Skip to main content
















சிறுவயதில்
நூல்கட்டி விளையாடியதற்காய்
மன்னிப்புக்கேட்க வேண்டும் !
ஊசித்தட்டானே
நீ
எங்கிருக்கிறாய் ?

=============================

ஊரில்
பல்லாங்குழிச் சிறுமிகளையும்
கில்லித்தட்டு சிறுவர்களையும்
காணவில்லை !
திரும்பிப்பார்க்கிறேன் .......
என்னுடனே
வந்துகொண்டிருந்த
என் பால்யத்தையும்
காணவில்லை !

=============================

எங்களூரின்
தாவணிக்கனவுகள் எல்லாம்
இப்போது
சுடிதார்க் கனவுகளாக !
அந்தக்கனவில்
வண்ணம் இருந்தது !
இந்தக் கனவில்
சாயம் மட்டுமே இருக்கிறது !

=============================

கட்டிப்பிடித்துக்
கதற வேண்டும் போலிருந்தது !
பாலித்தீன் பைகளை
மேய்ந்து கொண்டிருந்த
எங்களூர்
பசுமாட்டை !

=============================

ஒரு
நோயுற்ற
முதியவளைப் போல
குற்றுயிராக
சுருண்டு கிடந்தாள்
காவிரி !

முடிந்தமட்டும்
கண்ணீர் வார்த்துத்
திரும்பிவந்தேன் !

=============================

இரட்டை மாட்டுவண்டியில்
கோவணங்கட்டிய
ஒரேயொரு விவசாயி
தென்பட்டான் !
கடவுளையே
பார்த்தது போலிருந்தது !

=============================

வீட்டில்
இரவு உணவுக்கு
இட்டிலி !
ம்ம்ம்..........
அரிசீம்பருப்புச் சோறை
அம்மாவே
மறந்து விட்டாள் !

=============================

சல்லடைபோட்டுத்
தேடியும்
அகப்படவேயில்லை
வீட்டில்
ஒரேயொரு
மஞ்சப்பை !

=============================

ஒரு
முற்பகல் முழுக்கத்
தட்டிப் பார்த்தேன்
எங்களூர்
வெட்டவெளியை !

கடைசிவரை
கதவு திறக்கவில்லை
தென்றல் !

=============================

மின்சாரம்
போனாலொழிய
வாசல்வந்து
கூடிப்பேசுவதில்லை
பக்கத்து வீட்டு
அக்காக்களும்
அண்ணன்களும் !

=============================

இற்றுப்போய்
எங்கள் வீட்டு
பரணில் கிடந்த
ஒரு முறத்தை
எடுத்து பத்திரப்படுத்தினேன் !
என் மகளுக்கு
புலிவிரட்டிய
ஒரு வீரத்தாய்
கதை சொல்ல !

=============================

சுற்றிச் சுற்றித்
தேடினேன் !
" எதைத் தேடுகிறாய் ? "
என்றாள் அம்மா !
" இங்கேயே
சுற்றிக்கொண்டிருக்கும்
இரண்டு சிட்டுக்குருவிகளை "
என்றேன் !

Comments

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்குபோட்டுப் பிரிப்பதுதான் ! ஏதோவொன்றை எண்ணைச்சட்டியில் பொரிப்பதுதான் ! நரகாசுரன் நமக்குள்ளே மரிப்பதுதான் ! ஒரு சங்கல்பத்தை நெஞ்சுக்குள் வரிப்பதுதான் ! வண்ண வேடிக்கையை வான் வெளியில் விர