Skip to main content

எல்லாம் முடிந்து விட்டது

எல்லாம் முடிந்து விட்டது .

அப்படித்தான்
தோன்றுகிறது !

அல்லது

அப்படி
நினைத்துக் கொள்கிறோம் !

அகதிகளாக வாழ்வதென்பது
அனாதைத்தனத்தின் உச்சம் !
அதுதான் எங்களின்
ஆண்டாண்டுகால
அவலத்திற்குக் கிடைத்த மிச்சம் !

தலைவன் இல்லாவிடினும்
தலைமை உயிர்ப்போடு தான் இருக்கிறது!

மறுபடியும் ஒரு தலைவன் வரலாம் !
பழையபடியே புரட்சி நடக்கலாம் !

ஆனால் எதற்கு ?

எங்களைப் பொறுத்தவரை ,

தன்மானம் என்பது ,
தோண்டிப் புதைக்கப்படவேண்டிய ஒன்று !

ஆணவம் ,
அழிவுக்கு அடிகோலுவது !

சுயமரியாதை ,
வன்முறையின் தந்தை !
அது ,
களையப்படவேண்டிய
மூட நம்பிக்கையும் கூட !

இப்போது
எங்களை
எல்லோரும் மறந்து விட்டார்கள் !

எங்களில் சிலர்
எங்கேயாவது எப்போதாவது
மீண்டும் கொல்லப்ப்டும் வரை
நாங்கள் அவர்களுக்கு
புளித்துப்போன பழைய செய்திதான் !

இந்த வாழ்க்கை கூட
நன்றாகத்தான் இருக்கிறது !

காலையில்
சூடான இட்லி , சட்னி , இத்யாதிகள் ............

அதன் பிறகு ,
வெள்ளை அரிசியில்
மணக்கும் மதிய உணவு !

சூரியன் சாய்ந்த இரவில்
சப்பாத்தியும் குருமாவும் !

முன்பு ,
எங்களின் கதைகளை
ஊர் படித்தது !
இப்போது ,
ஊர்கதைகளை
நாங்கள் படிக்கிறோம் !

அதைவிட ,
தொலைக்காட்சியில் தவமிருந்தால்
தொல்லையின்றிப் பொழுது போய்விடும் !

முன்பு போன்ற
இட நெருக்கடிகள்
இப்போது இல்லை !

ஆனாலும் ,
எங்களுக்கு இன்னும் வேண்டியது ....

கால் நோகாத
கழிப்பறையும் ,
குற்றாலம் போன்ற
குளியலறையும் தான் !

இழந்த வாழ்க்கை நரகம் என்பதால் ,
இந்த வாழ்க்கை சொர்க்கமாகத் தெரிகிறது !

நாங்கள் தோற்றுவிட்டோம் - என்று
ஒப்புக்கொள்வது கூட
ஒருவகையில் சுகமாக இருக்கிறது !

எல்லாம்
முடிந்து விட்ட பிறகு ,
மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்க
மனதளவில் தெம்பு இல்லை !

சிந்திய ரத்தம்
வீணாகக்கூடாது என்பதற்காகவே
மீண்டும் மீண்டும்
வீணாக ரத்தம் சிந்தியதை
நினைத்தால் வேடிக்கையாக இருக்கிறது !

அமைதியாக வாழ்வதை
அடிமைத்தனம் என்றாலும்
அதைப்பற்றிக் கவலை இல்லை !

எல்லாம் முடிந்து விட்டது .


Comments

Popular posts from this blog

அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
கலி , கலாச்சாரம், கற்பு கலி இங்கே முற்றிவிட்டது ! கலாச்சார நதி வற்றிவிட்டது ! நாகரீகத் தீ பற்றிவிட்டது ! ஆபாசப் பாம்பு சுற்றிவிட்டது ! எல்லாம் இங்கே கெட்டு விட்டது ! பண்பாட்டு மரம் பட்டு விட்டது ! எல்லாருமே காமத்தில் கொழுக்கிறார்கள் ! பெரும்பாலோர் பிஞ்சிலேயே பழுக்கிறார்கள் ! சல்லடை போட்டுத் தேடினாலும் கற்புக்கரசர்களை - இங்கு காண முடியாது ! ஸ்ரீ ராமனே வந்தாலும் நூறு சதம் கற்பை - இனி பேண முடியாது ! ஒருத்திக்கு ஒருவன் என்றில்லாத நிலை வரப்போகிறது ! கண்காட்சிக் கூடத்தில் கற்புக்கும் ஒரு சிலை வரப்போகிறது ! கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு சிதையப் போகிறது ! உறவெனும் கோவில் உருத்தெரியாமல் புதையப் போய்கிறது ! அதென்ன அச்சு பிசகாமல் அழகானவர்களுக்கே காதல் வருகிறது ! சொல்லி வைத்தாற்போல சொடக்குப் போடுவதற்குள் மோதல் வருகிறது ! எல்லா காதலர்களும் காது சூடேற பேசுகிறார்கள் காமத்தை ! மோகத்தீயில் வேக வைக்கிறார்கள் அர்த்தராத்திரி சாமத்தை ! அலைபேசியில் அழைக்கும் போது மாறிவிடுகிறது ...
அபார்ட்மெண்ட் சிறுவனே ................... அடே ! சிறுவா ! உன்னைத்தான் ! இங்கே பார் ! கணினி விளையாட்டை கணநேரம் ஒத்திவை ! கேள் ! விரிந்திருகிறது வீதி !  அதில், விளையாடுவது தானே நீதி ? கட்டம் கட்டு, குறுக்கே கோடிடு ! ஆடலாம் சடுகுடு ! கைக்குட்டை எடு , கண்ணைக் கட்டு ! ஆடு கண்ணாமூச்சி ! ஓடித்தொடுதல் ஆடியதுண்டா ? ஒற்றைக் காலிலும் ஓடித் தொடலாம் ! அதற்குப் பெயர்தான் நொண்டி ! ஆரோக்கியக் காசுகள் சேர்ப்பதில், அதுவொரு அற்புத உண்டி ! அப்புறம் இன்னோர் விளையாட்டு ! ஒருகால் மடக்கிக் குந்து ! தேவையில்லை பந்து ! குச்சியால் குச்சியை உந்து ! எம்பியெழுவதை, ' கில்லித்தட்டு '   -  என்றே நீ சொல்லித்தட்டு !  நிறம் கூறித் துரத்தும் ஆட்டம் பரிச்சையமுண்டா ? திருடன் போலீஸ் தெரியுமா ? நூல் பிடித்தோடி பட்டம் விட்டதில்லையா ? உத்திரத்தில் கயிறு கட்டி தூரி.............? என்னடா உனக்கு எதுவுமே தெரியவில்லை ! மேற்கண்ட விளையாட்டில் வலிமையாகும் உன் தசை ! வெறும் கணினியைத் தட்டுவதில் விரலுக்கு மட்டுமே விசை ! யாருமில்லையா வீட்டில் ? ஓ ! இரவுப்பணி முடித்து இன்னும் உறங்கும் தந்தை ! அழகுநிலையம் சென்று...