Skip to main content
வந்தாலும் வரலாம்




வெளியே

வெயிலின் தலைவன்

உச்சியில் இருந்தான் !



வெக்கையில்

வெந்த தேகம்

சடுதியில் சக்கையானது !



எவனைப்பார்த்தாலும்

எரிச்சலாய் இருந்தது !


சென்றவிடமெல்லாம்

சாக்கடை மணத்தது !


யாவருக்கும்

முன்மண்டையில்

உற்பத்தியாகிப் பொழிந்தது

வியர்வையின் அருவி !


ஆசைகள்

ஆயுளை நீட்டின !


மருந்துகள்

மரணத்தை ஒத்திப்போட்டன !


விளைவாய் ,

கும்பல் கும்பலாய்

கூட்டம் கூடிக் கும்மியடித்தது !


விலகாமலேயே

விலக்கப்பட்டார்கள் !


நெருங்காமலேயே

நெருக்கப்பட்டார்கள் !


நடக்காமலேயே

நகர்த்தப்பட்டார்கள் !


சிந்தையில்லா

மனிதர்கள்

மந்தையைப்போல

மிரண்டு ஓடினர் !


பேருந்தில்

பெருங்கூட்டம் !


உணவகத்தில்

உலகக்கூட்டம் !


கடைகளில்

கணக்கில்லாத கூட்டம் !


திரையரங்குகளில்

திருவிழாக்கூட்டம் !


வண்டிக்காரன் ஒருவன்

முண்டியடித்து

சண்டித்தனம் செய்தான்

சீருடைக் காவலன் ஒருவன் - அவனை

தண்டிப்பேன் என கண்டித்தான் !


போக்குவரத்தின்

நெரிசலில்

வரிசையின் தர்மம்

விரிசல் கண்டது !


நகர்ந்து செல்லும் வாகனங்கள்

நொடி நேரம் நின்றாலும் - அன்றைய

நாளின் பொழுது நடுச்சாலையில் தான் !


சத்தம் அதிகமாய் இருந்தவனே
யுத்தத்தில் வென்றான் !

உலகறியாத குழந்தைகள்

உரத்து அழுதன !


தம்பதிகளின்

தெருச்சண்டையில்

தாம்பத்தியம்

தரம் தாழ்ந்தது !


வகையாய்க் குடித்த

வாலிபர்கள் வஞ்சங்களை

வசைபாடித் தீர்த்துக் கொண்டனர் !


எவளோ எவளையோ

முறைத்தாள் !


எவனோ எவனையோ

அறைந்தான் !


மனதை ரணப்படுத்தும்

நாக்குச் சாட்டை

சுதந்திரமாய்ச்

சொடுக்கப்பட்டது !


நான்கு திசைகளிலும்

நாராச ஒலி

செறிந்து செறிந்து

உச்சத்தை அடைய ,


கேட்டது ,


பேரிரைச்சல் அல்ல

பேய் இரைச்சல் !


காதுகளில் பாய்ந்தது


நகரத்தின் சத்தம் அல்ல

நரகத்தின் சத்தம் !


அடுத்த

பத்தாண்டுகளில்

பூங்காவிற்குச் செல்வதென்றாலும்

பதிவு செய்து காத்திருக்க வேண்டும் !


நடைபயிலுவதற்கும்

நடைபாதைச் சீட்டு வாங்க நேரிடும் !


வீதிகளில் உலவுவதற்கு

விலக்கு வந்தாலும் வரலாம் !!!




Comments

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்குபோட்டுப் பிரிப்பதுதான் ! ஏதோவொன்றை எண்ணைச்சட்டியில் பொரிப்பதுதான் ! நரகாசுரன் நமக்குள்ளே மரிப்பதுதான் ! ஒரு சங்கல்பத்தை நெஞ்சுக்குள் வரிப்பதுதான் ! வண்ண வேடிக்கையை வான் வெளியில் விர