Skip to main content
நேற்றுப்பெய்த மழையில் .............




நேற்றுப்பெய்த மழையில் ,

பூமி புதிதாய்த் தெரிந்தது !




மேகங்களின் தன்மை ,

வெண்மையாய் இருக்க ,

வானத்தின் நிறம்

நீலமாய்த் தெரிந்தது !




பறவைகள் ,

சந்தோஷமாய் சிறகடித்தன !




அலாரம் வைக்காமலேயே

ஆறு மணிக்கு விழிப்பு வந்தது !




கதிரவனைக் கண்டதும்

ைகள் தானாய்க் கும்பிட்டன !




அம்மா தந்த தேநீர்

திகட்டாமல் தித்தித்தது !




குளிர்ந்த நீரும்

சுகமாய்ச் சுட்டது !




அதிசயமாய்

அப்பா கூட திட்டவில்லை !




தங்கை அன்போடு

" அண்ணா " என்றழைத்தாள்




தெருவில் நடந்தேன்

அன்றைக்கென்று

அனைவரின் வாசல்களிலும்

அழகான கோலங்கள் !

அழித்துவிடக்கூடாதென்ற

அச்சத்தோடு

அடி மேல் அடி வைத்தேன் !




தாயோடு வந்த சிறுமி ஒருத்தி ,

தொலைவில் இருந்தே புன்னகைத்தாள் !




எப்போதும் அழுகிற குழந்தை ,

இப்போது சிரித்தது !




மாமரம் ஒன்று

மழை நீரால் ஆசீர்வதித்தது !




குறுக்கே வந்த வாகனக்காரன்

சீறாமல் சிரித்துச்சென்றான் !




பெருமுயற்சிகள் ஏதுமின்றி

பேருந்தில் சன்னலோரம்

இடம் கிடைத்தது !




பக்கத்து இருக்கையில்

அமர்ந்த பாட்டி ,

பாசமாகப் பார்த்தாள் !



பயணச்சீட்டு வாங்க

பத்து ரூபாயை நீட்டினேன் .

நான்கு ரூபாய் மீதியை

நடத்துனர் " நாணயமாக "

கொடுத்துப் போனார் !



முகத்தில் அறைந்த காற்றில் ,

குளிருக்கு பதிலாக

குளுமை இருந்தது !



என்றைக்கும் போல

பள்ளி ,

பயங்கரமாகத் தெரியவில்லை !



பிடிக்காத வாத்தியாருக்கும்

பண்போடு வணக்கம் வைத்தேன் !



மூன்றாம் வகுப்பு மல்லிகா

மகிழ்ச்சியோடு

மிட்டாய் தந்தாள் !



புதிய பாடம் ஒன்று

படித்ததில் பதிந்தது !

கடினக் கணக்கு ஒன்று

கவனித்ததில் புரிந்தது !



அன்று ஏனோ

பக்கத்து வீட்டு

பள்ளித்தோழன்

பகல் உணவு கொண்டுவரவில்லை !


ஏன் என்றதற்கு ,


" நேற்றுப் பெய்த மழையில் நனைந்தது

கூரை மட்டுமல்ல

எங்கள் வீட்டின் தரையும் தான் !

இரவெல்லாம் ,

தண்ணீரை வாரிஇரைத்தே - அம்மா

தெம்பில்லாமல் படுத்து விட்டாள் ! " என்றான் .



அவனுக்கு என்

பகல் உணவைப்

பகிர்ந்தளித்தேன் !

பசியோடு புசித்தான் !



அதன் பிறகு ,

இன்றைக்கும் மழை

பெய்ய வேண்டும் என

இறைவனிடம் வைக்கவிருந்த

கோரிக்கையை

இறுதியாய் இரத்து செய்தேன் !!!









Comments

Popular posts from this blog

அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
அபார்ட்மெண்ட் சிறுவனே ................... அடே ! சிறுவா ! உன்னைத்தான் ! இங்கே பார் ! கணினி விளையாட்டை கணநேரம் ஒத்திவை ! கேள் ! விரிந்திருகிறது வீதி !  அதில், விளையாடுவது தானே நீதி ? கட்டம் கட்டு, குறுக்கே கோடிடு ! ஆடலாம் சடுகுடு ! கைக்குட்டை எடு , கண்ணைக் கட்டு ! ஆடு கண்ணாமூச்சி ! ஓடித்தொடுதல் ஆடியதுண்டா ? ஒற்றைக் காலிலும் ஓடித் தொடலாம் ! அதற்குப் பெயர்தான் நொண்டி ! ஆரோக்கியக் காசுகள் சேர்ப்பதில், அதுவொரு அற்புத உண்டி ! அப்புறம் இன்னோர் விளையாட்டு ! ஒருகால் மடக்கிக் குந்து ! தேவையில்லை பந்து ! குச்சியால் குச்சியை உந்து ! எம்பியெழுவதை, ' கில்லித்தட்டு '   -  என்றே நீ சொல்லித்தட்டு !  நிறம் கூறித் துரத்தும் ஆட்டம் பரிச்சையமுண்டா ? திருடன் போலீஸ் தெரியுமா ? நூல் பிடித்தோடி பட்டம் விட்டதில்லையா ? உத்திரத்தில் கயிறு கட்டி தூரி.............? என்னடா உனக்கு எதுவுமே தெரியவில்லை ! மேற்கண்ட விளையாட்டில் வலிமையாகும் உன் தசை ! வெறும் கணினியைத் தட்டுவதில் விரலுக்கு மட்டுமே விசை ! யாருமில்லையா வீட்டில் ? ஓ ! இரவுப்பணி முடித்து இன்னும் உறங்கும் தந்தை ! அழகுநிலையம் சென்று...
கலி , கலாச்சாரம், கற்பு கலி இங்கே முற்றிவிட்டது ! கலாச்சார நதி வற்றிவிட்டது ! நாகரீகத் தீ பற்றிவிட்டது ! ஆபாசப் பாம்பு சுற்றிவிட்டது ! எல்லாம் இங்கே கெட்டு விட்டது ! பண்பாட்டு மரம் பட்டு விட்டது ! எல்லாருமே காமத்தில் கொழுக்கிறார்கள் ! பெரும்பாலோர் பிஞ்சிலேயே பழுக்கிறார்கள் ! சல்லடை போட்டுத் தேடினாலும் கற்புக்கரசர்களை - இங்கு காண முடியாது ! ஸ்ரீ ராமனே வந்தாலும் நூறு சதம் கற்பை - இனி பேண முடியாது ! ஒருத்திக்கு ஒருவன் என்றில்லாத நிலை வரப்போகிறது ! கண்காட்சிக் கூடத்தில் கற்புக்கும் ஒரு சிலை வரப்போகிறது ! கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு சிதையப் போகிறது ! உறவெனும் கோவில் உருத்தெரியாமல் புதையப் போய்கிறது ! அதென்ன அச்சு பிசகாமல் அழகானவர்களுக்கே காதல் வருகிறது ! சொல்லி வைத்தாற்போல சொடக்குப் போடுவதற்குள் மோதல் வருகிறது ! எல்லா காதலர்களும் காது சூடேற பேசுகிறார்கள் காமத்தை ! மோகத்தீயில் வேக வைக்கிறார்கள் அர்த்தராத்திரி சாமத்தை ! அலைபேசியில் அழைக்கும் போது மாறிவிடுகிறது ...