Skip to main content
சொல்லி விடு அன்பே



ஒரே ஒரு முறை
சொல்லி விடு !

என் மீதான
உனது காதலை
ஒரே ஒரு முறை
சொல்லிவிடு !


நானாக எனது காதலை

உன்னிடம் சொன்னபோது கூட - நீ

மௌனமாகத்தான் கேட்டுக்கொண்டாய்

அதை நான்

சம்மதமாக எடுத்துக்கொண்டேன் !


உனக்கான

காலை வணக்கத்தை

குறுஞ்செய்தியில் வருவிக்கிறேன் !


மதிய வணக்கத்தை

மின்னஞ்சலில் தெரிவிக்கிறேன் !


இரவு வணக்கத்தை

அலைபேசியில் அறிவிக்கிறேன் !


ஆனால் ,


சிலநேரங்களில் நீ

சிரிப்பதே இல்லை !


அலைபேசியில் கூட

அளந்துதான் பேசுகிறாய் !


பெரும்பாலும்

நானே பேசுகிறேன்

நீ கேட்டுக்கொண்டு இருக்கிறாய் !


எனது

பிறந்தநாளன்று தான்

உனது

புன்னகையே பார்க்கக் கிடைத்தது !


நாணம் மறந்திருப்பாயென

நானாகத் தொட்டாலும்

தீயாக சுட்டதென

நீயாக விலகிக் கொள்கிறாய் - காதல்

நோயாகக் கசக்கிறது !


கோவிலில் கூட

கடவுளோடுதான் பேசுகிறேன் !


கடற்கரைகளில்

காற்றுதான் வாங்க முடிகிறது !


திரையரங்குகளில்

திரையைத்தான் பார்க்கிறோம் !


வண்டியில் அமர்ந்தாலும்

விலகியே அமர்கிறாய் !


நாசுக்காய்ப் பழகுவதென்றால்

நண்பர்களாகவே இருந்து விடலாம் !


கனவில்தான் காதலென்றால்

கண்ணியமாகப் பிரிந்துவிடலாம் !


அம்மா

அதட்டுவாள் !


தந்தை

திட்டுவார் !


அண்ணன்

ஆவேசப்படுவான் !


என்றெல்லாம்

சாக்கு சொல்கிறாய் !


இங்கே உனக்கென்று

இன்னொரு இதயம் துடிப்பதை

உணர மறுக்கிறாய் !


வணக்கங்கள் இல்லையென்றால் - காதல்

வாழாது போலிருக்கிறது !


ஆகையால்

இனிமேலாவது அன்பே ,


காலை வணக்கத்தை

கனிவோடு அனுப்பு !


மதிய வணக்கத்தை

மகிழ்வாய்த் தெரிவி !


இரவு வணக்கத்தை

இனிமைகாகக் கூறு !


செல்ல சீண்டலை

சிறிதேனும் அனுமதி !


இன்பப் புன்னகையை

இயன்றவரை வீசிச்செல்


தொட்டுப்பேச

விட்டுக்கொடு !


கெஞ்சிய பிறகாவது

கொஞ்ச விடு !


பார்வையிலாவது
அணைக்க விடு !


வெள்ளிக்கிழமைஎன்றால்

சேலையில் வா !


முத்தத்தை

காற்றிலாவது அனுப்பு !


கணநேரமாவது

காதலோடு பார் !


வேண்டாம் என்பதையும்

வெட்கத்தோடு சொல் !


நகர்ந்து சென்றாலும்

நாணத்தோடு செல் !


விலக்கி விட்டாலும்

விலகி விடாதே !


அலைபேசியில் நீயாக

அவ்வப்போது அழை !


கைகளைக் கோர்த்துக்கொண்டு

காலாற நடப்போமே !


இதெல்லாம் கூடத்

தேவை இல்லை !


என்மீதான உனது காதலை

நீ இதுவரை சொல்லவே இல்லை !



நானாக எனது காதலை
உன்னிடம் சொன்னபோது கூட - நீ
மௌனமாகத்தான் கேட்டுக்கொண்டாய்
அதை நான்
சம்மதமாக எடுத்துக்கொண்டேன் !

ஆகவே அன்பே ,


ஒரே ஒரு முறை
சொல்லி விடு !

என் மீதான
உனது காதலை
ஒரே ஒரு முறை
சொல்லிவிடு !











Comments

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்குபோட்டுப் பிரிப்பதுதான் ! ஏதோவொன்றை எண்ணைச்சட்டியில் பொரிப்பதுதான் ! நரகாசுரன் நமக்குள்ளே மரிப்பதுதான் ! ஒரு சங்கல்பத்தை நெஞ்சுக்குள் வரிப்பதுதான் ! வண்ண வேடிக்கையை வான் வெளியில் விர