Skip to main content
நாயும் நானும்


அதுவொரு
மதிய வேளை !
உருவாகிக்கொண்டிருந்த
புதிய வேளை !

யாருமில்லை
தெருவில் !
நான்
நடந்து கொண்டிருந்தேன்
வியர்வையில் குளித்த
உருவில் !

சூழலில்
நெருப்பு !
தவித்தது
செருப்பு !
நீரூற்றி
வெளியில் வைத்தால்
வெந்துவிடும்
பருப்பு !

இப்போதைக்கு
யாருமில்லை
அறையில் !
கொஞ்சநேரம்
விடுதலை
எனக்கந்த
சிறையில் !

நாடலாம்
தனிமையை !
பாடலாம்
இனிமையை !

என்ன
இனிமை
என்கிறீர்களா ?

ஆபாசப்படம்
மற்றும்
சுயமைதுனம் !

பின்னே
பாழும் பிரம்மச்சாரியான
நான்
தனிமை கிடைத்தால்
பகவத் கீதையா
படிக்க முடியும் !

இதைச்சொல்வதில்
எனக்குத்
தயக்கமில்லை !
போலிப்புனிதங்களில்
எனக்கு
மயக்கமில்லை !

மேலும்
இம்மாதிரி
எழுதி வைத்தால்தான்
இக்கவிதையை
நவீனத்தில்
சேர்ப்பார்கள் !

இல்லையெனில்,

மரபு
என்று கூறி
பரணில் போடுவார்கள் !

எதில் விட்டேன் ?

ஆங் ,,,,,,,,,,

தனிமையைக்
கொண்டாடலாம் !
இன்பத்தில்
திண்டாடலாம் !
இன்ன பிற ,,,,
இன்ன பிற ,,,,,,,,,,

அப்போதுதான்
அதைப்பார்த்தேன் !

அதுவொரு
நாய் !
பயமுறுத்தியது
அதன்
வாய் !

அது,
பல்லைக்காட்டிக்
குரைத்தது !
அதன் பாஷையில்
கோபமாய் எதையோ
உரைத்தது !

ஐயகோ !

இதென்ன
வம்பு ?
தேவையில்லாத
துன்பத்தின்
அம்பு !
கையிலில்லை
கம்பு !
ஓடுவதற்குக்
காலிலில்லை
தெம்பு !
பெருகியோடிய
வியர்வையிருக்கும்
ஒரு
சொம்பு !

நானோ
போய்க்கொண்டிருக்கிறேன்
சிவனே என்று !
இது ஏன்
விளித்துத் தொலைக்கிறது
இவனே என்று !

நான்
' ம்கும் ' என்றேன் !
பாக்கெட்டில்
கைவிட்டேன் !
கண்ணாடியை
சரி செய்தேன் !

அச்சமயத்தில்
என்னிடம் தோன்றிய
எதிர்வினைகள்
இவை !

என் மனநிலையை
சந்தேகிக்கிறீர்கள்
தெரிகிறது !

நாய் கடித்தால்
முதலுதவியாக
என்ன செய்யலாம் ?

இதுமாதிரி
நாய்க்கடிகளிடமிருந்து
தப்புவதெப்படி ?

நாய்க்கடித்
தடுப்பு உறைகள்
எங்கே கிடைக்கும் ?

நாய்கள் காப்பகத்தில்
என்ன
ஆணி புடுங்குகிறார்களா ?

ஆலையில்
ஒருவாரம்
விடுப்பு தருவார்களா ?

நாய் கடித்தது என்றால்
நண்பர்கள்
சிரிப்பார்களோ ?

முன்பெல்லாம்
பதினாறு ஊசியில்
ரணமாகிவிடும் !
இப்போதோ
ஒரே ஊசியில்
குணமாகிவிடும் !

என்ன !

நாயைத்தான்
காக்க வேண்டும் !
கண்ணில்
எண்ணெய் ஊற்றி
அதன் செய்கைகளை
நோக்க வேண்டும் !

இவ்வாறாக நான்
எண்ணிக்கொண்டிருக்கையில் .......

என்னெதிரே
வந்த
அந்த நாய்,
உறுமியபடியே
என்னைக்கடந்து
என் பின்னே
வந்துகொண்டிருந்த
இன்னொரு நாயை
நோக்கிச் சென்றது !


Comments

  1. வணக்கம்

    கவிதையின் வரிகள் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. கவிதையின் வரிகளை இரசித்த தங்களுக்கு மிக்க நன்றி திரு ரூபன் அவர்களே

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்குபோட்டுப் பிரிப்பதுதான் ! ஏதோவொன்றை எண்ணைச்சட்டியில் பொரிப்பதுதான் ! நரகாசுரன் நமக்குள்ளே மரிப்பதுதான் ! ஒரு சங்கல்பத்தை நெஞ்சுக்குள் வரிப்பதுதான் ! வண்ண வேடிக்கையை வான் வெளியில் விர