Skip to main content
ஒரு கரண்டி அன்பு
















எழுதி முடித்ததில்
செத்துப் போனது
ஒரு
கவிதை !

=========================

பூட்டிய கதவுக்குள்
எரிந்து கொண்டிருக்கும்
மின்விளக்கும்
கத்திக்கொண்டிருக்கும்
தொலைக்காட்சியும்
ஓடிக்கொண்டிருக்கும்
மின்விசிறியும்
கொண்டாடித் தீர்க்கின்றன
ஒரு
மறதியை !

===========================

எடுக்க வேண்டும்
எடுக்க  வேண்டும்
என்று நினைக்கும்
முடிவுகளையே
நாம்
எடுத்து விடுகிறோம்
என்றாவது !

===========================

இந்திரியத்தின்
கடைசித் துளி
வெளியேறுகிறது !
ஞானத்தின்
முதல் துளி
உள் நுழைகிறது !

===========================

வேலை என்பது
கடல் !
வாழ்க்கை என்பது
தீவு !
இங்கேயும் தீவு,
கடலில் தான்
இருக்கிறது !

===========================

நம்முடைய
இறுக்கமெல்லாம்
ஒரு
கண்ணாடியைப் போலத்தான் !
அன்பின் சிறுகல்
பட்டாலும்
அது
உடைந்து விடும் !

===========================

அலைபேசிக்குள்
ஆயிரம் ரகசியம்
புதைத்திருக்கும்
பெண்ணே ........
நீயல்ல
பாரதி கண்ட
புதுமைப் பெண் !

===========================

இறைச்சியை மட்டும்
ஒதுக்கி விட்டு
மேலாக்க எடுத்துப் போடும்
குஸ்காவுக்கு
அசைவ தோஷமில்லையாம் !

பின்னிரவுப் பொழுதுகளில்
அலைபேசி வழியே
குஸ்கா சாப்பிடுபவர்கள்
இங்கே அதிகம் !

===========================

தனிமைப் பெருநெருப்பால்
பற்றியெரிகிறது
என் காடு !
ஆறுதல் எனும்
கானல் நீர்
வார்ப்பவர்களே ........
எனக்கு வேண்டியது
மழை !

===========================

பணக்கார
வீட்டுத் திருமணம் !

பந்தியில்
அனைத்துமிருந்தன !

ஒரேயொரு கரண்டி
அன்பு கேட்டால் .....

இல்லையாம் !

===========================

புழுதியில்
ஓய்யாரமாய்ப் படுத்துச்
செல்லமாய் உருண்டபடி
நாயொன்று
எழுதுகிறது கவிதையை
இயற்கையின் மொழியில் .......
படிக்கத் தெரிந்தவர்கள்
பாக்கியவான்கள் !

===========================

சிலபோது
திடுப்பென
முன்னறிவிப்பில்லாமல்
பெய்து விடுகிறது
மழை !
கப்பல் விட
ஆசைப்பட்ட
ஒரு சிறுவனுக்காகவும் .............
வானவில் பார்க்க
ஆசைப்பட்ட
ஒரு சிறுமிக்காகவும்...............



Comments

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்குபோட்டுப் பிரிப்பதுதான் ! ஏதோவொன்றை எண்ணைச்சட்டியில் பொரிப்பதுதான் ! நரகாசுரன் நமக்குள்ளே மரிப்பதுதான் ! ஒரு சங்கல்பத்தை நெஞ்சுக்குள் வரிப்பதுதான் ! வண்ண வேடிக்கையை வான் வெளியில் விர