Skip to main content
துப்பாக்கி



'துப்பார்க்குத் துப்பாய'
படிக்குமுன்பே
துப்பாக்கி
எனக்கு அறிமுகம் !

நானறிந்த துப்பாக்கியில்
அப்போது
ஆறு குண்டுகள் !
இப்போது
எண்ணிக்கை
சற்றுக் கூடியிருக்கலாம் !

ஒரு துப்பாக்கியை
முறைப்படி வாங்கும்
விவரங்களை
இணையத்தில்
தேட வேண்டும் !

கைவசம்
ஒரு லகரம் இருக்கிறது !
தொகை சற்றுக்கூடுதலானால்
வங்கிக்கடன்
பெற்றுக்கொள்ளலாம் !

துப்பாக்கியோடு சேர்த்து
சுடுவதற்கான பயிற்சி
இலவசமா அல்லது
அது தனியா ?

சுட்டுப்பழக
கூடுதல் குண்டுகள்
தருவார்களா ?

பீரோவின்
ரகசிய மூலையில்
அதைப் பதுக்கவேண்டும் !
அந்த
ஒற்றைச்சாவி
எப்போதுமிருக்கும்
என் உள்பாக்கெட்டில்
இதயம் தொட்டுக்கொண்டு !

எனக்கு
எதிரிகள்
இருக்கிறார்கள் தான் !
அவர்களைக் கொல்லவேண்டிய
தேவை எனக்கில்லை !
மேலும்,
அவர்களைக் கொல்ல
வாய்த்துப்பாக்கி போதும் !
கைத்துப்பாக்கி
தேவையில்லை !

வேட்டையாட
விருப்பம்தான் !
காடுகளைத்தான்
காணவில்லை !
ஆகவே
அந்தக்காரணமும் இல்லை !

பாதுகாப்புக்கு
நான்
துப்பாக்கியை விட
பணத்தை நம்புகிறேன் !

தற்கொலை புரிவதென்றால்
தூக்கமாத்திரை தின்று
சுகமாகச் சாகலாம் !
துப்பாக்கி தேவையில்லை !

பறவை
சுடுவதென்றால்
எஞ்சியிருக்கும்
காக்காவைத்தான்
சுடவேண்டும் !
ஆனால்,
காக்காக்கறி
ஆண்மைக்கு நல்லதென்ற
மருத்துவக் குறிப்பை
நானெங்கும் கண்டதில்லை !
ஆகவே,
அதுவும் காரணமில்லை !

பின்னே,
நான் ஏன்
துப்பாக்கி வாங்கவேண்டும் ?
மண்டையைப் போட்டு
உடைத்துக் கொள்ளாதீர்கள் !
காரணம்
மிக எளியது !

என்
பக்கத்து வீட்டுக்காரன்
ஒரு துப்பாக்கி
வைத்திருக்கிறான் !







Comments

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்குபோட்டுப் பிரிப்பதுதான் ! ஏதோவொன்றை எண்ணைச்சட்டியில் பொரிப்பதுதான் ! நரகாசுரன் நமக்குள்ளே மரிப்பதுதான் ! ஒரு சங்கல்பத்தை நெஞ்சுக்குள் வரிப்பதுதான் ! வண்ண வேடிக்கையை வான் வெளியில் விர