Skip to main content
பெண்கள்

தெருவில்
நடந்து போகையில் - கன்னிகள்
கடந்து போக வேண்டும் !

திரையரங்கில்
திரும்பிய பக்கமெல்லாம்
தேவதைகள் தெரிய வேண்டும் !

பழரசக் கடைகளில்
பருகுவதற்கு ,
பைங்கிளிகள்
பக்கத்தில் வேண்டும் !

கோவில்களில்
கையெடுத்துக் கும்பிட
கடவுள் இருந்தாலும்
கண்ணெடுத்துப் பார்க்க
குமரிகளும் கூட வேண்டும் !

"வலைக்குள் " நுழைந்தால்
வகையான வஞ்சிக்கொடிகள்
வசமாகச் சிக்க வேண்டும் !

பக்கத்து வீட்டில்
பருவச்சிட்டுக்கள் வலம்வந்தால்
போகாத பொழுதும்
போகாமல் போகும் !

அவனி முழுக்க
அம்சமான திம்சுக்கட்டைகள்
பவனி வந்தால்
அறுபதிலும் ஆசை நரைக்காது !

முப்பது கடக்காத
"மேடம் " ஒருத்தி
மேலதிகாரியாக
வந்து வாய்த்தால்
கடினப் பணியையும்
கடிதே முடிக்கலாம் !

பேருந்தில் போகும்போது
பக்கத்து இருக்கையில்
பதுமை ஒருத்தி
பாங்காய் வந்தமர்ந்தால்
பழகிய பயணமும்
புதுமையாகத் தோன்றும் !

மருத்துவ மனைகளில்

மலர்கொடிகள் உலாவந்தால்

நோய்க்கட்டிலில்

சேயைப்போல

துள்ளிக் குதிக்கலாம் !


உற்ற தோழிகள்

உடனிருந்தால்

வாலிபத்தின் பாலையில்

சோலைகள் தென்படும் !


கண்ணீர்த்துளிகளை

ஏந்திக்கொள்ள

காதலியின் மடிஇருந்தால்

கவலைகளைப் பற்றிக்

கவலையே இல்லை !

Comments

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்குபோட்டுப் பிரிப்பதுதான் ! ஏதோவொன்றை எண்ணைச்சட்டியில் பொரிப்பதுதான் ! நரகாசுரன் நமக்குள்ளே மரிப்பதுதான் ! ஒரு சங்கல்பத்தை நெஞ்சுக்குள் வரிப்பதுதான் ! வண்ண வேடிக்கையை வான் வெளியில் விர