Skip to main content

இயற்கையின் குட்டி நாக்குகள்



வெளியே காய்ந்த 
ஆடைகளில் 
வெயிலின் வாசம் ! 

====================================== 

யாரோவின் 
சாயலிலிருக்கும் என்னை 
யாரோவென நினைத்து 
யாரோ 
கடந்து போனார்கள் 
நானும் .......... 

====================================== 

அவரவர் 
அவரவர் உலகத்தில் 
வாழ்ந்து கொண்டு 
அனைவரும் 
ஒரே உலகத்தில் தானிருக்கிறோம் ! 

====================================== 

இரவை 
இருட்டு என்கிறார்கள் 
சிலபேர் ! 
நிலவு என்கிறார்கள் 
சிலபேர் ! 
நீங்கள், 
இருட்டா ? 
நிலவா ? 

====================================== 

தன்னந்தனியாய் 
இனிப்பை 
உருட்டிக்கொண்டிருந்த 
ஒரு எறும்பை 
யாரோ தெரியாமல் 
மிதித்தார்கள் ! 

====================================== 

எந்த விளக்குகளாலும் 
அணைக்க முடியவில்லை 
தனிமை என்ற 
இருட்டை ! 

====================================== 

சந்தர்ப்பத்தோடு 
புணர்ந்ததில் 
நிஜத்தைப் பிரசவித்தது 
ஒரு கற்பனை ! 

====================================== 

எறும்புகள் எனும் 
இயற்கையின் 
குட்டி நாக்குகள் 
நக்கிக் கொண்டிருந்தன 
நான் 
உண்டுமுடித்து எறிந்த 
இனிப்பு டப்பாவை ! 

====================================== 

எதிர்பார்ப்பு 
என்ற சுமை 
நம் இறக்கைகளில் 
ஏறும்வரை 
நாம் 
பறந்து கொண்டிருக்கலாம் ! 

Comments

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்குபோட்டுப் பிரிப்பதுதான் ! ஏதோவொன்றை எண்ணைச்சட்டியில் பொரிப்பதுதான் ! நரகாசுரன் நமக்குள்ளே மரிப்பதுதான் ! ஒரு சங்கல்பத்தை நெஞ்சுக்குள் வரிப்பதுதான் ! வண்ண வேடிக்கையை வான் வெளியில் விர