Skip to main content
தமிழ்


அன்னையால்

அறிமுகப்படுத்தப்பட்ட

ஆதிஅன்னை நீ !


விவரம் தெரிந்த பிறகு

தாய்பாலினும் மூத்தபால் ,

முப்பால் என அறிந்தோம் !


அறப்பசியையும் ,

அறிவுப்பசியையும் ,

அதனை அருந்தித்தான்

ஆற்றிக்கொண்டோம் !


வீரம் ,

உன்னிலிருந்து விளைந்ததுதான் !

காதல் கூட - நீ

கற்றுத்தந்தது தான !


உன்னைக்

காதாறக் கேட்டவர்கள் ,

செவியாலும் சுவை உணர முடியும் !

செவியாலும் மணம் நுகர முடியும் !

என பேதையைப் போல

போதையில் புலம்பிச் செல்கிறார்கள் !


உன்னைப் படித்துக்கொண்டே

உண்ணும் உணவுதான்

நிலா இல்லாத சமயங்களில்

எங்களுக்கான நிலாச்சோறு !

அது ,

அன்னையால் ஊட்டப்படும்

அன்புச்சோறு ! அறிவுச்சோறு !


கற்பனைக் கருவாகி

மொழிவழியே உருவாகி

உன்னை நீயே

படைத்துக் கொள்வதில்

இங்கே எண்ணற்ற படைப்பாளிகள்
உருவாகி விடுகிறார்கள் !


எங்களின் பிழைப்பே

உன்னால் தான நடக்கிறது !

உன்னை

விண்டெடுத்து விற்பவர்கள்

வாழ்வாங்கு வாழ்கிறார்கள் !


எங்களின்

தாகத்தைத் தணிக்கிற

ஊற்றும் நீயே !

எங்களின்

வாசிப்பில் நிறைகிற

காற்றும் நீயே !


சில சமயங்களில்

போதையை ஊட்டுவதால்

நீ , கள் !

பல சமயங்களில்

பாதையைக் காட்டுவதால்

நீயே , கடவுள் !


இப்போதே

இறப்பதென்றாலும் ,

இறைவனிடம் கேட்கவிருப்பது

ஒன்றே ஒன்று தான !


" இறைவா !

கடைசிச் சொட்டு உயிரை

கணநேரமாவது ,

நாக்கில் நிலைநிறுத்து !

'தமிழ் ' எனச்சொல்லிவிட்டு

தன்மானத்தோடு சாகிறேன் "


- என்பதுதான் அது !!!



Comments

Popular posts from this blog

அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
அபார்ட்மெண்ட் சிறுவனே ................... அடே ! சிறுவா ! உன்னைத்தான் ! இங்கே பார் ! கணினி விளையாட்டை கணநேரம் ஒத்திவை ! கேள் ! விரிந்திருகிறது வீதி !  அதில், விளையாடுவது தானே நீதி ? கட்டம் கட்டு, குறுக்கே கோடிடு ! ஆடலாம் சடுகுடு ! கைக்குட்டை எடு , கண்ணைக் கட்டு ! ஆடு கண்ணாமூச்சி ! ஓடித்தொடுதல் ஆடியதுண்டா ? ஒற்றைக் காலிலும் ஓடித் தொடலாம் ! அதற்குப் பெயர்தான் நொண்டி ! ஆரோக்கியக் காசுகள் சேர்ப்பதில், அதுவொரு அற்புத உண்டி ! அப்புறம் இன்னோர் விளையாட்டு ! ஒருகால் மடக்கிக் குந்து ! தேவையில்லை பந்து ! குச்சியால் குச்சியை உந்து ! எம்பியெழுவதை, ' கில்லித்தட்டு '   -  என்றே நீ சொல்லித்தட்டு !  நிறம் கூறித் துரத்தும் ஆட்டம் பரிச்சையமுண்டா ? திருடன் போலீஸ் தெரியுமா ? நூல் பிடித்தோடி பட்டம் விட்டதில்லையா ? உத்திரத்தில் கயிறு கட்டி தூரி.............? என்னடா உனக்கு எதுவுமே தெரியவில்லை ! மேற்கண்ட விளையாட்டில் வலிமையாகும் உன் தசை ! வெறும் கணினியைத் தட்டுவதில் விரலுக்கு மட்டுமே விசை ! யாருமில்லையா வீட்டில் ? ஓ ! இரவுப்பணி முடித்து இன்னும் உறங்கும் தந்தை ! அழகுநிலையம் சென்று...
கலி , கலாச்சாரம், கற்பு கலி இங்கே முற்றிவிட்டது ! கலாச்சார நதி வற்றிவிட்டது ! நாகரீகத் தீ பற்றிவிட்டது ! ஆபாசப் பாம்பு சுற்றிவிட்டது ! எல்லாம் இங்கே கெட்டு விட்டது ! பண்பாட்டு மரம் பட்டு விட்டது ! எல்லாருமே காமத்தில் கொழுக்கிறார்கள் ! பெரும்பாலோர் பிஞ்சிலேயே பழுக்கிறார்கள் ! சல்லடை போட்டுத் தேடினாலும் கற்புக்கரசர்களை - இங்கு காண முடியாது ! ஸ்ரீ ராமனே வந்தாலும் நூறு சதம் கற்பை - இனி பேண முடியாது ! ஒருத்திக்கு ஒருவன் என்றில்லாத நிலை வரப்போகிறது ! கண்காட்சிக் கூடத்தில் கற்புக்கும் ஒரு சிலை வரப்போகிறது ! கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு சிதையப் போகிறது ! உறவெனும் கோவில் உருத்தெரியாமல் புதையப் போய்கிறது ! அதென்ன அச்சு பிசகாமல் அழகானவர்களுக்கே காதல் வருகிறது ! சொல்லி வைத்தாற்போல சொடக்குப் போடுவதற்குள் மோதல் வருகிறது ! எல்லா காதலர்களும் காது சூடேற பேசுகிறார்கள் காமத்தை ! மோகத்தீயில் வேக வைக்கிறார்கள் அர்த்தராத்திரி சாமத்தை ! அலைபேசியில் அழைக்கும் போது மாறிவிடுகிறது ...