Skip to main content
துப்பாக்கி



'துப்பார்க்குத் துப்பாய'
படிக்குமுன்பே
துப்பாக்கி
எனக்கு அறிமுகம் !

நானறிந்த துப்பாக்கியில்
அப்போது
ஆறு குண்டுகள் !
இப்போது
எண்ணிக்கை
சற்றுக் கூடியிருக்கலாம் !

ஒரு துப்பாக்கியை
முறைப்படி வாங்கும்
விவரங்களை
இணையத்தில்
தேட வேண்டும் !

கைவசம்
ஒரு லகரம் இருக்கிறது !
தொகை சற்றுக்கூடுதலானால்
வங்கிக்கடன்
பெற்றுக்கொள்ளலாம் !

துப்பாக்கியோடு சேர்த்து
சுடுவதற்கான பயிற்சி
இலவசமா அல்லது
அது தனியா ?

சுட்டுப்பழக
கூடுதல் குண்டுகள்
தருவார்களா ?

பீரோவின்
ரகசிய மூலையில்
அதைப் பதுக்கவேண்டும் !
அந்த
ஒற்றைச்சாவி
எப்போதுமிருக்கும்
என் உள்பாக்கெட்டில்
இதயம் தொட்டுக்கொண்டு !

எனக்கு
எதிரிகள்
இருக்கிறார்கள் தான் !
அவர்களைக் கொல்லவேண்டிய
தேவை எனக்கில்லை !
மேலும்,
அவர்களைக் கொல்ல
வாய்த்துப்பாக்கி போதும் !
கைத்துப்பாக்கி
தேவையில்லை !

வேட்டையாட
விருப்பம்தான் !
காடுகளைத்தான்
காணவில்லை !
ஆகவே
அந்தக்காரணமும் இல்லை !

பாதுகாப்புக்கு
நான்
துப்பாக்கியை விட
பணத்தை நம்புகிறேன் !

தற்கொலை புரிவதென்றால்
தூக்கமாத்திரை தின்று
சுகமாகச் சாகலாம் !
துப்பாக்கி தேவையில்லை !

பறவை
சுடுவதென்றால்
எஞ்சியிருக்கும்
காக்காவைத்தான்
சுடவேண்டும் !
ஆனால்,
காக்காக்கறி
ஆண்மைக்கு நல்லதென்ற
மருத்துவக் குறிப்பை
நானெங்கும் கண்டதில்லை !
ஆகவே,
அதுவும் காரணமில்லை !

பின்னே,
நான் ஏன்
துப்பாக்கி வாங்கவேண்டும் ?
மண்டையைப் போட்டு
உடைத்துக் கொள்ளாதீர்கள் !
காரணம்
மிக எளியது !

என்
பக்கத்து வீட்டுக்காரன்
ஒரு துப்பாக்கி
வைத்திருக்கிறான் !







Comments

Popular posts from this blog

அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
அபார்ட்மெண்ட் சிறுவனே ................... அடே ! சிறுவா ! உன்னைத்தான் ! இங்கே பார் ! கணினி விளையாட்டை கணநேரம் ஒத்திவை ! கேள் ! விரிந்திருகிறது வீதி !  அதில், விளையாடுவது தானே நீதி ? கட்டம் கட்டு, குறுக்கே கோடிடு ! ஆடலாம் சடுகுடு ! கைக்குட்டை எடு , கண்ணைக் கட்டு ! ஆடு கண்ணாமூச்சி ! ஓடித்தொடுதல் ஆடியதுண்டா ? ஒற்றைக் காலிலும் ஓடித் தொடலாம் ! அதற்குப் பெயர்தான் நொண்டி ! ஆரோக்கியக் காசுகள் சேர்ப்பதில், அதுவொரு அற்புத உண்டி ! அப்புறம் இன்னோர் விளையாட்டு ! ஒருகால் மடக்கிக் குந்து ! தேவையில்லை பந்து ! குச்சியால் குச்சியை உந்து ! எம்பியெழுவதை, ' கில்லித்தட்டு '   -  என்றே நீ சொல்லித்தட்டு !  நிறம் கூறித் துரத்தும் ஆட்டம் பரிச்சையமுண்டா ? திருடன் போலீஸ் தெரியுமா ? நூல் பிடித்தோடி பட்டம் விட்டதில்லையா ? உத்திரத்தில் கயிறு கட்டி தூரி.............? என்னடா உனக்கு எதுவுமே தெரியவில்லை ! மேற்கண்ட விளையாட்டில் வலிமையாகும் உன் தசை ! வெறும் கணினியைத் தட்டுவதில் விரலுக்கு மட்டுமே விசை ! யாருமில்லையா வீட்டில் ? ஓ ! இரவுப்பணி முடித்து இன்னும் உறங்கும் தந்தை ! அழகுநிலையம் சென்று...
கலி , கலாச்சாரம், கற்பு கலி இங்கே முற்றிவிட்டது ! கலாச்சார நதி வற்றிவிட்டது ! நாகரீகத் தீ பற்றிவிட்டது ! ஆபாசப் பாம்பு சுற்றிவிட்டது ! எல்லாம் இங்கே கெட்டு விட்டது ! பண்பாட்டு மரம் பட்டு விட்டது ! எல்லாருமே காமத்தில் கொழுக்கிறார்கள் ! பெரும்பாலோர் பிஞ்சிலேயே பழுக்கிறார்கள் ! சல்லடை போட்டுத் தேடினாலும் கற்புக்கரசர்களை - இங்கு காண முடியாது ! ஸ்ரீ ராமனே வந்தாலும் நூறு சதம் கற்பை - இனி பேண முடியாது ! ஒருத்திக்கு ஒருவன் என்றில்லாத நிலை வரப்போகிறது ! கண்காட்சிக் கூடத்தில் கற்புக்கும் ஒரு சிலை வரப்போகிறது ! கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு சிதையப் போகிறது ! உறவெனும் கோவில் உருத்தெரியாமல் புதையப் போய்கிறது ! அதென்ன அச்சு பிசகாமல் அழகானவர்களுக்கே காதல் வருகிறது ! சொல்லி வைத்தாற்போல சொடக்குப் போடுவதற்குள் மோதல் வருகிறது ! எல்லா காதலர்களும் காது சூடேற பேசுகிறார்கள் காமத்தை ! மோகத்தீயில் வேக வைக்கிறார்கள் அர்த்தராத்திரி சாமத்தை ! அலைபேசியில் அழைக்கும் போது மாறிவிடுகிறது ...