Skip to main content
பாசத்தின்
படைத்தலைவனே !

வேதியியலின்
வீரத்தளபதியே !

உழைப்பின் உருவகமே
வியர்வையின் உன்னதமே !

எமல்சனின் எரிமலையே
பாலிமரின் பாயும் புலியே !

அன்புக்கு
அடித்தளம் நீ !
நட்புக்கு
இலக்கணம் நீ !


மனதில் இருப்பதை
மறைக்காத
மாவீரன் நீ !
முதுகின் பின்னே
முறைக்காத
மாமனிதன் நீ !

சோதனைகளில்
சரித்திரம் படைக்கும்
தனித்தலைவன் நீ !
எதிர்ப்புகளை
எதிர்த்து வெல்லும்
ஏகலைவன் நீ !

தோல்வியில்
துவளாத
கஜினி நீ !
வெற்றியில்
மயங்காத
ரஜினி நீ !

ராமதாசின்
ரகசிய தோழன் நீ !
பிரதீசின்
பிரியத்தம்பி நீ !

கருனாகரனிடமும்
கண்ணியமாக
நட்புச் செய்தாய் !
பீட்டரிடமும்
பிரியமான
நேசம் வளர்த்தாய் !

சுரேசைக் கேட்டால்
நீ நல்ல
மனிதன் என்பான் !

ஹரியைக் கேட்டால்
உன்னை ஒரு
புனிதன் என்பான் !

மனோஜோ
உன்னை மட்டும்
மன்னன் என்பான் !

வேலை செய்யும்
வொர்க் மேனும்
உன்னைப் பார்த்தால்
அண்ணன் என்பான் !

பயிற்சிகள்
இல்லாவிட்டாலும்
முயற்சிகள் செய்தே
முன்னேற்றம் கண்டாய் !

திட்டித் திட்டியே
தேவாவைத்
தேர்ச்சி பெறச்செய்தாய் !

சசி எனும் சிங்கம்
உனது பாசறையில் தான்
பாடம் பயின்றது !
தினேஷ் எனும் தங்கம் - நீ
தட்டித் தட்டித்தான்
தகுதி பெற்றது !

காரமான
கருஜகனும்
உன்னைப் பார்த்தால்
உருகிப்போவான் !
வீரமான
வினோபாவும்
உன் கோபம் கண்டு
பணிந்து போவான் !

மாணிக்கம் என்ற பெயர்
கொண்டதாலேயே
நீ விசத்தால் உருவானவன் அல்ல .
வீரத்தால் உருவானவன் !

உனக்கு
உயர்ந்த பரிசென
எங்களின் உள்ளங்களைத்
தருகிறோம் !

உன்
வாழ்க்கைப்பயணத்தின்
வழித்துணைக்கு
வாழ்த்துக்களை
அனுப்பி வைக்கிறோம் !


போட்டியான உலகில்
வெல்லுவதெல்லாம்
நீயாக இருக்க வேண்டும் !
நாளைய சரித்திரம்
சொல்லுவதெல்லாம்
உன் பெயராக இருக்க வேண்டும் !!!









Comments

Popular posts from this blog

அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
அபார்ட்மெண்ட் சிறுவனே ................... அடே ! சிறுவா ! உன்னைத்தான் ! இங்கே பார் ! கணினி விளையாட்டை கணநேரம் ஒத்திவை ! கேள் ! விரிந்திருகிறது வீதி !  அதில், விளையாடுவது தானே நீதி ? கட்டம் கட்டு, குறுக்கே கோடிடு ! ஆடலாம் சடுகுடு ! கைக்குட்டை எடு , கண்ணைக் கட்டு ! ஆடு கண்ணாமூச்சி ! ஓடித்தொடுதல் ஆடியதுண்டா ? ஒற்றைக் காலிலும் ஓடித் தொடலாம் ! அதற்குப் பெயர்தான் நொண்டி ! ஆரோக்கியக் காசுகள் சேர்ப்பதில், அதுவொரு அற்புத உண்டி ! அப்புறம் இன்னோர் விளையாட்டு ! ஒருகால் மடக்கிக் குந்து ! தேவையில்லை பந்து ! குச்சியால் குச்சியை உந்து ! எம்பியெழுவதை, ' கில்லித்தட்டு '   -  என்றே நீ சொல்லித்தட்டு !  நிறம் கூறித் துரத்தும் ஆட்டம் பரிச்சையமுண்டா ? திருடன் போலீஸ் தெரியுமா ? நூல் பிடித்தோடி பட்டம் விட்டதில்லையா ? உத்திரத்தில் கயிறு கட்டி தூரி.............? என்னடா உனக்கு எதுவுமே தெரியவில்லை ! மேற்கண்ட விளையாட்டில் வலிமையாகும் உன் தசை ! வெறும் கணினியைத் தட்டுவதில் விரலுக்கு மட்டுமே விசை ! யாருமில்லையா வீட்டில் ? ஓ ! இரவுப்பணி முடித்து இன்னும் உறங்கும் தந்தை ! அழகுநிலையம் சென்று...
கலி , கலாச்சாரம், கற்பு கலி இங்கே முற்றிவிட்டது ! கலாச்சார நதி வற்றிவிட்டது ! நாகரீகத் தீ பற்றிவிட்டது ! ஆபாசப் பாம்பு சுற்றிவிட்டது ! எல்லாம் இங்கே கெட்டு விட்டது ! பண்பாட்டு மரம் பட்டு விட்டது ! எல்லாருமே காமத்தில் கொழுக்கிறார்கள் ! பெரும்பாலோர் பிஞ்சிலேயே பழுக்கிறார்கள் ! சல்லடை போட்டுத் தேடினாலும் கற்புக்கரசர்களை - இங்கு காண முடியாது ! ஸ்ரீ ராமனே வந்தாலும் நூறு சதம் கற்பை - இனி பேண முடியாது ! ஒருத்திக்கு ஒருவன் என்றில்லாத நிலை வரப்போகிறது ! கண்காட்சிக் கூடத்தில் கற்புக்கும் ஒரு சிலை வரப்போகிறது ! கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு சிதையப் போகிறது ! உறவெனும் கோவில் உருத்தெரியாமல் புதையப் போய்கிறது ! அதென்ன அச்சு பிசகாமல் அழகானவர்களுக்கே காதல் வருகிறது ! சொல்லி வைத்தாற்போல சொடக்குப் போடுவதற்குள் மோதல் வருகிறது ! எல்லா காதலர்களும் காது சூடேற பேசுகிறார்கள் காமத்தை ! மோகத்தீயில் வேக வைக்கிறார்கள் அர்த்தராத்திரி சாமத்தை ! அலைபேசியில் அழைக்கும் போது மாறிவிடுகிறது ...