Skip to main content
உழைப்பு



                             


வாழ்க்கையே
வெறுத்து விட்டது !
உழைத்து உழைத்தே
உடம்பு,
சிறுத்து விட்டது !

காலையிலேயே
கல்லொன்று
காலைத்
தடுக்கியது !
' போகாதே ' என்று
புத்திமதியை
மண்டைக்குள்
முடுக்கியது !

அப்போதே
கணித்திருக்க வேண்டும் !
போகவேண்டாமென
பாழும் மனதைப்
பணித்திருக்க வேண்டும் !

கஷ்ட காலம் !
பிசகிவிட்டது !

சொந்தக்காரன்
செத்துவிட்டான்
என்று,
அன்று
சக ஊழியன்
வரவில்லை !

அது,
அடிக்கடி
அவன் சொல்லும்
சாக்கு !
அவனைப்
பொருத்தமட்டில்
நான் ஒரு
பேக்கு !

மேலதிகாரி,
வேலை எனும்
கல்லில் போட்டு
துவைத்து விட்டான் !
உட்கார்ந்தபடியே
உள்ளிருக்கும்
உதிரத்தை
சுவைத்து விட்டான் !

முன்மண்டையில்
முடியில்லாத எவனோ
மேலிடத்திலிருந்து
வருகிறானாம் !
அனைத்தையும்
ஆய்ந்து
' நலமே'  என்று
சான்றிதழ்
தருகிறானாம் !

அதற்கு நானா
அகப்பட்டேன் ?
ம்ஹ்ம் !
இந்த வேலையில்
எங்கே நான்
சுகப்பட்டேன் ?

ஸ்ஸ்ஸ் யப்பா !

எவ்வளவு
வேலை !
கரும்பைப் போல்
பிழிந்து விட்டது
ஆலை !

யாவும் முடிந்து
வெளியே
வருவதற்குள்
ஓடு போலத்
தேய்ந்து விட்டேன் !
ஒட்டுமொத்தமாய்
ஓய்ந்து விட்டேன் !

அப்போது
கருப்பாய்
மாறியது  வானம் !
கேட்கத்தொடங்குமா
மழையின் கானம் ?

அதோ !
வந்து விட்டது
மழைத்துளி !
மணிக்கட்டில்
விழுந்தது
முதல் துளி !

இடி எனும்
தடியால்
வானத்தை
யாரோ
 அடிக்க,
மின்னல் வந்து
விரிசல் போல
வெடிக்க
சும்மா,
பிளந்து கொண்டு
கொட்டியது ஆகாயம் !

அப்போது
சட்டெனத்
தோன்றியது
ஒரு கேள்வி !
கணப்பொழுதில்
கனன்றது
எண்ணத்தின் வேள்வி !

யாருக்காக
இந்த மழை ?

நாளெல்லாம்
நான் சிந்திய
வியர்வைக்காகத்தான்
இப்படி
விடாது பொழிகிறதா
வானம் ?

ச்சே ச்சே !
அப்படியெல்லாம்
இருக்காது !

ஆனாலும்
ஆனாலும்

தேகம் ஏன்
இப்படி சிலிர்க்கிறது ?
கண்களில் ஏன்
கண்ணீர் துளிர்க்கிறது ?

அம்மம்மா !

என்ன ஒரு
நிறைவு !
இன்பத்திற்கு
இங்கே என்ன
குறைவு ?

அதன் பிறகு
வீடு வந்தேன் !
உணவு உண்டேன் !
உழைப்பின் பரிசாய்
உலகம் மறந்து
உறங்கினேன் !



Comments

  1. உழைப்பின் வலி

    உள்ளத்தின் சோர்வு

    இயலாமையின் சோகம்

    இத்தனையும் தாண்டி

    மழையை கண்டு மனதை மீட்டுகொள்ளும்

    உணர்வு ..............அருமை குரு

    உழைப்பாளியின் நிலை கண்முன் காட்சியாய் சோகத்தை பிழிகிறது

    வார்த்தைகளில் தெறிக்கும் மோனையும் எதுகையும் படிபவருக்கு சந்தத்தின் சத்தத்தை அதிகரிக்கிறது
    அருமை

    ReplyDelete
  2. உண்மையில் தங்களின் பின்னூட்டம் தான் இந்தக் கவிதைக்கு அழகூட்டுகிறது தோழி ! மற்றபடி, டி.ராஜேந்திரையும் , கவிஞர் வாலியையும் பின்பற்றி எழுதிய கவிதை இது !

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
அபார்ட்மெண்ட் சிறுவனே ................... அடே ! சிறுவா ! உன்னைத்தான் ! இங்கே பார் ! கணினி விளையாட்டை கணநேரம் ஒத்திவை ! கேள் ! விரிந்திருகிறது வீதி !  அதில், விளையாடுவது தானே நீதி ? கட்டம் கட்டு, குறுக்கே கோடிடு ! ஆடலாம் சடுகுடு ! கைக்குட்டை எடு , கண்ணைக் கட்டு ! ஆடு கண்ணாமூச்சி ! ஓடித்தொடுதல் ஆடியதுண்டா ? ஒற்றைக் காலிலும் ஓடித் தொடலாம் ! அதற்குப் பெயர்தான் நொண்டி ! ஆரோக்கியக் காசுகள் சேர்ப்பதில், அதுவொரு அற்புத உண்டி ! அப்புறம் இன்னோர் விளையாட்டு ! ஒருகால் மடக்கிக் குந்து ! தேவையில்லை பந்து ! குச்சியால் குச்சியை உந்து ! எம்பியெழுவதை, ' கில்லித்தட்டு '   -  என்றே நீ சொல்லித்தட்டு !  நிறம் கூறித் துரத்தும் ஆட்டம் பரிச்சையமுண்டா ? திருடன் போலீஸ் தெரியுமா ? நூல் பிடித்தோடி பட்டம் விட்டதில்லையா ? உத்திரத்தில் கயிறு கட்டி தூரி.............? என்னடா உனக்கு எதுவுமே தெரியவில்லை ! மேற்கண்ட விளையாட்டில் வலிமையாகும் உன் தசை ! வெறும் கணினியைத் தட்டுவதில் விரலுக்கு மட்டுமே விசை ! யாருமில்லையா வீட்டில் ? ஓ ! இரவுப்பணி முடித்து இன்னும் உறங்கும் தந்தை ! அழகுநிலையம் சென்று...
கலி , கலாச்சாரம், கற்பு கலி இங்கே முற்றிவிட்டது ! கலாச்சார நதி வற்றிவிட்டது ! நாகரீகத் தீ பற்றிவிட்டது ! ஆபாசப் பாம்பு சுற்றிவிட்டது ! எல்லாம் இங்கே கெட்டு விட்டது ! பண்பாட்டு மரம் பட்டு விட்டது ! எல்லாருமே காமத்தில் கொழுக்கிறார்கள் ! பெரும்பாலோர் பிஞ்சிலேயே பழுக்கிறார்கள் ! சல்லடை போட்டுத் தேடினாலும் கற்புக்கரசர்களை - இங்கு காண முடியாது ! ஸ்ரீ ராமனே வந்தாலும் நூறு சதம் கற்பை - இனி பேண முடியாது ! ஒருத்திக்கு ஒருவன் என்றில்லாத நிலை வரப்போகிறது ! கண்காட்சிக் கூடத்தில் கற்புக்கும் ஒரு சிலை வரப்போகிறது ! கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு சிதையப் போகிறது ! உறவெனும் கோவில் உருத்தெரியாமல் புதையப் போய்கிறது ! அதென்ன அச்சு பிசகாமல் அழகானவர்களுக்கே காதல் வருகிறது ! சொல்லி வைத்தாற்போல சொடக்குப் போடுவதற்குள் மோதல் வருகிறது ! எல்லா காதலர்களும் காது சூடேற பேசுகிறார்கள் காமத்தை ! மோகத்தீயில் வேக வைக்கிறார்கள் அர்த்தராத்திரி சாமத்தை ! அலைபேசியில் அழைக்கும் போது மாறிவிடுகிறது ...