Skip to main content
தமிழ்


அன்னையால்

அறிமுகப்படுத்தப்பட்ட

ஆதிஅன்னை நீ !


விவரம் தெரிந்த பிறகு

தாய்பாலினும் மூத்தபால் ,

முப்பால் என அறிந்தோம் !


அறப்பசியையும் ,

அறிவுப்பசியையும் ,

அதனை அருந்தித்தான்

ஆற்றிக்கொண்டோம் !


வீரம் ,

உன்னிலிருந்து விளைந்ததுதான் !

காதல் கூட - நீ

கற்றுத்தந்தது தான !


உன்னைக்

காதாறக் கேட்டவர்கள் ,

செவியாலும் சுவை உணர முடியும் !

செவியாலும் மணம் நுகர முடியும் !

என பேதையைப் போல

போதையில் புலம்பிச் செல்கிறார்கள் !


உன்னைப் படித்துக்கொண்டே

உண்ணும் உணவுதான்

நிலா இல்லாத சமயங்களில்

எங்களுக்கான நிலாச்சோறு !

அது ,

அன்னையால் ஊட்டப்படும்

அன்புச்சோறு ! அறிவுச்சோறு !


கற்பனைக் கருவாகி

மொழிவழியே உருவாகி

உன்னை நீயே

படைத்துக் கொள்வதில்

இங்கே எண்ணற்ற படைப்பாளிகள்
உருவாகி விடுகிறார்கள் !


எங்களின் பிழைப்பே

உன்னால் தான நடக்கிறது !

உன்னை

விண்டெடுத்து விற்பவர்கள்

வாழ்வாங்கு வாழ்கிறார்கள் !


எங்களின்

தாகத்தைத் தணிக்கிற

ஊற்றும் நீயே !

எங்களின்

வாசிப்பில் நிறைகிற

காற்றும் நீயே !


சில சமயங்களில்

போதையை ஊட்டுவதால்

நீ , கள் !

பல சமயங்களில்

பாதையைக் காட்டுவதால்

நீயே , கடவுள் !


இப்போதே

இறப்பதென்றாலும் ,

இறைவனிடம் கேட்கவிருப்பது

ஒன்றே ஒன்று தான !


" இறைவா !

கடைசிச் சொட்டு உயிரை

கணநேரமாவது ,

நாக்கில் நிலைநிறுத்து !

'தமிழ் ' எனச்சொல்லிவிட்டு

தன்மானத்தோடு சாகிறேன் "


- என்பதுதான் அது !!!



Comments

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்குபோட்டுப் பிரிப்பதுதான் ! ஏதோவொன்றை எண்ணைச்சட்டியில் பொரிப்பதுதான் ! நரகாசுரன் நமக்குள்ளே மரிப்பதுதான் ! ஒரு சங்கல்பத்தை நெஞ்சுக்குள் வரிப்பதுதான் ! வண்ண வேடிக்கையை வான் வெளியில் விர