ஒரு கரண்டி அன்பு
எழுதி முடித்ததில்
செத்துப் போனது
ஒரு
கவிதை !
=========================
பூட்டிய கதவுக்குள்
எரிந்து கொண்டிருக்கும்
மின்விளக்கும்
கத்திக்கொண்டிருக்கும்
தொலைக்காட்சியும்
ஓடிக்கொண்டிருக்கும்
மின்விசிறியும்
கொண்டாடித் தீர்க்கின்றன
ஒரு
மறதியை !
===========================
எடுக்க வேண்டும்
எடுக்க வேண்டும்
என்று நினைக்கும்
முடிவுகளையே
நாம்
எடுத்து விடுகிறோம்
என்றாவது !
===========================
இந்திரியத்தின்
கடைசித் துளி
வெளியேறுகிறது !
ஞானத்தின்
முதல் துளி
உள் நுழைகிறது !
===========================
வேலை என்பது
கடல் !
வாழ்க்கை என்பது
தீவு !
இங்கேயும் தீவு,
கடலில் தான்
இருக்கிறது !
===========================
நம்முடைய
இறுக்கமெல்லாம்
ஒரு
கண்ணாடியைப் போலத்தான் !
அன்பின் சிறுகல்
பட்டாலும்
அது
உடைந்து விடும் !
===========================
அலைபேசிக்குள்
ஆயிரம் ரகசியம்
புதைத்திருக்கும்
பெண்ணே ........
நீயல்ல
பாரதி கண்ட
புதுமைப் பெண் !
===========================
இறைச்சியை மட்டும்
ஒதுக்கி விட்டு
மேலாக்க எடுத்துப் போடும்
குஸ்காவுக்கு
அசைவ தோஷமில்லையாம் !
பின்னிரவுப் பொழுதுகளில்
அலைபேசி வழியே
குஸ்கா சாப்பிடுபவர்கள்
இங்கே அதிகம் !
===========================
தனிமைப் பெருநெருப்பால்
பற்றியெரிகிறது
என் காடு !
ஆறுதல் எனும்
கானல் நீர்
வார்ப்பவர்களே ........
எனக்கு வேண்டியது
மழை !
===========================
பணக்கார
வீட்டுத் திருமணம் !
பந்தியில்
அனைத்துமிருந்தன !
ஒரேயொரு கரண்டி
அன்பு கேட்டால் .....
இல்லையாம் !
===========================
புழுதியில்
ஓய்யாரமாய்ப் படுத்துச்
செல்லமாய் உருண்டபடி
நாயொன்று
எழுதுகிறது கவிதையை
இயற்கையின் மொழியில் .......
படிக்கத் தெரிந்தவர்கள்
பாக்கியவான்கள் !
===========================
சிலபோது
திடுப்பென
முன்னறிவிப்பில்லாமல்
பெய்து விடுகிறது
மழை !
கப்பல் விட
ஆசைப்பட்ட
ஒரு சிறுவனுக்காகவும் .............
வானவில் பார்க்க
ஆசைப்பட்ட
ஒரு சிறுமிக்காகவும்...............
எழுதி முடித்ததில்
செத்துப் போனது
ஒரு
கவிதை !
=========================
பூட்டிய கதவுக்குள்
எரிந்து கொண்டிருக்கும்
மின்விளக்கும்
கத்திக்கொண்டிருக்கும்
தொலைக்காட்சியும்
ஓடிக்கொண்டிருக்கும்
மின்விசிறியும்
கொண்டாடித் தீர்க்கின்றன
ஒரு
மறதியை !
===========================
எடுக்க வேண்டும்
எடுக்க வேண்டும்
என்று நினைக்கும்
முடிவுகளையே
நாம்
எடுத்து விடுகிறோம்
என்றாவது !
===========================
இந்திரியத்தின்
கடைசித் துளி
வெளியேறுகிறது !
ஞானத்தின்
முதல் துளி
உள் நுழைகிறது !
===========================
வேலை என்பது
கடல் !
வாழ்க்கை என்பது
தீவு !
இங்கேயும் தீவு,
கடலில் தான்
இருக்கிறது !
===========================
நம்முடைய
இறுக்கமெல்லாம்
ஒரு
கண்ணாடியைப் போலத்தான் !
அன்பின் சிறுகல்
பட்டாலும்
அது
உடைந்து விடும் !
===========================
அலைபேசிக்குள்
ஆயிரம் ரகசியம்
புதைத்திருக்கும்
பெண்ணே ........
நீயல்ல
பாரதி கண்ட
புதுமைப் பெண் !
===========================
இறைச்சியை மட்டும்
ஒதுக்கி விட்டு
மேலாக்க எடுத்துப் போடும்
குஸ்காவுக்கு
அசைவ தோஷமில்லையாம் !
பின்னிரவுப் பொழுதுகளில்
அலைபேசி வழியே
குஸ்கா சாப்பிடுபவர்கள்
இங்கே அதிகம் !
===========================
தனிமைப் பெருநெருப்பால்
பற்றியெரிகிறது
என் காடு !
ஆறுதல் எனும்
கானல் நீர்
வார்ப்பவர்களே ........
எனக்கு வேண்டியது
மழை !
===========================
பணக்கார
வீட்டுத் திருமணம் !
பந்தியில்
அனைத்துமிருந்தன !
ஒரேயொரு கரண்டி
அன்பு கேட்டால் .....
இல்லையாம் !
===========================
புழுதியில்
ஓய்யாரமாய்ப் படுத்துச்
செல்லமாய் உருண்டபடி
நாயொன்று
எழுதுகிறது கவிதையை
இயற்கையின் மொழியில் .......
படிக்கத் தெரிந்தவர்கள்
பாக்கியவான்கள் !
===========================
சிலபோது
திடுப்பென
முன்னறிவிப்பில்லாமல்
பெய்து விடுகிறது
மழை !
கப்பல் விட
ஆசைப்பட்ட
ஒரு சிறுவனுக்காகவும் .............
வானவில் பார்க்க
ஆசைப்பட்ட
ஒரு சிறுமிக்காகவும்...............
Comments
Post a Comment