Skip to main content

இன்னும்
விடியவில்லை !
உறக்கம்
கலையவில்லை !
இன்னும் கொஞ்சம்
உறங்குவோம் !

விடிந்துவிட்டது !
உறக்கம்
கலையவில்லை !
இன்னும் கொஞ்சம்
உறங்குவோம் !

உறக்கம்,
கலைந்து விட்டது  !
யாராவது எழுப்பட்டும் !
இன்னும் கொஞ்சம்
உறங்குவோம் !

எழுப்பியும் விட்டார்கள் !
பக்கத்தில் இருப்பவன்
எழட்டுமே !
இன்னும் கொஞ்சம்
உறங்குவோம் !


=================================================

நாய் குரைத்தது !
நாய்கள் குரைத்தன !
மனிதன் குரைத்தான் !
மனிதர்கள்,
வேடிக்கை பார்த்தனர் !

================================================

நீ
சுதந்திரமானவன்  !
தேர்தெடுக்க
முழு உரிமை உள்ளவன் !
ஜனநாயகத்தின்
பிரதிநிதி !
சொல் !
தூக்கா ?
விஷமா ?
கழுமரமா ?
மலையுச்சியா  ?

=================================================

எல்லா
நிர்பந்தமும்
பழக்கமாகி விடுவதில்லை !
எல்லா
பழக்கமும்
நிர்பந்தத்தில் இருந்து
வருவதில்லை !

==================================================

பெஞ்சில்
தலைசாய்க்கிறான்
ஒரு மாணவன் !
வடியத்தொடங்குகிறது
உறக்கம் !

==================================================

மறுபடியும்  ஒரு
சந்தர்ப்பத்தில்
மறுபடியும்
அத்தவறைச் செய்து
மறுபடியும்  நாம்
சராசரிகளாகின்றோம் !

===================================================

                                                                          

Comments

  1. அனைத்தும் அருமை.

    மிகவும் பிடித்தது:

    //நாய் குரைத்தது !
    நாய்கள் குரைத்தன !
    மனிதன் குரைத்தான் !
    மனிதர்கள்,
    வேடிக்கை பார்த்தனர் ! //

    ;)))))

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்குபோட்டுப் பிரிப்பதுதான் ! ஏதோவொன்றை எண்ணைச்சட்டியில் பொரிப்பதுதான் ! நரகாசுரன் நமக்குள்ளே மரிப்பதுதான் ! ஒரு சங்கல்பத்தை நெஞ்சுக்குள் வரிப்பதுதான் ! வண்ண வேடிக்கையை வான் வெளியில் விர