இந்த நாள்
இனிய நாள்
எழும் போதே
மணி பத்து !
கலையவில்லை
இன்னும்
தூக்கத்தின் பித்து !
வாவ் !
இன்று விடுமுறை !
ஆகஸ்ட் பதினைந்து !
போகத்தேவையில்லை
ஆலை !
செய்யத் தேவையில்லை
வேலை !
நான்குநாள்
தாடியை முதலில்
சிரைக்க வேண்டும் !
அழுக்குகளைத்
தண்ணீரில்
நுரைக்க வேண்டும் !
காதலியிடம்
அரைத்த மாவையே
மீண்டும் கொஞ்சம்
அரைக்க வேண்டும் !
மாலையில்
மதுவருந்துவது பற்றி
நண்பனிடம்
உரைக்க வேண்டும் !
நினைத்த படியே
மீண்டும் தூக்கத்தில்
விழுந்தேன் !
பத்து நிமிடத்தில்
பதறியடித்து மீண்டும்
எழுந்தேன் !
எண்ணிய யாவையும்
எண்ணியாங்கு முடித்து
கலைக்காட்சி
பார்க்கலாமென்று
தொலைகாட்சி போட்டேன் !
அதில் எவனோ
படுத்துக் கொண்டே
கில்லியடித்தான் !
எதிரிகளை
விரட்டி விரட்டி
சொல்லியடித்தான் !
அப்புறம்,
உள்ளாடை
மட்டுமணிந்த
வளரும் நடிகையைக்
காட்டினார்கள் !
அவள் வாயாலேயே
ஆங்கிலத்தில்
நாட்டுப்பற்றை
ஊட்டினார்கள் !
அதன் பின்
மதியம்,
உணவகம் !
பதார்த்தப் பட்டியலைப்
பார்வையால்
ஆய்ந்தேன் !
ஆடு, மாடு
புறா, சுறா என
ஒன்றுவிடாமல்
அனைத்தையும்
மேய்ந்தேன் !
பிறகு,
அறைக்கு வந்து
குப்புறப்படுத்து
குட்டித் தூக்கம் !
மாலை வந்தது !
நண்பன் வந்தான் !
மது அருந்த வேண்டும் !
மது,
அது
முன்பே
வாங்கப் பட்டு
குளிர்சதப் பெட்டியில்
காத்திருந்தது !
முட்ட முட்ட
குடித்தோம் !
போதை
சொட்ட சொட்ட
மது முழுவதையும்
முடித்தோம் !
போய்ப் படுத்தால்
பேயத்தூக்கம் வரும் !
அடுத்த விடுமுறை
ஆயுத பூஜைக்கா ?
எப்படியோ
இந்த நாள்
இனிதாகக்
கழிந்து விட்டது !
நாட்காட்டியில்
மற்றுமொரு தாள்
மறுபடி
கிழிந்து விட்டது !
ஆங்ங்ங்.......
சொல்ல மறந்து விட்டேனே !
ஜெய்ஹிந்த் !!!
இனிய நாள்
எழும் போதே
மணி பத்து !
கலையவில்லை
இன்னும்
தூக்கத்தின் பித்து !
வாவ் !
இன்று விடுமுறை !
ஆகஸ்ட் பதினைந்து !
போகத்தேவையில்லை
ஆலை !
செய்யத் தேவையில்லை
வேலை !
நான்குநாள்
தாடியை முதலில்
சிரைக்க வேண்டும் !
அழுக்குகளைத்
தண்ணீரில்
நுரைக்க வேண்டும் !
காதலியிடம்
அரைத்த மாவையே
மீண்டும் கொஞ்சம்
அரைக்க வேண்டும் !
மாலையில்
மதுவருந்துவது பற்றி
நண்பனிடம்
உரைக்க வேண்டும் !
நினைத்த படியே
மீண்டும் தூக்கத்தில்
விழுந்தேன் !
பத்து நிமிடத்தில்
பதறியடித்து மீண்டும்
எழுந்தேன் !
எண்ணிய யாவையும்
எண்ணியாங்கு முடித்து
கலைக்காட்சி
பார்க்கலாமென்று
தொலைகாட்சி போட்டேன் !
அதில் எவனோ
படுத்துக் கொண்டே
கில்லியடித்தான் !
எதிரிகளை
விரட்டி விரட்டி
சொல்லியடித்தான் !
அப்புறம்,
உள்ளாடை
மட்டுமணிந்த
வளரும் நடிகையைக்
காட்டினார்கள் !
அவள் வாயாலேயே
ஆங்கிலத்தில்
நாட்டுப்பற்றை
ஊட்டினார்கள் !
அதன் பின்
மதியம்,
உணவகம் !
பதார்த்தப் பட்டியலைப்
பார்வையால்
ஆய்ந்தேன் !
ஆடு, மாடு
புறா, சுறா என
ஒன்றுவிடாமல்
அனைத்தையும்
மேய்ந்தேன் !
பிறகு,
அறைக்கு வந்து
குப்புறப்படுத்து
குட்டித் தூக்கம் !
மாலை வந்தது !
நண்பன் வந்தான் !
மது அருந்த வேண்டும் !
மது,
அது
முன்பே
வாங்கப் பட்டு
குளிர்சதப் பெட்டியில்
காத்திருந்தது !
முட்ட முட்ட
குடித்தோம் !
போதை
சொட்ட சொட்ட
மது முழுவதையும்
முடித்தோம் !
போய்ப் படுத்தால்
பேயத்தூக்கம் வரும் !
அடுத்த விடுமுறை
ஆயுத பூஜைக்கா ?
எப்படியோ
இந்த நாள்
இனிதாகக்
கழிந்து விட்டது !
நாட்காட்டியில்
மற்றுமொரு தாள்
மறுபடி
கிழிந்து விட்டது !
ஆங்ங்ங்.......
சொல்ல மறந்து விட்டேனே !
ஜெய்ஹிந்த் !!!
சராசரி இந்தியனின் சுதந்திர தினம் அருமை சார்.. மிகவும் பிடித்தது உங்கல் கவிதை
ReplyDeleteவாசித்து கருத்து சொன்னதற்கு நன்றி நண்பரே
Deleteஅப்பட்டமான உண்மை
ReplyDeleteஅழுக்காக தெரிகிறது
தேதிகள் மட்டுமே கிழிக்கபடுகிறது
எப்போது மாறும் இந்நிலை
ஒரு தோசையை போல உலகை திருப்பி போட முடியாத
இயலாமையின் எழுத்தாக எனக்குள் பல என்னஅகழி உருவாகுது உங்கள் வரிகள்
ஆனாலும் உங்களின் தினசரி நடைமுறைகளை அறிய முடிந்தது
நண்பா
நான், நான் என்று வருவதால் அனைத்தும் எனது சொந்த தனிப்பட்ட நடவடிக்கைகள் என்று பொருள் கொள்ளவேண்டாம் தோழி ! சமூகத்தில் உள்ள ஒரு சராசரி இளைஞனையே அந்த " நான் " பிரதிபலிக்கிறது ! கவிதையின் நோக்கைப் புரிந்து கொண்டதற்கு மிக்க நன்றி !
Deleteஇன்றைய இளைய தலைமுறையை பிரதிபலிக்கிறது உங்கள் கவிதை .அருமை.
ReplyDeleteதாங்கள் எல்லாம் என் கவிதைகளைப் படிப்பதே எனக்கு பெரும் பாக்கியம்
ReplyDelete