Skip to main content
வந்தாலும் வரலாம்




வெளியே

வெயிலின் தலைவன்

உச்சியில் இருந்தான் !



வெக்கையில்

வெந்த தேகம்

சடுதியில் சக்கையானது !



எவனைப்பார்த்தாலும்

எரிச்சலாய் இருந்தது !


சென்றவிடமெல்லாம்

சாக்கடை மணத்தது !


யாவருக்கும்

முன்மண்டையில்

உற்பத்தியாகிப் பொழிந்தது

வியர்வையின் அருவி !


ஆசைகள்

ஆயுளை நீட்டின !


மருந்துகள்

மரணத்தை ஒத்திப்போட்டன !


விளைவாய் ,

கும்பல் கும்பலாய்

கூட்டம் கூடிக் கும்மியடித்தது !


விலகாமலேயே

விலக்கப்பட்டார்கள் !


நெருங்காமலேயே

நெருக்கப்பட்டார்கள் !


நடக்காமலேயே

நகர்த்தப்பட்டார்கள் !


சிந்தையில்லா

மனிதர்கள்

மந்தையைப்போல

மிரண்டு ஓடினர் !


பேருந்தில்

பெருங்கூட்டம் !


உணவகத்தில்

உலகக்கூட்டம் !


கடைகளில்

கணக்கில்லாத கூட்டம் !


திரையரங்குகளில்

திருவிழாக்கூட்டம் !


வண்டிக்காரன் ஒருவன்

முண்டியடித்து

சண்டித்தனம் செய்தான்

சீருடைக் காவலன் ஒருவன் - அவனை

தண்டிப்பேன் என கண்டித்தான் !


போக்குவரத்தின்

நெரிசலில்

வரிசையின் தர்மம்

விரிசல் கண்டது !


நகர்ந்து செல்லும் வாகனங்கள்

நொடி நேரம் நின்றாலும் - அன்றைய

நாளின் பொழுது நடுச்சாலையில் தான் !


சத்தம் அதிகமாய் இருந்தவனே
யுத்தத்தில் வென்றான் !

உலகறியாத குழந்தைகள்

உரத்து அழுதன !


தம்பதிகளின்

தெருச்சண்டையில்

தாம்பத்தியம்

தரம் தாழ்ந்தது !


வகையாய்க் குடித்த

வாலிபர்கள் வஞ்சங்களை

வசைபாடித் தீர்த்துக் கொண்டனர் !


எவளோ எவளையோ

முறைத்தாள் !


எவனோ எவனையோ

அறைந்தான் !


மனதை ரணப்படுத்தும்

நாக்குச் சாட்டை

சுதந்திரமாய்ச்

சொடுக்கப்பட்டது !


நான்கு திசைகளிலும்

நாராச ஒலி

செறிந்து செறிந்து

உச்சத்தை அடைய ,


கேட்டது ,


பேரிரைச்சல் அல்ல

பேய் இரைச்சல் !


காதுகளில் பாய்ந்தது


நகரத்தின் சத்தம் அல்ல

நரகத்தின் சத்தம் !


அடுத்த

பத்தாண்டுகளில்

பூங்காவிற்குச் செல்வதென்றாலும்

பதிவு செய்து காத்திருக்க வேண்டும் !


நடைபயிலுவதற்கும்

நடைபாதைச் சீட்டு வாங்க நேரிடும் !


வீதிகளில் உலவுவதற்கு

விலக்கு வந்தாலும் வரலாம் !!!




Comments

Popular posts from this blog

அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
அபார்ட்மெண்ட் சிறுவனே ................... அடே ! சிறுவா ! உன்னைத்தான் ! இங்கே பார் ! கணினி விளையாட்டை கணநேரம் ஒத்திவை ! கேள் ! விரிந்திருகிறது வீதி !  அதில், விளையாடுவது தானே நீதி ? கட்டம் கட்டு, குறுக்கே கோடிடு ! ஆடலாம் சடுகுடு ! கைக்குட்டை எடு , கண்ணைக் கட்டு ! ஆடு கண்ணாமூச்சி ! ஓடித்தொடுதல் ஆடியதுண்டா ? ஒற்றைக் காலிலும் ஓடித் தொடலாம் ! அதற்குப் பெயர்தான் நொண்டி ! ஆரோக்கியக் காசுகள் சேர்ப்பதில், அதுவொரு அற்புத உண்டி ! அப்புறம் இன்னோர் விளையாட்டு ! ஒருகால் மடக்கிக் குந்து ! தேவையில்லை பந்து ! குச்சியால் குச்சியை உந்து ! எம்பியெழுவதை, ' கில்லித்தட்டு '   -  என்றே நீ சொல்லித்தட்டு !  நிறம் கூறித் துரத்தும் ஆட்டம் பரிச்சையமுண்டா ? திருடன் போலீஸ் தெரியுமா ? நூல் பிடித்தோடி பட்டம் விட்டதில்லையா ? உத்திரத்தில் கயிறு கட்டி தூரி.............? என்னடா உனக்கு எதுவுமே தெரியவில்லை ! மேற்கண்ட விளையாட்டில் வலிமையாகும் உன் தசை ! வெறும் கணினியைத் தட்டுவதில் விரலுக்கு மட்டுமே விசை ! யாருமில்லையா வீட்டில் ? ஓ ! இரவுப்பணி முடித்து இன்னும் உறங்கும் தந்தை ! அழகுநிலையம் சென்று...
கலி , கலாச்சாரம், கற்பு கலி இங்கே முற்றிவிட்டது ! கலாச்சார நதி வற்றிவிட்டது ! நாகரீகத் தீ பற்றிவிட்டது ! ஆபாசப் பாம்பு சுற்றிவிட்டது ! எல்லாம் இங்கே கெட்டு விட்டது ! பண்பாட்டு மரம் பட்டு விட்டது ! எல்லாருமே காமத்தில் கொழுக்கிறார்கள் ! பெரும்பாலோர் பிஞ்சிலேயே பழுக்கிறார்கள் ! சல்லடை போட்டுத் தேடினாலும் கற்புக்கரசர்களை - இங்கு காண முடியாது ! ஸ்ரீ ராமனே வந்தாலும் நூறு சதம் கற்பை - இனி பேண முடியாது ! ஒருத்திக்கு ஒருவன் என்றில்லாத நிலை வரப்போகிறது ! கண்காட்சிக் கூடத்தில் கற்புக்கும் ஒரு சிலை வரப்போகிறது ! கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு சிதையப் போகிறது ! உறவெனும் கோவில் உருத்தெரியாமல் புதையப் போய்கிறது ! அதென்ன அச்சு பிசகாமல் அழகானவர்களுக்கே காதல் வருகிறது ! சொல்லி வைத்தாற்போல சொடக்குப் போடுவதற்குள் மோதல் வருகிறது ! எல்லா காதலர்களும் காது சூடேற பேசுகிறார்கள் காமத்தை ! மோகத்தீயில் வேக வைக்கிறார்கள் அர்த்தராத்திரி சாமத்தை ! அலைபேசியில் அழைக்கும் போது மாறிவிடுகிறது ...