Skip to main content
இந்த நாள்
இனிய நாள்






எழும் போதே
மணி பத்து !
கலையவில்லை
இன்னும்
தூக்கத்தின் பித்து !

வாவ் !
இன்று விடுமுறை !

ஆகஸ்ட் பதினைந்து !

போகத்தேவையில்லை
ஆலை !
செய்யத் தேவையில்லை
வேலை !

நான்குநாள்
தாடியை முதலில்
சிரைக்க வேண்டும் !
அழுக்குகளைத்
தண்ணீரில்
நுரைக்க வேண்டும் !
காதலியிடம்
அரைத்த மாவையே
மீண்டும் கொஞ்சம்
அரைக்க வேண்டும் !
மாலையில்
மதுவருந்துவது பற்றி
நண்பனிடம்
உரைக்க வேண்டும் !

நினைத்த படியே
மீண்டும் தூக்கத்தில்
விழுந்தேன் !
பத்து நிமிடத்தில்
பதறியடித்து மீண்டும்
எழுந்தேன் !

எண்ணிய யாவையும்
எண்ணியாங்கு முடித்து

கலைக்காட்சி
பார்க்கலாமென்று
தொலைகாட்சி போட்டேன் !

அதில் எவனோ
படுத்துக் கொண்டே
கில்லியடித்தான் !
எதிரிகளை
விரட்டி விரட்டி
சொல்லியடித்தான் !

அப்புறம்,

உள்ளாடை
மட்டுமணிந்த
வளரும் நடிகையைக்
காட்டினார்கள் !
அவள் வாயாலேயே
ஆங்கிலத்தில்
நாட்டுப்பற்றை
ஊட்டினார்கள் !

அதன் பின்
மதியம்,
உணவகம் !

பதார்த்தப் பட்டியலைப்
பார்வையால்
ஆய்ந்தேன் !
ஆடு, மாடு
புறா, சுறா என
ஒன்றுவிடாமல்
அனைத்தையும்
மேய்ந்தேன் !

பிறகு,
அறைக்கு வந்து
குப்புறப்படுத்து
குட்டித் தூக்கம் !

மாலை வந்தது !
நண்பன் வந்தான் !
மது அருந்த வேண்டும் !

மது,
அது
முன்பே
வாங்கப் பட்டு
குளிர்சதப் பெட்டியில்
காத்திருந்தது !

முட்ட முட்ட
குடித்தோம் !
போதை
சொட்ட சொட்ட
மது முழுவதையும்
முடித்தோம் !

போய்ப் படுத்தால்
பேயத்தூக்கம் வரும் !

அடுத்த விடுமுறை
ஆயுத பூஜைக்கா ?

எப்படியோ
இந்த நாள்
இனிதாகக்
கழிந்து விட்டது !
நாட்காட்டியில்
மற்றுமொரு தாள்
மறுபடி
கிழிந்து விட்டது !

ஆங்ங்ங்.......
சொல்ல மறந்து விட்டேனே !
 
ஜெய்ஹிந்த் !!!



Comments

  1. சராசரி இந்தியனின் சுதந்திர தினம் அருமை சார்.. மிகவும் பிடித்தது உங்கல் கவிதை

    ReplyDelete
    Replies
    1. வாசித்து கருத்து சொன்னதற்கு நன்றி நண்பரே

      Delete
  2. அப்பட்டமான உண்மை
    அழுக்காக தெரிகிறது

    தேதிகள் மட்டுமே கிழிக்கபடுகிறது

    எப்போது மாறும் இந்நிலை
    ஒரு தோசையை போல உலகை திருப்பி போட முடியாத
    இயலாமையின் எழுத்தாக எனக்குள் பல என்னஅகழி உருவாகுது உங்கள் வரிகள்

    ஆனாலும் உங்களின் தினசரி நடைமுறைகளை அறிய முடிந்தது
    நண்பா

    ReplyDelete
    Replies
    1. நான், நான் என்று வருவதால் அனைத்தும் எனது சொந்த தனிப்பட்ட நடவடிக்கைகள் என்று பொருள் கொள்ளவேண்டாம் தோழி ! சமூகத்தில் உள்ள ஒரு சராசரி இளைஞனையே அந்த " நான் " பிரதிபலிக்கிறது ! கவிதையின் நோக்கைப் புரிந்து கொண்டதற்கு மிக்க நன்றி !

      Delete
  3. இன்றைய இளைய தலைமுறையை பிரதிபலிக்கிறது உங்கள் கவிதை .அருமை.

    ReplyDelete
  4. தாங்கள் எல்லாம் என் கவிதைகளைப் படிப்பதே எனக்கு பெரும் பாக்கியம்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
அபார்ட்மெண்ட் சிறுவனே ................... அடே ! சிறுவா ! உன்னைத்தான் ! இங்கே பார் ! கணினி விளையாட்டை கணநேரம் ஒத்திவை ! கேள் ! விரிந்திருகிறது வீதி !  அதில், விளையாடுவது தானே நீதி ? கட்டம் கட்டு, குறுக்கே கோடிடு ! ஆடலாம் சடுகுடு ! கைக்குட்டை எடு , கண்ணைக் கட்டு ! ஆடு கண்ணாமூச்சி ! ஓடித்தொடுதல் ஆடியதுண்டா ? ஒற்றைக் காலிலும் ஓடித் தொடலாம் ! அதற்குப் பெயர்தான் நொண்டி ! ஆரோக்கியக் காசுகள் சேர்ப்பதில், அதுவொரு அற்புத உண்டி ! அப்புறம் இன்னோர் விளையாட்டு ! ஒருகால் மடக்கிக் குந்து ! தேவையில்லை பந்து ! குச்சியால் குச்சியை உந்து ! எம்பியெழுவதை, ' கில்லித்தட்டு '   -  என்றே நீ சொல்லித்தட்டு !  நிறம் கூறித் துரத்தும் ஆட்டம் பரிச்சையமுண்டா ? திருடன் போலீஸ் தெரியுமா ? நூல் பிடித்தோடி பட்டம் விட்டதில்லையா ? உத்திரத்தில் கயிறு கட்டி தூரி.............? என்னடா உனக்கு எதுவுமே தெரியவில்லை ! மேற்கண்ட விளையாட்டில் வலிமையாகும் உன் தசை ! வெறும் கணினியைத் தட்டுவதில் விரலுக்கு மட்டுமே விசை ! யாருமில்லையா வீட்டில் ? ஓ ! இரவுப்பணி முடித்து இன்னும் உறங்கும் தந்தை ! அழகுநிலையம் சென்று...
கலி , கலாச்சாரம், கற்பு கலி இங்கே முற்றிவிட்டது ! கலாச்சார நதி வற்றிவிட்டது ! நாகரீகத் தீ பற்றிவிட்டது ! ஆபாசப் பாம்பு சுற்றிவிட்டது ! எல்லாம் இங்கே கெட்டு விட்டது ! பண்பாட்டு மரம் பட்டு விட்டது ! எல்லாருமே காமத்தில் கொழுக்கிறார்கள் ! பெரும்பாலோர் பிஞ்சிலேயே பழுக்கிறார்கள் ! சல்லடை போட்டுத் தேடினாலும் கற்புக்கரசர்களை - இங்கு காண முடியாது ! ஸ்ரீ ராமனே வந்தாலும் நூறு சதம் கற்பை - இனி பேண முடியாது ! ஒருத்திக்கு ஒருவன் என்றில்லாத நிலை வரப்போகிறது ! கண்காட்சிக் கூடத்தில் கற்புக்கும் ஒரு சிலை வரப்போகிறது ! கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு சிதையப் போகிறது ! உறவெனும் கோவில் உருத்தெரியாமல் புதையப் போய்கிறது ! அதென்ன அச்சு பிசகாமல் அழகானவர்களுக்கே காதல் வருகிறது ! சொல்லி வைத்தாற்போல சொடக்குப் போடுவதற்குள் மோதல் வருகிறது ! எல்லா காதலர்களும் காது சூடேற பேசுகிறார்கள் காமத்தை ! மோகத்தீயில் வேக வைக்கிறார்கள் அர்த்தராத்திரி சாமத்தை ! அலைபேசியில் அழைக்கும் போது மாறிவிடுகிறது ...