Skip to main content
சொல்லி விடு அன்பே



ஒரே ஒரு முறை
சொல்லி விடு !

என் மீதான
உனது காதலை
ஒரே ஒரு முறை
சொல்லிவிடு !


நானாக எனது காதலை

உன்னிடம் சொன்னபோது கூட - நீ

மௌனமாகத்தான் கேட்டுக்கொண்டாய்

அதை நான்

சம்மதமாக எடுத்துக்கொண்டேன் !


உனக்கான

காலை வணக்கத்தை

குறுஞ்செய்தியில் வருவிக்கிறேன் !


மதிய வணக்கத்தை

மின்னஞ்சலில் தெரிவிக்கிறேன் !


இரவு வணக்கத்தை

அலைபேசியில் அறிவிக்கிறேன் !


ஆனால் ,


சிலநேரங்களில் நீ

சிரிப்பதே இல்லை !


அலைபேசியில் கூட

அளந்துதான் பேசுகிறாய் !


பெரும்பாலும்

நானே பேசுகிறேன்

நீ கேட்டுக்கொண்டு இருக்கிறாய் !


எனது

பிறந்தநாளன்று தான்

உனது

புன்னகையே பார்க்கக் கிடைத்தது !


நாணம் மறந்திருப்பாயென

நானாகத் தொட்டாலும்

தீயாக சுட்டதென

நீயாக விலகிக் கொள்கிறாய் - காதல்

நோயாகக் கசக்கிறது !


கோவிலில் கூட

கடவுளோடுதான் பேசுகிறேன் !


கடற்கரைகளில்

காற்றுதான் வாங்க முடிகிறது !


திரையரங்குகளில்

திரையைத்தான் பார்க்கிறோம் !


வண்டியில் அமர்ந்தாலும்

விலகியே அமர்கிறாய் !


நாசுக்காய்ப் பழகுவதென்றால்

நண்பர்களாகவே இருந்து விடலாம் !


கனவில்தான் காதலென்றால்

கண்ணியமாகப் பிரிந்துவிடலாம் !


அம்மா

அதட்டுவாள் !


தந்தை

திட்டுவார் !


அண்ணன்

ஆவேசப்படுவான் !


என்றெல்லாம்

சாக்கு சொல்கிறாய் !


இங்கே உனக்கென்று

இன்னொரு இதயம் துடிப்பதை

உணர மறுக்கிறாய் !


வணக்கங்கள் இல்லையென்றால் - காதல்

வாழாது போலிருக்கிறது !


ஆகையால்

இனிமேலாவது அன்பே ,


காலை வணக்கத்தை

கனிவோடு அனுப்பு !


மதிய வணக்கத்தை

மகிழ்வாய்த் தெரிவி !


இரவு வணக்கத்தை

இனிமைகாகக் கூறு !


செல்ல சீண்டலை

சிறிதேனும் அனுமதி !


இன்பப் புன்னகையை

இயன்றவரை வீசிச்செல்


தொட்டுப்பேச

விட்டுக்கொடு !


கெஞ்சிய பிறகாவது

கொஞ்ச விடு !


பார்வையிலாவது
அணைக்க விடு !


வெள்ளிக்கிழமைஎன்றால்

சேலையில் வா !


முத்தத்தை

காற்றிலாவது அனுப்பு !


கணநேரமாவது

காதலோடு பார் !


வேண்டாம் என்பதையும்

வெட்கத்தோடு சொல் !


நகர்ந்து சென்றாலும்

நாணத்தோடு செல் !


விலக்கி விட்டாலும்

விலகி விடாதே !


அலைபேசியில் நீயாக

அவ்வப்போது அழை !


கைகளைக் கோர்த்துக்கொண்டு

காலாற நடப்போமே !


இதெல்லாம் கூடத்

தேவை இல்லை !


என்மீதான உனது காதலை

நீ இதுவரை சொல்லவே இல்லை !



நானாக எனது காதலை
உன்னிடம் சொன்னபோது கூட - நீ
மௌனமாகத்தான் கேட்டுக்கொண்டாய்
அதை நான்
சம்மதமாக எடுத்துக்கொண்டேன் !

ஆகவே அன்பே ,


ஒரே ஒரு முறை
சொல்லி விடு !

என் மீதான
உனது காதலை
ஒரே ஒரு முறை
சொல்லிவிடு !











Comments

Popular posts from this blog

அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
அபார்ட்மெண்ட் சிறுவனே ................... அடே ! சிறுவா ! உன்னைத்தான் ! இங்கே பார் ! கணினி விளையாட்டை கணநேரம் ஒத்திவை ! கேள் ! விரிந்திருகிறது வீதி !  அதில், விளையாடுவது தானே நீதி ? கட்டம் கட்டு, குறுக்கே கோடிடு ! ஆடலாம் சடுகுடு ! கைக்குட்டை எடு , கண்ணைக் கட்டு ! ஆடு கண்ணாமூச்சி ! ஓடித்தொடுதல் ஆடியதுண்டா ? ஒற்றைக் காலிலும் ஓடித் தொடலாம் ! அதற்குப் பெயர்தான் நொண்டி ! ஆரோக்கியக் காசுகள் சேர்ப்பதில், அதுவொரு அற்புத உண்டி ! அப்புறம் இன்னோர் விளையாட்டு ! ஒருகால் மடக்கிக் குந்து ! தேவையில்லை பந்து ! குச்சியால் குச்சியை உந்து ! எம்பியெழுவதை, ' கில்லித்தட்டு '   -  என்றே நீ சொல்லித்தட்டு !  நிறம் கூறித் துரத்தும் ஆட்டம் பரிச்சையமுண்டா ? திருடன் போலீஸ் தெரியுமா ? நூல் பிடித்தோடி பட்டம் விட்டதில்லையா ? உத்திரத்தில் கயிறு கட்டி தூரி.............? என்னடா உனக்கு எதுவுமே தெரியவில்லை ! மேற்கண்ட விளையாட்டில் வலிமையாகும் உன் தசை ! வெறும் கணினியைத் தட்டுவதில் விரலுக்கு மட்டுமே விசை ! யாருமில்லையா வீட்டில் ? ஓ ! இரவுப்பணி முடித்து இன்னும் உறங்கும் தந்தை ! அழகுநிலையம் சென்று...
கலி , கலாச்சாரம், கற்பு கலி இங்கே முற்றிவிட்டது ! கலாச்சார நதி வற்றிவிட்டது ! நாகரீகத் தீ பற்றிவிட்டது ! ஆபாசப் பாம்பு சுற்றிவிட்டது ! எல்லாம் இங்கே கெட்டு விட்டது ! பண்பாட்டு மரம் பட்டு விட்டது ! எல்லாருமே காமத்தில் கொழுக்கிறார்கள் ! பெரும்பாலோர் பிஞ்சிலேயே பழுக்கிறார்கள் ! சல்லடை போட்டுத் தேடினாலும் கற்புக்கரசர்களை - இங்கு காண முடியாது ! ஸ்ரீ ராமனே வந்தாலும் நூறு சதம் கற்பை - இனி பேண முடியாது ! ஒருத்திக்கு ஒருவன் என்றில்லாத நிலை வரப்போகிறது ! கண்காட்சிக் கூடத்தில் கற்புக்கும் ஒரு சிலை வரப்போகிறது ! கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு சிதையப் போகிறது ! உறவெனும் கோவில் உருத்தெரியாமல் புதையப் போய்கிறது ! அதென்ன அச்சு பிசகாமல் அழகானவர்களுக்கே காதல் வருகிறது ! சொல்லி வைத்தாற்போல சொடக்குப் போடுவதற்குள் மோதல் வருகிறது ! எல்லா காதலர்களும் காது சூடேற பேசுகிறார்கள் காமத்தை ! மோகத்தீயில் வேக வைக்கிறார்கள் அர்த்தராத்திரி சாமத்தை ! அலைபேசியில் அழைக்கும் போது மாறிவிடுகிறது ...