கவிதையைப் பற்றிய கவிதை
என்ன பார்வை இது ?
தோட்டா கூடத் தோற்றுப்போகும் !
உண்மையைச் சொல்கிறேன்
வெள்ளையான உன் சிரிப்பில் - உள்ளம்
கொள்ளை போய் விட்டது !
உள்ளபடி சொல்கிறேன்
உன்னைப் பார்க்கும் வரை
நான் கவிஞனில்லை !
கண்ணுக்குள்ளே என்ன
கருவட்டக் கருப்பு ?
காந்தமா ?
அங்கத்தில் தங்கமா ?
தங்கத்தில் அங்கமா ?
குழப்பத்தை நிவர்த்தி செய் !
உன்னைப் பார்த்த பிறகு
என்னை நானே கிள்ளிப் பார்க்கிறேன் !
ஏனெனில் எனக்கு எப்போதும்
கனவில்தான் தேவதைகள் தெரிவார்கள் !
என்னைக் கொல்ல வேண்டுமென்று
நீ நினைத்தால்
இன்னும் கொஞ்சம் சிரி !
உன்னைப் பார்த்த பிறகு
நான் முதலில்
காதலைத்தான் காதலித்தேன் !
உனது புகைப்படத்தைத் தான்
வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தேன்
ஒருமணிநேரம் போனது தெரியவில்லை !
உன்னை உள்ளபடியே புகழ
தமிழில் தற்போது வார்த்தைகள் இல்லை
தமிழிலிலேயே இல்லையென்றால் இனி
தேவபாஷையைத் தான் தேடிக் கற்கவேண்டும் !
இந்த கிரகத்தின்
இன்னொரு நிலவா நீ ?
இப்படி ஜொலிக்கிறாய் !
சரி சரி.....
பார்வையால் பேசும் கலையை
எங்கு கற்றாய் ?
அதைச் சொல் முதலில் !
உனக்கொரு உவமையைச் சொல்ல
உலகக் கவிஞர்கள் ,
ஒன்றுகூடி மன்றாடுகிறார்கள் !
ம்ம்ஹூம் முடியவில்லை !
உன்னைப் பற்றி எழுதியதால்
இது
கவிதையைப் பற்றிய கவிதையாகிறது !!!
Comments
Post a Comment