Skip to main content
பாசத்தின்
படைத்தலைவனே !

வேதியியலின்
வீரத்தளபதியே !

உழைப்பின் உருவகமே
வியர்வையின் உன்னதமே !

எமல்சனின் எரிமலையே
பாலிமரின் பாயும் புலியே !

அன்புக்கு
அடித்தளம் நீ !
நட்புக்கு
இலக்கணம் நீ !


மனதில் இருப்பதை
மறைக்காத
மாவீரன் நீ !
முதுகின் பின்னே
முறைக்காத
மாமனிதன் நீ !

சோதனைகளில்
சரித்திரம் படைக்கும்
தனித்தலைவன் நீ !
எதிர்ப்புகளை
எதிர்த்து வெல்லும்
ஏகலைவன் நீ !

தோல்வியில்
துவளாத
கஜினி நீ !
வெற்றியில்
மயங்காத
ரஜினி நீ !

ராமதாசின்
ரகசிய தோழன் நீ !
பிரதீசின்
பிரியத்தம்பி நீ !

கருனாகரனிடமும்
கண்ணியமாக
நட்புச் செய்தாய் !
பீட்டரிடமும்
பிரியமான
நேசம் வளர்த்தாய் !

சுரேசைக் கேட்டால்
நீ நல்ல
மனிதன் என்பான் !

ஹரியைக் கேட்டால்
உன்னை ஒரு
புனிதன் என்பான் !

மனோஜோ
உன்னை மட்டும்
மன்னன் என்பான் !

வேலை செய்யும்
வொர்க் மேனும்
உன்னைப் பார்த்தால்
அண்ணன் என்பான் !

பயிற்சிகள்
இல்லாவிட்டாலும்
முயற்சிகள் செய்தே
முன்னேற்றம் கண்டாய் !

திட்டித் திட்டியே
தேவாவைத்
தேர்ச்சி பெறச்செய்தாய் !

சசி எனும் சிங்கம்
உனது பாசறையில் தான்
பாடம் பயின்றது !
தினேஷ் எனும் தங்கம் - நீ
தட்டித் தட்டித்தான்
தகுதி பெற்றது !

காரமான
கருஜகனும்
உன்னைப் பார்த்தால்
உருகிப்போவான் !
வீரமான
வினோபாவும்
உன் கோபம் கண்டு
பணிந்து போவான் !

மாணிக்கம் என்ற பெயர்
கொண்டதாலேயே
நீ விசத்தால் உருவானவன் அல்ல .
வீரத்தால் உருவானவன் !

உனக்கு
உயர்ந்த பரிசென
எங்களின் உள்ளங்களைத்
தருகிறோம் !

உன்
வாழ்க்கைப்பயணத்தின்
வழித்துணைக்கு
வாழ்த்துக்களை
அனுப்பி வைக்கிறோம் !


போட்டியான உலகில்
வெல்லுவதெல்லாம்
நீயாக இருக்க வேண்டும் !
நாளைய சரித்திரம்
சொல்லுவதெல்லாம்
உன் பெயராக இருக்க வேண்டும் !!!









Comments

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்குபோட்டுப் பிரிப்பதுதான் ! ஏதோவொன்றை எண்ணைச்சட்டியில் பொரிப்பதுதான் ! நரகாசுரன் நமக்குள்ளே மரிப்பதுதான் ! ஒரு சங்கல்பத்தை நெஞ்சுக்குள் வரிப்பதுதான் ! வண்ண வேடிக்கையை வான் வெளியில் விர