Skip to main content
ஒரு பழைய புகைப்படம் !


அது ஒரு
பழைய புகைப்படம் !

ஒரு
விடுமுறை நாளில்
பீரோவைக் குடைந்த போது
தற்செயலாகக் கிடைத்தது !

புன்னகையுடன்
சிலர் !

மௌனமாக 
சிலர் !

ப்ளாஷ் விழும்போது
இமை மூடிவிட்ட
 சிலர் !

அழுகையோ சிரிப்போ 
அடக்கிக் கொண்ட
சிலர் !

தலைக்கு மேல்
ஆங்கில v
அவசரமாய்
முளைக்கப் பெற்ற
சிலர்.........................
......... !

சிலர்
கண்ணாடி
அணிந்திருக்கவில்லை !

சிலர்
ஒல்லியாக இருந்தனர் !

சிலர் தொப்பை
போட்டிருக்கவில்லை !

சிலருக்கு
தலை நிறைய
முடியிருந்தது !

எல்லா முகமும்
நினைவிருக்கிறது !
எந்தப் பெயரும்
மறக்கவில்லை !

ஒரு சிலர்
ஒரு சிலரோடு
சண்டை போட்டிருந்தனர் !

ஒரு சிலரை
ஒரு சிலர்
காதலித்திருந்தனர் !

இணை பிரியாத
நண்பர்களாக
சிலர் இருந்தனர் !

சிலரால்
வகுப்பே கலகலப்பாகும் !

சிலர்
யாருடனும் பேசாத
உம்மணாமூஞ்சி !

சிலர்
இப்போது
தொடர்பில் இல்லை !

சிலரது
தொடர்புகள்
கிடைக்கவேயில்லை !

சிலர்
முக நூலில்
முகம் காட்டுகிறார்கள் !

சிலர்
அவ்வப்போது
அலைபேசியில் !

பெரும்பாலோருக்கு
திருமணம்
முடிந்து விட்டது !
முடிந்திருக்கும் !

ஒரு
அலுமினி விழாவில்
சிலர்
குடும்பத்தோடு 
சந்தித்துக் கொண்டார்களாம் !

சிலர்
இன்னும் 
அப்படியேயிருப்பார்கள் !
சிலர்
கட்டாயம்
மாறியிருப்பார்கள் !

ஒரு
நன்னாள் தேர்ந்தெடுத்து,
அனைவரும் சந்தித்து,
அதே வகுப்பறையில்,
அதே ஆசிரியரின்,
ஒரு பழைய பாடத்தைத்
திரும்பவும் கேட்கவேண்டும் !

வகுப்பிற்குத்
தாமதமாக
வருபவர்கள்,
இப்போதும்
அப்படியே வந்து 
செயற்கையாகத் 
திட்டு வாங்கட்டும் !

சண்டை போட்டிருந்தவர்கள்
கைகுலுக்கிக் கொள்ளலாம் !

உம்மணாமூஞ்சிகளுக்கு
தண்டனை
பாட்டு பாடுவது !

காதலித்தவர்கள்
காதல்கடிதம் எழுதிவந்து
கூட்டத்தின் முன்
வாசித்துக் காட்ட
கலாச்சாரம் அனுமதிக்காதோ ?

அவரவர்
கொண்டு வந்த
மதிய உணவை
இலைக்கொரு
கைப்பிடி வைத்து
ஒன்றாக அமர்ந்து
சாப்பிடத் தொடங்கலாம் !

கூட்டத்தில் பகிர
ஒவ்வொருவருக்கும்
தலா
ஒரு மறக்க முடியாத நிகழ்வு !

அவகாசமிருந்தால்
அணிபிரித்து
குட்டியாய் ஒரு
பட்டிமன்றம் !

பிரிவதற்கு முன்,
கடைசியாக
அந்தப் பழைய புகைப்படத்தின்
அதே வரிசையில்
அனைவரும் நின்று
மீண்டுமொரு
க்ளிக் !!! 

Comments

  1. பழைய நினைவுகள் சுவாரஸ்யம்தான்!

    ReplyDelete
  2. சுவாரஸ்யமான பழைய நினைவை ரசித்து கருத்திட்டதற்கு நன்றி நண்பரே

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
அபார்ட்மெண்ட் சிறுவனே ................... அடே ! சிறுவா ! உன்னைத்தான் ! இங்கே பார் ! கணினி விளையாட்டை கணநேரம் ஒத்திவை ! கேள் ! விரிந்திருகிறது வீதி !  அதில், விளையாடுவது தானே நீதி ? கட்டம் கட்டு, குறுக்கே கோடிடு ! ஆடலாம் சடுகுடு ! கைக்குட்டை எடு , கண்ணைக் கட்டு ! ஆடு கண்ணாமூச்சி ! ஓடித்தொடுதல் ஆடியதுண்டா ? ஒற்றைக் காலிலும் ஓடித் தொடலாம் ! அதற்குப் பெயர்தான் நொண்டி ! ஆரோக்கியக் காசுகள் சேர்ப்பதில், அதுவொரு அற்புத உண்டி ! அப்புறம் இன்னோர் விளையாட்டு ! ஒருகால் மடக்கிக் குந்து ! தேவையில்லை பந்து ! குச்சியால் குச்சியை உந்து ! எம்பியெழுவதை, ' கில்லித்தட்டு '   -  என்றே நீ சொல்லித்தட்டு !  நிறம் கூறித் துரத்தும் ஆட்டம் பரிச்சையமுண்டா ? திருடன் போலீஸ் தெரியுமா ? நூல் பிடித்தோடி பட்டம் விட்டதில்லையா ? உத்திரத்தில் கயிறு கட்டி தூரி.............? என்னடா உனக்கு எதுவுமே தெரியவில்லை ! மேற்கண்ட விளையாட்டில் வலிமையாகும் உன் தசை ! வெறும் கணினியைத் தட்டுவதில் விரலுக்கு மட்டுமே விசை ! யாருமில்லையா வீட்டில் ? ஓ ! இரவுப்பணி முடித்து இன்னும் உறங்கும் தந்தை ! அழகுநிலையம் சென்று...
கலி , கலாச்சாரம், கற்பு கலி இங்கே முற்றிவிட்டது ! கலாச்சார நதி வற்றிவிட்டது ! நாகரீகத் தீ பற்றிவிட்டது ! ஆபாசப் பாம்பு சுற்றிவிட்டது ! எல்லாம் இங்கே கெட்டு விட்டது ! பண்பாட்டு மரம் பட்டு விட்டது ! எல்லாருமே காமத்தில் கொழுக்கிறார்கள் ! பெரும்பாலோர் பிஞ்சிலேயே பழுக்கிறார்கள் ! சல்லடை போட்டுத் தேடினாலும் கற்புக்கரசர்களை - இங்கு காண முடியாது ! ஸ்ரீ ராமனே வந்தாலும் நூறு சதம் கற்பை - இனி பேண முடியாது ! ஒருத்திக்கு ஒருவன் என்றில்லாத நிலை வரப்போகிறது ! கண்காட்சிக் கூடத்தில் கற்புக்கும் ஒரு சிலை வரப்போகிறது ! கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு சிதையப் போகிறது ! உறவெனும் கோவில் உருத்தெரியாமல் புதையப் போய்கிறது ! அதென்ன அச்சு பிசகாமல் அழகானவர்களுக்கே காதல் வருகிறது ! சொல்லி வைத்தாற்போல சொடக்குப் போடுவதற்குள் மோதல் வருகிறது ! எல்லா காதலர்களும் காது சூடேற பேசுகிறார்கள் காமத்தை ! மோகத்தீயில் வேக வைக்கிறார்கள் அர்த்தராத்திரி சாமத்தை ! அலைபேசியில் அழைக்கும் போது மாறிவிடுகிறது ...