இரவுப்பணி
கண்ணெல்லாம்
எரிகிறது !
மண்டைக்குள்
நரகக்காட்சி
தெரிகிறது !
பகலெல்லாம்
படுத்தே கிடந்தாலும்
வருவதென்னவோ
பாதியுறக்கம் தான் !
முந்தின நாள்
பணி தின்று தீர்த்த
மீதியுறக்கம் தான் !
இரவெல்லாம் தூக்கம்
துரத்தத் துரத்த
ஓடவேண்டியிருக்கிறது !
நடுநடுவே
எங்கிருக்கிறோமென
நம்மைநாமே
தேடவேண்டியிருக்கிறது !
எவ்வளவு முயன்றும்
முடியாமல்
சொக்கி சொக்கி
விழுகின்றன
அதிகாலை விழிகள் !
பணி முடிந்து
திரும்புகையில்
மெல்ல மெல்ல
அடைபடுகின்றன
உறக்கம் வரும் வழிகள் !
அதிலும்,
பிரம்மச்சரிய
அறை வாழ்க்கையென்றால்
அது இன்னும் மோசம் !
புறவுலகம் மறக்கும்
எத்தனிப்பில்
புழுப்போல
நெளிந்து நெளிந்தே
சக்தியெல்லாம் வடிந்து
சற்றே கண்ணயரும் வேளையில்
அறை நண்பன்
அலைபேசி
இரக்கமில்லாமல் அதிர
ஒட்டிக்கொண்டிருந்த
கொஞ்சநஞ்ச உறக்கமும்
ஒட்டுமொத்தமாய் உதிர,
பிறகு நிகழ்வதெல்லாம்
பகலென்னும்
பிரம்மாண்ட வெம்மையில்
மீண்டும்
புழுவாகித் துடித்தல் மட்டுமே !
உள்ளிருதே
பற்றியெரியும்
உறக்கத்தின் நெருப்பை
தண்ணீர் ஊற்றி
தற்காலிகமாய்
அணைத்து விட்டு,
வெந்த சோற்றை
விதியே என்று
தின்று விட்டு
இதோ கிளம்பவேண்டும்
இரவில் விழித்திருக்கும்
இன்னொரு உலகத்திற்கு !!!
கண்ணெல்லாம்
எரிகிறது !
மண்டைக்குள்
நரகக்காட்சி
தெரிகிறது !
பகலெல்லாம்
படுத்தே கிடந்தாலும்
வருவதென்னவோ
பாதியுறக்கம் தான் !
முந்தின நாள்
பணி தின்று தீர்த்த
மீதியுறக்கம் தான் !
இரவெல்லாம் தூக்கம்
துரத்தத் துரத்த
ஓடவேண்டியிருக்கிறது !
நடுநடுவே
எங்கிருக்கிறோமென
நம்மைநாமே
தேடவேண்டியிருக்கிறது !
எவ்வளவு முயன்றும்
முடியாமல்
சொக்கி சொக்கி
விழுகின்றன
அதிகாலை விழிகள் !
பணி முடிந்து
திரும்புகையில்
மெல்ல மெல்ல
அடைபடுகின்றன
உறக்கம் வரும் வழிகள் !
அதிலும்,
பிரம்மச்சரிய
அறை வாழ்க்கையென்றால்
அது இன்னும் மோசம் !
புறவுலகம் மறக்கும்
எத்தனிப்பில்
புழுப்போல
நெளிந்து நெளிந்தே
சக்தியெல்லாம் வடிந்து
சற்றே கண்ணயரும் வேளையில்
அறை நண்பன்
அலைபேசி
இரக்கமில்லாமல் அதிர
ஒட்டிக்கொண்டிருந்த
கொஞ்சநஞ்ச உறக்கமும்
ஒட்டுமொத்தமாய் உதிர,
பிறகு நிகழ்வதெல்லாம்
பகலென்னும்
பிரம்மாண்ட வெம்மையில்
மீண்டும்
புழுவாகித் துடித்தல் மட்டுமே !
உள்ளிருதே
பற்றியெரியும்
உறக்கத்தின் நெருப்பை
தண்ணீர் ஊற்றி
தற்காலிகமாய்
அணைத்து விட்டு,
வெந்த சோற்றை
விதியே என்று
தின்று விட்டு
இதோ கிளம்பவேண்டும்
இரவில் விழித்திருக்கும்
இன்னொரு உலகத்திற்கு !!!
அருமையான வரிகள்!இரவு நேரப்பணிகளால் படும் கஷ்டத்தை அருமையாக வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்!
ReplyDeleteவாசித்து கருத்து சொன்னமைக்கு மிக்க நன்றி சகோதரி
Delete