Skip to main content
அறை





கற்றுக்கொள்ளாதபோது
சமைத்த
அந்த
முதல்சமையலின் ருசி,
கற்றுக் கொண்டபிறகு
சமைத்த உணவுகளில்
இதுவரை கிடைக்கவில்லை !

வெறும்
வெங்காயத்தை மட்டுமே
நறுக்கித்தரும்
சமைக்கத்தெரியாத ஒருவன்
எல்லா அறைகளிலும்
இருக்கிறான் !

அவன்
உண்பான் என
இவனும்
இவன்
உண்பான் என
அவனும்
இருந்ததில்
மீந்து போய்
வெளியில் கொட்டும்
கலாச்சாரம்
அறையினுடையது !

எப்போதெல்லாம்
அறையில் அசைவம்
சமைக்கப்படுகிறதோ
அப்போதெல்லாம்
அறையின்
அசைவம் சாப்பிடாதவன்
ஊருக்குப் போயிருப்பான் !

எல்லா
அறைகளிலும்
ஏதோ ஒருவன்
சதா காதலியிடம்
பேசிக் கொண்டேயிருக்கிறான் !

தொலைந்த
பொருளுக்கு
அறையில் இருப்பவர்களை
சந்தேகிப்பது கூடாது !

தண்ணீர்
வராதநாட்கள்
அறையின்
துக்கநாட்கள் !

அறையில்
மதுவருந்தும் போது
நண்பர்களின் சத்தம்
அக்கம் பக்கம்
கேட்டு விடக்கூடாதென்று
அவ்வப்போது அவர்களை
அமைதிப்படுத்திக்
கொண்டிருப்பவனின்
அவஸ்த்தை
அழகானது !

அறையில்
ஒருவன்
தொலைக்காட்சி
பார்க்கிறபோது
வருகின்றஉறக்கம்
யாருமில்லாத
'அறைத்தனிமையில்'
வருவதில்லை !

எப்போது
ஒரு அறையின்
வரவு செலவுக் கணக்கு
அதைப் போட்ட
நபர்
இல்லாத சமயத்தில்
சரிபார்க்கப்படுகின்றதோ
அப்போது
கெட ஆரம்பிக்கிறது
அந்த அறையின்
கற்பு !

மகிழ்ச்சியோ
துயரமோ
ஒருவன்
பகிர்ந்து கொள்வது
முதலில்
அறையில்
இருப்பவர்களோடுதான் !

வேலை தேடியோ
வேலை பெற்றோ
வருகின்ற
ஒருவனுக்கு
அடைக்கலம் தராத
ஒரு அறை
இந்த உலகத்தில்
இல்லவே இல்லை !

'சகோதரர்கள்
நான்கு பேர்
ஒரே வீட்டில்
வசிப்பதற்கும்
பணி நிமித்தம்
நான்கு பேர்
ஒரே அறையில்
வசிப்பதற்கும் .............
உண்மையைச் சொன்னால்
வித்தியாசம் இல்லை !


Comments

  1. அறையைப்பற்றி நன்கு அறிந்தும் அறைந்தும் சொல்லியுள்ளது அழகாக உள்ளது. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. சூப்பரா இருந்தது கவிதை குறிப்பாக அறையின் கற்பு குறித்த பார்வை

    ReplyDelete
    Replies
    1. கவிதையின் குறிப்பிட்ட பகுதியை குறிப்பிட்டு சொன்னதற்கு நன்றி தோழி !

      Delete

Post a Comment

Popular posts from this blog

அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
அபார்ட்மெண்ட் சிறுவனே ................... அடே ! சிறுவா ! உன்னைத்தான் ! இங்கே பார் ! கணினி விளையாட்டை கணநேரம் ஒத்திவை ! கேள் ! விரிந்திருகிறது வீதி !  அதில், விளையாடுவது தானே நீதி ? கட்டம் கட்டு, குறுக்கே கோடிடு ! ஆடலாம் சடுகுடு ! கைக்குட்டை எடு , கண்ணைக் கட்டு ! ஆடு கண்ணாமூச்சி ! ஓடித்தொடுதல் ஆடியதுண்டா ? ஒற்றைக் காலிலும் ஓடித் தொடலாம் ! அதற்குப் பெயர்தான் நொண்டி ! ஆரோக்கியக் காசுகள் சேர்ப்பதில், அதுவொரு அற்புத உண்டி ! அப்புறம் இன்னோர் விளையாட்டு ! ஒருகால் மடக்கிக் குந்து ! தேவையில்லை பந்து ! குச்சியால் குச்சியை உந்து ! எம்பியெழுவதை, ' கில்லித்தட்டு '   -  என்றே நீ சொல்லித்தட்டு !  நிறம் கூறித் துரத்தும் ஆட்டம் பரிச்சையமுண்டா ? திருடன் போலீஸ் தெரியுமா ? நூல் பிடித்தோடி பட்டம் விட்டதில்லையா ? உத்திரத்தில் கயிறு கட்டி தூரி.............? என்னடா உனக்கு எதுவுமே தெரியவில்லை ! மேற்கண்ட விளையாட்டில் வலிமையாகும் உன் தசை ! வெறும் கணினியைத் தட்டுவதில் விரலுக்கு மட்டுமே விசை ! யாருமில்லையா வீட்டில் ? ஓ ! இரவுப்பணி முடித்து இன்னும் உறங்கும் தந்தை ! அழகுநிலையம் சென்று...
கலி , கலாச்சாரம், கற்பு கலி இங்கே முற்றிவிட்டது ! கலாச்சார நதி வற்றிவிட்டது ! நாகரீகத் தீ பற்றிவிட்டது ! ஆபாசப் பாம்பு சுற்றிவிட்டது ! எல்லாம் இங்கே கெட்டு விட்டது ! பண்பாட்டு மரம் பட்டு விட்டது ! எல்லாருமே காமத்தில் கொழுக்கிறார்கள் ! பெரும்பாலோர் பிஞ்சிலேயே பழுக்கிறார்கள் ! சல்லடை போட்டுத் தேடினாலும் கற்புக்கரசர்களை - இங்கு காண முடியாது ! ஸ்ரீ ராமனே வந்தாலும் நூறு சதம் கற்பை - இனி பேண முடியாது ! ஒருத்திக்கு ஒருவன் என்றில்லாத நிலை வரப்போகிறது ! கண்காட்சிக் கூடத்தில் கற்புக்கும் ஒரு சிலை வரப்போகிறது ! கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு சிதையப் போகிறது ! உறவெனும் கோவில் உருத்தெரியாமல் புதையப் போய்கிறது ! அதென்ன அச்சு பிசகாமல் அழகானவர்களுக்கே காதல் வருகிறது ! சொல்லி வைத்தாற்போல சொடக்குப் போடுவதற்குள் மோதல் வருகிறது ! எல்லா காதலர்களும் காது சூடேற பேசுகிறார்கள் காமத்தை ! மோகத்தீயில் வேக வைக்கிறார்கள் அர்த்தராத்திரி சாமத்தை ! அலைபேசியில் அழைக்கும் போது மாறிவிடுகிறது ...