Skip to main content
நியூட்டனின் மூன்றாம் விதி




























நமது
போராட்டங்கள்
கேயாஸ் தியரிப்படி
இப்பிரபஞ்சத்தில்
ஏற்படுத்தும் விளைவுகள்
அவர்களுக்குப்
புறக்கணிக்கத்தக்கவை !

இஃது
இன்னோர் விடுமுறை
என்றுதான்
அவர்கள்
கடந்துபோகிறார்கள்
நமது
கடையடைப்புக்களை !

மூன்று
நாட்களுக்கு மேல்
பேருந்துகளை
முடக்கி வைத்தால்
அது
நமக்கே பதிப்பு
என்று அவர்களுக்கு
நன்றாகவே தெரியும் !

உண்ணாவிரதங்கள்
நமது
வயிற்றினில் ஏற்படுத்தும்
நீர்த்த அமிலங்களில்
அவர்கள்
நீச்சல் பழகுகிறார்கள் !

நாம்
நாளெல்லாம்
நின்று கத்திச்செய்யும்
ஆர்ப்பாட்டங்களால்
அதிகப்பட்சம்
அன்று மாலை
மழை வரலாம் .........
அவ்வளவே !

நமது
மொட்டை போடுதல்களையும்
தீச்சட்டி ஏந்துதல்களையும்
சத்ரு சம்ஹார
யாகங்களையும்
முன்னெப்போதும் போலவே
இப்போதும்
அசுவாரசியமாய்ப்
பார்த்துக் கொண்டுதானிருக்கிறார்
கடவுள் !

நமக்கான
தியாகிப்பட்டம்
சுமந்துவரும்
செய்தித்தாள்களின்
தற்கொலைப்
பெட்டிச் செய்திகள்
காலப்பெருநெருப்பில்
அழிந்து போகலாம்
நம்மைப் போலவே .........!

அப்போதும்
இப்போதும்
எப்போதும் ..........
கைகட்டி
வேடிக்கை பார்க்கவும்
இரும்புக்கரம் கொண்டு
அடக்கவும்
இருக்கவே இருக்கிறது
அவர்கள் வசம்
காவல்துறை !

இறுதியில் ........

போராடிப்போராடி
ஒருநாள் முற்றாக
ஓய்ந்து விடுவோம்
என்ற
அவர்கள் நம்பிக்கையை
நாம்
பொய்யாக்குவதில்லை !

என்ன .......
நாளை
அவர்களின்
நலம் வேண்டியும்
அவர்களுக்கே
அவர்களுக்காக நடக்கும்
மேற்கண்ட
அதே போராட்டங்களின்
அதே செயல்படாத்தன்மையில்
நியூட்டனின்
மூன்றாம் விதி
அவர்களுக்கும்
பொய்த்துப் போகலாம் !






Comments

Popular posts from this blog

அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
கலி , கலாச்சாரம், கற்பு கலி இங்கே முற்றிவிட்டது ! கலாச்சார நதி வற்றிவிட்டது ! நாகரீகத் தீ பற்றிவிட்டது ! ஆபாசப் பாம்பு சுற்றிவிட்டது ! எல்லாம் இங்கே கெட்டு விட்டது ! பண்பாட்டு மரம் பட்டு விட்டது ! எல்லாருமே காமத்தில் கொழுக்கிறார்கள் ! பெரும்பாலோர் பிஞ்சிலேயே பழுக்கிறார்கள் ! சல்லடை போட்டுத் தேடினாலும் கற்புக்கரசர்களை - இங்கு காண முடியாது ! ஸ்ரீ ராமனே வந்தாலும் நூறு சதம் கற்பை - இனி பேண முடியாது ! ஒருத்திக்கு ஒருவன் என்றில்லாத நிலை வரப்போகிறது ! கண்காட்சிக் கூடத்தில் கற்புக்கும் ஒரு சிலை வரப்போகிறது ! கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு சிதையப் போகிறது ! உறவெனும் கோவில் உருத்தெரியாமல் புதையப் போய்கிறது ! அதென்ன அச்சு பிசகாமல் அழகானவர்களுக்கே காதல் வருகிறது ! சொல்லி வைத்தாற்போல சொடக்குப் போடுவதற்குள் மோதல் வருகிறது ! எல்லா காதலர்களும் காது சூடேற பேசுகிறார்கள் காமத்தை ! மோகத்தீயில் வேக வைக்கிறார்கள் அர்த்தராத்திரி சாமத்தை ! அலைபேசியில் அழைக்கும் போது மாறிவிடுகிறது ...
அபார்ட்மெண்ட் சிறுவனே ................... அடே ! சிறுவா ! உன்னைத்தான் ! இங்கே பார் ! கணினி விளையாட்டை கணநேரம் ஒத்திவை ! கேள் ! விரிந்திருகிறது வீதி !  அதில், விளையாடுவது தானே நீதி ? கட்டம் கட்டு, குறுக்கே கோடிடு ! ஆடலாம் சடுகுடு ! கைக்குட்டை எடு , கண்ணைக் கட்டு ! ஆடு கண்ணாமூச்சி ! ஓடித்தொடுதல் ஆடியதுண்டா ? ஒற்றைக் காலிலும் ஓடித் தொடலாம் ! அதற்குப் பெயர்தான் நொண்டி ! ஆரோக்கியக் காசுகள் சேர்ப்பதில், அதுவொரு அற்புத உண்டி ! அப்புறம் இன்னோர் விளையாட்டு ! ஒருகால் மடக்கிக் குந்து ! தேவையில்லை பந்து ! குச்சியால் குச்சியை உந்து ! எம்பியெழுவதை, ' கில்லித்தட்டு '   -  என்றே நீ சொல்லித்தட்டு !  நிறம் கூறித் துரத்தும் ஆட்டம் பரிச்சையமுண்டா ? திருடன் போலீஸ் தெரியுமா ? நூல் பிடித்தோடி பட்டம் விட்டதில்லையா ? உத்திரத்தில் கயிறு கட்டி தூரி.............? என்னடா உனக்கு எதுவுமே தெரியவில்லை ! மேற்கண்ட விளையாட்டில் வலிமையாகும் உன் தசை ! வெறும் கணினியைத் தட்டுவதில் விரலுக்கு மட்டுமே விசை ! யாருமில்லையா வீட்டில் ? ஓ ! இரவுப்பணி முடித்து இன்னும் உறங்கும் தந்தை ! அழகுநிலையம் சென்று...