Skip to main content
அகில உலக காதலன்களுக்கு இக்கவிதை அர்ப்பணம்






அன்பே,

சாகசங்களால்
உன்னை வியக்க வைக்க
என்னால் முடியாது !

அபூர்வப் பரிசுதந்து
ஆச்சர்யப்படுத்த
என்னால் முடியாது !

சுண்டுவிரல் படாமல்
கண்ணியமாய்க்
காதலிக்க
என்னால் முடியாது !

பிற ஆண்களுடன் 
நீ பழகுவதை
பெருந்தன்மையோடு
ஏற்றுக்கொள்ள
என்னால் முடியாது !

உன்
விரல் நகங்களுக்கும்
கவிதை பாட
என்னால் முடியாது !

சொடக்குப் போட்டு
சொர்க்கத்தை வரவழைக்க
என்னால் முடியாது !

எப்போதும்
உன்னைச் சிரிக்க வைக்க
என்னால் முடியாது !

ஒரே பாடலில்
பணக்காரனாக
என்னால் முடியாது !

நுனி நாக்கில்
ஆங்கிலம் பேச
என்னால் முடியாது !

நீ வாசிக்கும்
புத்தகங்களின்
ரசிகனாக
என்னால் முடியாது !

ஆனால் ......

உன் தந்தைக்கு
ஒரு ஹாய் சொல்ல
என்னால் முடியும் !

என் அம்மாவை
உன் தோழியாக்க
என்னால் முடியும் !

நம் காதலின்
முக்கிய தினங்களில்
உனக்கொரு வாழ்த்துக்கூற
என்னால் முடியும் !

கொஞ்சம் கொஞ்சமாய்
 ராமனாய் மாற
என்னால் முடியும் !

சிறிது சிறிதாய்
மதுவை மறக்க
என்னால் முடியும் !

ஒரு நாளைக்கு
ஒரு சிகெரெட்
கண்டிப்பாய் முடியும் !

உன்
தாமத வருகைக்கு
புன்னகை புரிய
என்னால் முடியும் !

நம்
எல்லா சண்டைக்கும்
முதலில் சமாதானமாக
என்னால் முடியும் !

உன்
பரீட்சைக்கு
அலாரம் வைத்தெழ
என்னால் முடியும் !

உறக்கம் வராத
உன் இரவுகளில்
உன்னோடு கதை பேச
என்னால் முடியும் !

உன்
துன்பங்களுக்குப்
பிரார்த்தனை செய்ய
என்னால் முடியும் !

ஒரு சொட்டுக்
கண்ணீரளவு
உன்னை நெகிழவைக்க
என்னால் முடியும் !

ஒரு வாய் சோற்றையும்
உன்னோடு பகிர்ந்து கொள்ள
என்னால் முடியும் !

நீ பறப்பதற்கு
சிறகுகள் தரமுடியுமா
தெரியவில்லை !
உன்னோடு கைகோர்த்து
சாலையில் நடக்க
என்னால் முடியும் !

நீ
உறங்குவதற்கு
என் மடி தந்து
உன் தலை கோத
என்னால் முடியும் !

                                                                            - குருச்சந்திரன்

Comments

  1. முடியாததை விட முடிந்தது எல்லாமே பாரட்டப்பட வேண்டியவைதான்.

    அவனின் உண்மைக்கு உண்மையான காதலி ஒருவள் மனைவியாக அமையட்டும். வாழ்த்துகள்.

    படைப்புக்குப்பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. ஐயா, தாங்கள் ரஸித்துப் படித்து கருத்திட்டதற்கு மிகவும் நன்றி

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்குபோட்டுப் பிரிப்பதுதான் ! ஏதோவொன்றை எண்ணைச்சட்டியில் பொரிப்பதுதான் ! நரகாசுரன் நமக்குள்ளே மரிப்பதுதான் ! ஒரு சங்கல்பத்தை நெஞ்சுக்குள் வரிப்பதுதான் ! வண்ண வேடிக்கையை வான் வெளியில் விர