஒருகாலத்தில்
மழை நீரில்
காகிதக் கப்பல்
செய்து விட்டார்கள் '
என்பது
அரிய செய்தியாக
முகநூலில்
பகிரப்படும் !

வானவில்
என்ற வார்த்தை
வழக்கொழிந்து போகும் !

பரிணாம வளர்ச்சியில்
இனி பிறக்கும்
குழந்தைகட்கு
வியர்வைச்சுரப்பியும்
கண்ணீர்ச் சுரப்பியும்
இருக்கப் போவதில்லை !

விவசாயிகள்
எல்லாம்
கண்ணீர்க் கலப்பை
கொண்டு  - தமது
கன்ன வயலில்
உழுதால்தான் உண்டு !


( கண்ணீர் கலப்பை , கன்னவயல் - நன்றி கவிஞர் வாலி )


Comments

  1. சமூக விழிப்புணர்வு கொண்ட அருமையான படைப்பு. பாராட்டுக்கள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்குபோட்டுப் பிரிப்பதுதான் ! ஏதோவொன்றை எண்ணைச்சட்டியில் பொரிப்பதுதான் ! நரகாசுரன் நமக்குள்ளே மரிப்பதுதான் ! ஒரு சங்கல்பத்தை நெஞ்சுக்குள் வரிப்பதுதான் ! வண்ண வேடிக்கையை வான் வெளியில் விர