Skip to main content
ஒரு பழைய புகைப்படம் !


அது ஒரு
பழைய புகைப்படம் !

ஒரு
விடுமுறை நாளில்
பீரோவைக் குடைந்த போது
தற்செயலாகக் கிடைத்தது !

புன்னகையுடன்
சிலர் !

மௌனமாக 
சிலர் !

ப்ளாஷ் விழும்போது
இமை மூடிவிட்ட
 சிலர் !

அழுகையோ சிரிப்போ 
அடக்கிக் கொண்ட
சிலர் !

தலைக்கு மேல்
ஆங்கில v
அவசரமாய்
முளைக்கப் பெற்ற
சிலர்.........................
......... !

சிலர்
கண்ணாடி
அணிந்திருக்கவில்லை !

சிலர்
ஒல்லியாக இருந்தனர் !

சிலர் தொப்பை
போட்டிருக்கவில்லை !

சிலருக்கு
தலை நிறைய
முடியிருந்தது !

எல்லா முகமும்
நினைவிருக்கிறது !
எந்தப் பெயரும்
மறக்கவில்லை !

ஒரு சிலர்
ஒரு சிலரோடு
சண்டை போட்டிருந்தனர் !

ஒரு சிலரை
ஒரு சிலர்
காதலித்திருந்தனர் !

இணை பிரியாத
நண்பர்களாக
சிலர் இருந்தனர் !

சிலரால்
வகுப்பே கலகலப்பாகும் !

சிலர்
யாருடனும் பேசாத
உம்மணாமூஞ்சி !

சிலர்
இப்போது
தொடர்பில் இல்லை !

சிலரது
தொடர்புகள்
கிடைக்கவேயில்லை !

சிலர்
முக நூலில்
முகம் காட்டுகிறார்கள் !

சிலர்
அவ்வப்போது
அலைபேசியில் !

பெரும்பாலோருக்கு
திருமணம்
முடிந்து விட்டது !
முடிந்திருக்கும் !

ஒரு
அலுமினி விழாவில்
சிலர்
குடும்பத்தோடு 
சந்தித்துக் கொண்டார்களாம் !

சிலர்
இன்னும் 
அப்படியேயிருப்பார்கள் !
சிலர்
கட்டாயம்
மாறியிருப்பார்கள் !

ஒரு
நன்னாள் தேர்ந்தெடுத்து,
அனைவரும் சந்தித்து,
அதே வகுப்பறையில்,
அதே ஆசிரியரின்,
ஒரு பழைய பாடத்தைத்
திரும்பவும் கேட்கவேண்டும் !

வகுப்பிற்குத்
தாமதமாக
வருபவர்கள்,
இப்போதும்
அப்படியே வந்து 
செயற்கையாகத் 
திட்டு வாங்கட்டும் !

சண்டை போட்டிருந்தவர்கள்
கைகுலுக்கிக் கொள்ளலாம் !

உம்மணாமூஞ்சிகளுக்கு
தண்டனை
பாட்டு பாடுவது !

காதலித்தவர்கள்
காதல்கடிதம் எழுதிவந்து
கூட்டத்தின் முன்
வாசித்துக் காட்ட
கலாச்சாரம் அனுமதிக்காதோ ?

அவரவர்
கொண்டு வந்த
மதிய உணவை
இலைக்கொரு
கைப்பிடி வைத்து
ஒன்றாக அமர்ந்து
சாப்பிடத் தொடங்கலாம் !

கூட்டத்தில் பகிர
ஒவ்வொருவருக்கும்
தலா
ஒரு மறக்க முடியாத நிகழ்வு !

அவகாசமிருந்தால்
அணிபிரித்து
குட்டியாய் ஒரு
பட்டிமன்றம் !

பிரிவதற்கு முன்,
கடைசியாக
அந்தப் பழைய புகைப்படத்தின்
அதே வரிசையில்
அனைவரும் நின்று
மீண்டுமொரு
க்ளிக் !!! 

Comments

  1. பழைய நினைவுகள் சுவாரஸ்யம்தான்!

    ReplyDelete
  2. சுவாரஸ்யமான பழைய நினைவை ரசித்து கருத்திட்டதற்கு நன்றி நண்பரே

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்குபோட்டுப் பிரிப்பதுதான் ! ஏதோவொன்றை எண்ணைச்சட்டியில் பொரிப்பதுதான் ! நரகாசுரன் நமக்குள்ளே மரிப்பதுதான் ! ஒரு சங்கல்பத்தை நெஞ்சுக்குள் வரிப்பதுதான் ! வண்ண வேடிக்கையை வான் வெளியில் விர