Skip to main content

எல்லாம் முடிந்து விட்டது

எல்லாம் முடிந்து விட்டது .

அப்படித்தான்
தோன்றுகிறது !

அல்லது

அப்படி
நினைத்துக் கொள்கிறோம் !

அகதிகளாக வாழ்வதென்பது
அனாதைத்தனத்தின் உச்சம் !
அதுதான் எங்களின்
ஆண்டாண்டுகால
அவலத்திற்குக் கிடைத்த மிச்சம் !

தலைவன் இல்லாவிடினும்
தலைமை உயிர்ப்போடு தான் இருக்கிறது!

மறுபடியும் ஒரு தலைவன் வரலாம் !
பழையபடியே புரட்சி நடக்கலாம் !

ஆனால் எதற்கு ?

எங்களைப் பொறுத்தவரை ,

தன்மானம் என்பது ,
தோண்டிப் புதைக்கப்படவேண்டிய ஒன்று !

ஆணவம் ,
அழிவுக்கு அடிகோலுவது !

சுயமரியாதை ,
வன்முறையின் தந்தை !
அது ,
களையப்படவேண்டிய
மூட நம்பிக்கையும் கூட !

இப்போது
எங்களை
எல்லோரும் மறந்து விட்டார்கள் !

எங்களில் சிலர்
எங்கேயாவது எப்போதாவது
மீண்டும் கொல்லப்ப்டும் வரை
நாங்கள் அவர்களுக்கு
புளித்துப்போன பழைய செய்திதான் !

இந்த வாழ்க்கை கூட
நன்றாகத்தான் இருக்கிறது !

காலையில்
சூடான இட்லி , சட்னி , இத்யாதிகள் ............

அதன் பிறகு ,
வெள்ளை அரிசியில்
மணக்கும் மதிய உணவு !

சூரியன் சாய்ந்த இரவில்
சப்பாத்தியும் குருமாவும் !

முன்பு ,
எங்களின் கதைகளை
ஊர் படித்தது !
இப்போது ,
ஊர்கதைகளை
நாங்கள் படிக்கிறோம் !

அதைவிட ,
தொலைக்காட்சியில் தவமிருந்தால்
தொல்லையின்றிப் பொழுது போய்விடும் !

முன்பு போன்ற
இட நெருக்கடிகள்
இப்போது இல்லை !

ஆனாலும் ,
எங்களுக்கு இன்னும் வேண்டியது ....

கால் நோகாத
கழிப்பறையும் ,
குற்றாலம் போன்ற
குளியலறையும் தான் !

இழந்த வாழ்க்கை நரகம் என்பதால் ,
இந்த வாழ்க்கை சொர்க்கமாகத் தெரிகிறது !

நாங்கள் தோற்றுவிட்டோம் - என்று
ஒப்புக்கொள்வது கூட
ஒருவகையில் சுகமாக இருக்கிறது !

எல்லாம்
முடிந்து விட்ட பிறகு ,
மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்க
மனதளவில் தெம்பு இல்லை !

சிந்திய ரத்தம்
வீணாகக்கூடாது என்பதற்காகவே
மீண்டும் மீண்டும்
வீணாக ரத்தம் சிந்தியதை
நினைத்தால் வேடிக்கையாக இருக்கிறது !

அமைதியாக வாழ்வதை
அடிமைத்தனம் என்றாலும்
அதைப்பற்றிக் கவலை இல்லை !

எல்லாம் முடிந்து விட்டது .


Comments

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்குபோட்டுப் பிரிப்பதுதான் ! ஏதோவொன்றை எண்ணைச்சட்டியில் பொரிப்பதுதான் ! நரகாசுரன் நமக்குள்ளே மரிப்பதுதான் ! ஒரு சங்கல்பத்தை நெஞ்சுக்குள் வரிப்பதுதான் ! வண்ண வேடிக்கையை வான் வெளியில் விர