Skip to main content
அறை





கற்றுக்கொள்ளாதபோது
சமைத்த
அந்த
முதல்சமையலின் ருசி,
கற்றுக் கொண்டபிறகு
சமைத்த உணவுகளில்
இதுவரை கிடைக்கவில்லை !

வெறும்
வெங்காயத்தை மட்டுமே
நறுக்கித்தரும்
சமைக்கத்தெரியாத ஒருவன்
எல்லா அறைகளிலும்
இருக்கிறான் !

அவன்
உண்பான் என
இவனும்
இவன்
உண்பான் என
அவனும்
இருந்ததில்
மீந்து போய்
வெளியில் கொட்டும்
கலாச்சாரம்
அறையினுடையது !

எப்போதெல்லாம்
அறையில் அசைவம்
சமைக்கப்படுகிறதோ
அப்போதெல்லாம்
அறையின்
அசைவம் சாப்பிடாதவன்
ஊருக்குப் போயிருப்பான் !

எல்லா
அறைகளிலும்
ஏதோ ஒருவன்
சதா காதலியிடம்
பேசிக் கொண்டேயிருக்கிறான் !

தொலைந்த
பொருளுக்கு
அறையில் இருப்பவர்களை
சந்தேகிப்பது கூடாது !

தண்ணீர்
வராதநாட்கள்
அறையின்
துக்கநாட்கள் !

அறையில்
மதுவருந்தும் போது
நண்பர்களின் சத்தம்
அக்கம் பக்கம்
கேட்டு விடக்கூடாதென்று
அவ்வப்போது அவர்களை
அமைதிப்படுத்திக்
கொண்டிருப்பவனின்
அவஸ்த்தை
அழகானது !

அறையில்
ஒருவன்
தொலைக்காட்சி
பார்க்கிறபோது
வருகின்றஉறக்கம்
யாருமில்லாத
'அறைத்தனிமையில்'
வருவதில்லை !

எப்போது
ஒரு அறையின்
வரவு செலவுக் கணக்கு
அதைப் போட்ட
நபர்
இல்லாத சமயத்தில்
சரிபார்க்கப்படுகின்றதோ
அப்போது
கெட ஆரம்பிக்கிறது
அந்த அறையின்
கற்பு !

மகிழ்ச்சியோ
துயரமோ
ஒருவன்
பகிர்ந்து கொள்வது
முதலில்
அறையில்
இருப்பவர்களோடுதான் !

வேலை தேடியோ
வேலை பெற்றோ
வருகின்ற
ஒருவனுக்கு
அடைக்கலம் தராத
ஒரு அறை
இந்த உலகத்தில்
இல்லவே இல்லை !

'சகோதரர்கள்
நான்கு பேர்
ஒரே வீட்டில்
வசிப்பதற்கும்
பணி நிமித்தம்
நான்கு பேர்
ஒரே அறையில்
வசிப்பதற்கும் .............
உண்மையைச் சொன்னால்
வித்தியாசம் இல்லை !


Comments

  1. அறையைப்பற்றி நன்கு அறிந்தும் அறைந்தும் சொல்லியுள்ளது அழகாக உள்ளது. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. சூப்பரா இருந்தது கவிதை குறிப்பாக அறையின் கற்பு குறித்த பார்வை

    ReplyDelete
    Replies
    1. கவிதையின் குறிப்பிட்ட பகுதியை குறிப்பிட்டு சொன்னதற்கு நன்றி தோழி !

      Delete

Post a Comment

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்குபோட்டுப் பிரிப்பதுதான் ! ஏதோவொன்றை எண்ணைச்சட்டியில் பொரிப்பதுதான் ! நரகாசுரன் நமக்குள்ளே மரிப்பதுதான் ! ஒரு சங்கல்பத்தை நெஞ்சுக்குள் வரிப்பதுதான் ! வண்ண வேடிக்கையை வான் வெளியில் விர