Skip to main content
அகில உலக காதலன்களுக்கு இக்கவிதை அர்ப்பணம்






அன்பே,

சாகசங்களால்
உன்னை வியக்க வைக்க
என்னால் முடியாது !

அபூர்வப் பரிசுதந்து
ஆச்சர்யப்படுத்த
என்னால் முடியாது !

சுண்டுவிரல் படாமல்
கண்ணியமாய்க்
காதலிக்க
என்னால் முடியாது !

பிற ஆண்களுடன் 
நீ பழகுவதை
பெருந்தன்மையோடு
ஏற்றுக்கொள்ள
என்னால் முடியாது !

உன்
விரல் நகங்களுக்கும்
கவிதை பாட
என்னால் முடியாது !

சொடக்குப் போட்டு
சொர்க்கத்தை வரவழைக்க
என்னால் முடியாது !

எப்போதும்
உன்னைச் சிரிக்க வைக்க
என்னால் முடியாது !

ஒரே பாடலில்
பணக்காரனாக
என்னால் முடியாது !

நுனி நாக்கில்
ஆங்கிலம் பேச
என்னால் முடியாது !

நீ வாசிக்கும்
புத்தகங்களின்
ரசிகனாக
என்னால் முடியாது !

ஆனால் ......

உன் தந்தைக்கு
ஒரு ஹாய் சொல்ல
என்னால் முடியும் !

என் அம்மாவை
உன் தோழியாக்க
என்னால் முடியும் !

நம் காதலின்
முக்கிய தினங்களில்
உனக்கொரு வாழ்த்துக்கூற
என்னால் முடியும் !

கொஞ்சம் கொஞ்சமாய்
 ராமனாய் மாற
என்னால் முடியும் !

சிறிது சிறிதாய்
மதுவை மறக்க
என்னால் முடியும் !

ஒரு நாளைக்கு
ஒரு சிகெரெட்
கண்டிப்பாய் முடியும் !

உன்
தாமத வருகைக்கு
புன்னகை புரிய
என்னால் முடியும் !

நம்
எல்லா சண்டைக்கும்
முதலில் சமாதானமாக
என்னால் முடியும் !

உன்
பரீட்சைக்கு
அலாரம் வைத்தெழ
என்னால் முடியும் !

உறக்கம் வராத
உன் இரவுகளில்
உன்னோடு கதை பேச
என்னால் முடியும் !

உன்
துன்பங்களுக்குப்
பிரார்த்தனை செய்ய
என்னால் முடியும் !

ஒரு சொட்டுக்
கண்ணீரளவு
உன்னை நெகிழவைக்க
என்னால் முடியும் !

ஒரு வாய் சோற்றையும்
உன்னோடு பகிர்ந்து கொள்ள
என்னால் முடியும் !

நீ பறப்பதற்கு
சிறகுகள் தரமுடியுமா
தெரியவில்லை !
உன்னோடு கைகோர்த்து
சாலையில் நடக்க
என்னால் முடியும் !

நீ
உறங்குவதற்கு
என் மடி தந்து
உன் தலை கோத
என்னால் முடியும் !

                                                                            - குருச்சந்திரன்

Comments

  1. முடியாததை விட முடிந்தது எல்லாமே பாரட்டப்பட வேண்டியவைதான்.

    அவனின் உண்மைக்கு உண்மையான காதலி ஒருவள் மனைவியாக அமையட்டும். வாழ்த்துகள்.

    படைப்புக்குப்பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. ஐயா, தாங்கள் ரஸித்துப் படித்து கருத்திட்டதற்கு மிகவும் நன்றி

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
கலி , கலாச்சாரம், கற்பு கலி இங்கே முற்றிவிட்டது ! கலாச்சார நதி வற்றிவிட்டது ! நாகரீகத் தீ பற்றிவிட்டது ! ஆபாசப் பாம்பு சுற்றிவிட்டது ! எல்லாம் இங்கே கெட்டு விட்டது ! பண்பாட்டு மரம் பட்டு விட்டது ! எல்லாருமே காமத்தில் கொழுக்கிறார்கள் ! பெரும்பாலோர் பிஞ்சிலேயே பழுக்கிறார்கள் ! சல்லடை போட்டுத் தேடினாலும் கற்புக்கரசர்களை - இங்கு காண முடியாது ! ஸ்ரீ ராமனே வந்தாலும் நூறு சதம் கற்பை - இனி பேண முடியாது ! ஒருத்திக்கு ஒருவன் என்றில்லாத நிலை வரப்போகிறது ! கண்காட்சிக் கூடத்தில் கற்புக்கும் ஒரு சிலை வரப்போகிறது ! கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு சிதையப் போகிறது ! உறவெனும் கோவில் உருத்தெரியாமல் புதையப் போய்கிறது ! அதென்ன அச்சு பிசகாமல் அழகானவர்களுக்கே காதல் வருகிறது ! சொல்லி வைத்தாற்போல சொடக்குப் போடுவதற்குள் மோதல் வருகிறது ! எல்லா காதலர்களும் காது சூடேற பேசுகிறார்கள் காமத்தை ! மோகத்தீயில் வேக வைக்கிறார்கள் அர்த்தராத்திரி சாமத்தை ! அலைபேசியில் அழைக்கும் போது மாறிவிடுகிறது ...
அபார்ட்மெண்ட் சிறுவனே ................... அடே ! சிறுவா ! உன்னைத்தான் ! இங்கே பார் ! கணினி விளையாட்டை கணநேரம் ஒத்திவை ! கேள் ! விரிந்திருகிறது வீதி !  அதில், விளையாடுவது தானே நீதி ? கட்டம் கட்டு, குறுக்கே கோடிடு ! ஆடலாம் சடுகுடு ! கைக்குட்டை எடு , கண்ணைக் கட்டு ! ஆடு கண்ணாமூச்சி ! ஓடித்தொடுதல் ஆடியதுண்டா ? ஒற்றைக் காலிலும் ஓடித் தொடலாம் ! அதற்குப் பெயர்தான் நொண்டி ! ஆரோக்கியக் காசுகள் சேர்ப்பதில், அதுவொரு அற்புத உண்டி ! அப்புறம் இன்னோர் விளையாட்டு ! ஒருகால் மடக்கிக் குந்து ! தேவையில்லை பந்து ! குச்சியால் குச்சியை உந்து ! எம்பியெழுவதை, ' கில்லித்தட்டு '   -  என்றே நீ சொல்லித்தட்டு !  நிறம் கூறித் துரத்தும் ஆட்டம் பரிச்சையமுண்டா ? திருடன் போலீஸ் தெரியுமா ? நூல் பிடித்தோடி பட்டம் விட்டதில்லையா ? உத்திரத்தில் கயிறு கட்டி தூரி.............? என்னடா உனக்கு எதுவுமே தெரியவில்லை ! மேற்கண்ட விளையாட்டில் வலிமையாகும் உன் தசை ! வெறும் கணினியைத் தட்டுவதில் விரலுக்கு மட்டுமே விசை ! யாருமில்லையா வீட்டில் ? ஓ ! இரவுப்பணி முடித்து இன்னும் உறங்கும் தந்தை ! அழகுநிலையம் சென்று...