Skip to main content
இரவுப்பணி


கண்ணெல்லாம்
எரிகிறது !
மண்டைக்குள்
நரகக்காட்சி
தெரிகிறது !

பகலெல்லாம்
படுத்தே கிடந்தாலும்
வருவதென்னவோ
பாதியுறக்கம் தான் !
முந்தின நாள்
பணி தின்று தீர்த்த
மீதியுறக்கம் தான் !

இரவெல்லாம் தூக்கம்
துரத்தத் துரத்த
ஓடவேண்டியிருக்கிறது !
நடுநடுவே
எங்கிருக்கிறோமென
நம்மைநாமே
தேடவேண்டியிருக்கிறது !

எவ்வளவு முயன்றும்
முடியாமல்
சொக்கி சொக்கி
விழுகின்றன
அதிகாலை விழிகள் !
பணி முடிந்து
திரும்புகையில்
மெல்ல மெல்ல
அடைபடுகின்றன
உறக்கம் வரும் வழிகள் !

அதிலும்,
பிரம்மச்சரிய
அறை வாழ்க்கையென்றால்
அது இன்னும் மோசம் !

புறவுலகம் மறக்கும்
எத்தனிப்பில்
புழுப்போல
நெளிந்து நெளிந்தே
சக்தியெல்லாம் வடிந்து
சற்றே கண்ணயரும் வேளையில்
அறை நண்பன்
அலைபேசி
இரக்கமில்லாமல் அதிர
ஒட்டிக்கொண்டிருந்த
கொஞ்சநஞ்ச உறக்கமும்
ஒட்டுமொத்தமாய் உதிர,
பிறகு நிகழ்வதெல்லாம்
பகலென்னும்
பிரம்மாண்ட வெம்மையில்
மீண்டும்
புழுவாகித் துடித்தல் மட்டுமே !

உள்ளிருதே
பற்றியெரியும்
உறக்கத்தின் நெருப்பை
தண்ணீர் ஊற்றி
தற்காலிகமாய்
அணைத்து விட்டு,
வெந்த சோற்றை
விதியே என்று
தின்று விட்டு
இதோ கிளம்பவேண்டும்
இரவில் விழித்திருக்கும்
இன்னொரு உலகத்திற்கு !!!

Comments

  1. அருமையான வரிகள்!இரவு நேரப்பணிகளால் படும் கஷ்டத்தை அருமையாக வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாசித்து கருத்து சொன்னமைக்கு மிக்க நன்றி சகோதரி

      Delete

Post a Comment

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்குபோட்டுப் பிரிப்பதுதான் ! ஏதோவொன்றை எண்ணைச்சட்டியில் பொரிப்பதுதான் ! நரகாசுரன் நமக்குள்ளே மரிப்பதுதான் ! ஒரு சங்கல்பத்தை நெஞ்சுக்குள் வரிப்பதுதான் ! வண்ண வேடிக்கையை வான் வெளியில் விர