Skip to main content
மதியழகன் - சிறுகதை


மதியழகனை நான் முதன் முதலில் பார்த்த போது காலில் இத்துப்போன ரப்பர் செருப்புகளை அணிந்திருந்தான் . முக்கால் பேண்டும் , எண்ணையில் நனைந்த படியவாரிய தலையும் , அவனது கையில் இருந்த மஞ்சள் நிற பையும் , அவனை ஒரு அப்பழுக்கற்ற கிராமத்தானாக அடையாளம் காட்டின . இந்நேரம் நீங்கள் அந்த மதியழகனுக்கு ஒரு நாற்பது வயது இருக்கலாம் யூகித்திருந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல . நான் இளங்கலை முதலாமாண்டு சேருவதற்காக அந்த கல்லூரிக்கு என் தந்தையோடு சென்றபோதுதான் அந்த மதியழகனைப் பார்த்தேன் . அவன் மேலே சொல்லப்பட்ட கோலத்தில் இருந்தான் . அவனும் முதலாமாண்டு சேருவதற்காகத்தான் வந்திருக்கிறான் என்று நான் பிற்பாடு அறிந்து கொண்டேன் . " இவன்ல்லாம் காலேஜ்ல சேர்ந்து என்னத்த கிழிக்கப் போகிறான் " என்று என்னுள் ஒரு குரல் கூவியது .

அதற்குப் பிறகு நான் இளங்கலை வேதியியல் பிரிவில் சேர்ந்து கல்லூரிக்கு முதன் முதலாக சென்றபோது என் தந்தை , கல்லூரி வளாகத்தில் நிறைய கட்டழகு பாவைகள் வலம் வந்ததை அறிந்து கொண்டு " டேய் ! நம்ம பரம்பரைலயே நீ தான் மொத மொதலா காலேஜ் போற . போனமா வந்தமா ன்னு இருக்கணும் . படிப்பத்தவிர வேற எதிலையும் கவனம் போகக்கூடாது " என்றார் . நான் " சரிப்பா சரிப்பா " என்று கடுப்பாக தலை அசைத்தேன் . பிறகு ஒரு வழியாக அப்பாவை அனுப்பிவிட்டு வேதியியல் முதலாமாண்டு வகுப்பில் போய் அமர்ந்தபோது அந்த மதியழகன் அங்கு அமர்ந்திருந்தான் . " இவன் கூட எல்லாம் நாம படிக்கணுமா ? கடிவுளே ! " என்று நான் நொந்து கொண்டு அவன் அருகே போய் அமர்ந்தேன் . அதற்குப் பிறகு நாங்கள் எங்கள் வகுப்பில் சேர்ந்திருந்த பெண்களை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்தோம் . பெண்களும் ஒவ்வொருவராக வந்தார்கள் . அனைத்தும் வத்தல் , தொத்தல் , கேஸ்களாக இருந்தன . சுமார் என்ற அளவில் கூட ஒருத்தியும் இல்லை . " ச்சை , எல்லாம் அட்டு பிகருங்கடா " என்று எவனோ கமென்ட் அடித்தான் . எனக்கு என் அப்பாவுடைய வவுத்தெரிச்சலால்தான் இப்படி மொக்கை பிகர்களாக என் வகுப்பில் வந்து வாய்த்திருக்கின்றன என்று நினைத்துக் கொண்டேன் . முதன் முதலில் ஆங்கில வகுப்பு தொடகியது . அகிலன் என்ற ஒரு ஆங்கில பேராசிரியர் வந்தார் . நன்றாக பேசினார் . இறுதியாக " உங்களைப் பத்தி இங்கிலீஸ்ல ஒரு பேப்பர்ல எழுதிக் கொடுங்க . உங்க நாலெட்ஜ் எப்படி இருக்குன்னு பார்க்கலாம் . " என்றார் . நான் பனிரெண்டாம் வகுப்பு வரை தமிழ் மீடியத்தில் படித்தவன் . அதனால் மிகவும் சாவகாசமாக லாங்சைஸ் நோட்டில் இருந்து ஒரு பேப்பரைக் கிழித்து மிக மெதுவாக எழுத ஆரம்பித்தேன் . எனக்குப் பக்கத்தில் இருந்த மதியழகன் படுவேகத்தில் எழுதிக் கொண்டிருந்தான் . நான் ஆச்சர்யமாக அவனது பேப்பரை எட்டிப்பார்த்தேன் . மகா மட்டமான கையெழுத்தில் அவன் எழுதிய அந்த ஆங்கிலத்தில் , ஈஸ் , வாஸ் , இட் , பட் , என்ற நான்கு வார்த்தைகளே ஒரு பக்கம் முழுக்க மாறி மாறி இடம் பெற்றிருந்தன . நான் சிரிப்பை அடக்க மிகவும் சிரமப் பட்டேன் . நான் பார்ப்பதை உணர்ந்து கொண்ட மதியழகன் , " அதெல்லாம் அப்படித்தான் . கண்டுக்காதே " என்றான் . அப்போதும் என்னுள் " இவன்லாம் என்னத்த கிழிக்கப் போகிறான் " என்ற எண்ணம் தோன்றியது .

அதன் பிறகு மதியழகனை எங்கள் ஊரில் ஒரு வெள்ளிக்கிழமை சந்தையில் வைத்துப் பார்த்தேன் . லுங்கி கட்டிக் கொண்டு சைக்கிளில் வந்திருந்தான் . " இவனுக்கும் இதே ஊரா " என்று எனக்கு ஆச்சர்யமாக இருந்தது . என்னை அடையாளம் கண்டு கொண்டு " ஹாய் " என்றபடி சென்றுவிட்டான் . பிற்பாடுதான் தெரிந்தது . அந்த மதியழகன் , நான் படித்த அதே அரசு மேல்நிலைப் பள்ளியில் எனக்கு ஒரு வருடம் முன்பு படித்தவன் என்று . ஒரு வருடம் " கேப் " விட்டு பிறகு கல்லூரியில் சேர்ந்திருக்கிறான் . எனக்கு சீனியராக பள்ளியில் இருந்தவனை எனக்கு தெரியாமல் போனதில் ஒன்றும் பெரிய ஆச்சர்யம் ஒன்றும் இல்லை . பொதுவாக என் சுபாவமே அப்படி . இப்போது நீங்கள் புகைவண்டியில் எனக்கு எதிர்த்த சீட்டில் அமர்ந்து கொண்டு என்னோடு ஒரு பத்து மணிநேரம் பயணம் செய்கிறீர்கள் என்று வைத்துக் கொண்டால் , பயணம் முடிந்த பிறகு , பிளாட்பாரத்தில் உங்களை மீண்டும் பார்க்க நேர்ந்தால் , உங்களுக்கு என்னை அடையாளம் தெரியும் . ஆனால் உங்களை எனக்கு அடையாளம் தெரியாது . அதுதான் நான் . ( நீங்கள் காறித்துப்புவது கேட்கிறது ) . அந்த வகையில் மதியழகனை நான் எனது பள்ளிப்பருவம் முழுக்க பார்க்காமலே இருந்ததில் வியப்பேதும் இல்லை . அதோடு , இன்னின்ன பேர்களை , இந்தந்த காலத்தில் , இந்திந்த இடத்தில் தான் பார்க்க வேண்டுமென்று ஒரு கணக்கு இருக்கிறதல்லவா !

எங்கள் கல்லூரிக்கு செல்லும் மூன்றாம் எண் பேருந்தில் ஏறி பிதுங்கி வழியும் பேருந்தில் பதுங்கி நின்று நான் பயணம் செய்த போது , சீனியர் கூட்டம் ஒன்று என்னை " ஓட்ட " ஆரம்பித்தது . ஒருத்தன் என்னிடம் " கண்ணா ..... நீ என்ன பண்ணறே , நம்ம காலேஜ் வரவரைக்கும் கம்பியப் புடிக்காம , கைய விட்டுட்டே வர . மவனே கம்பியப் புடிச்சே , அப்புறம் டாராயடுவே ! " என்றான் . நான் எச்சில் விழுங்கியபடி கம்பியிலிருந்து கையை எடுத்து தள்ளாடியபடி , பக்கத்தில் இருந்த ஒரு சுடிதார் முதுகின் மீது விழுந்து கிழுந்து தொலைக்கக் கூடாதே என்று பிரம்ம பிரயத்தனம் செய்து கொண்டிருந்தேன் . அப்போதுதான் மதியழகன் எனக்கு சப்போட்டுக்கு வந்தான் . என்னை ஓட்டிய அந்த சீனியர் மதியழகனுக்கு பள்ளியில் கிளாஸ்மேட என்பதால் " டேய் ! நம்ம பையன்டா . விடு " என்று மதியழகன் சொன்னதும் அந்த சீனியர் கூலாகி , " என்னடா பயந்துட்டியா " என்று என்னைப் பார்த்து சிரித்ததும் , மதியழகனை நான் முதன் முதலாக பிரமிப்போடு பார்த்தேன் . அதன் பிறகு முதல் வருடம் முழுக்க எனக்கு ராக்கிங் தொல்லை அவ்வளவாக இல்லை என்றால் அதற்கு முழுக்க முழுக்க காரணம் மதியழகன் தான் .

அதன் பின் , முதல் செமஸ்டரில் நான் அனைத்து பாடங்களிலும் பாசாகி எழுபது விழுக்காடு பெற்றிருந்தேன் . மதியழகன் ஆங்கிலத்தில் அரியர் வாங்கியிருந்தான் . அந்த வாரத்தின் சனிக்கிழமையன்று மதியழகன் என் வீட்டிற்கு சைக்கிளில் வந்தான் . அவன் கையில் ஆங்கில நோட்ஸ் இருந்தது . " நீதான் எனக்கு இங்கிலீஸ் சொல்லிக் கொடுக்கணும் " என்றான் . பிறகு நானும் அவனும் பக்கத்தில் இருந்த ஒரு பள்ளியின் கிரவுண்டுக்குப் போனோம் . நான் ஒரு எஸ்ஸே வை ஒவ்வொரு வார்த்தையாக பொருள் சொல்லி சிறிது சிறிதாக அவனுக்கு விளங்க வைத்தேன் . அதன் பிறகு அவன் சனிக்கிழமையானால் ஆங்கில நோட்சைத் தூக்கிக் கொண்டு எங்கள் வீட்டிற்கு வந்துவிடுவான் . இதன் காரணமாக மதியழகன் அடுத்த செமஸ்டரில் ஆங்கிலத்தை கிளியர் செய்தான் . அதன் பிறகு ஒவ்வொரு முறை தேர்வு வரும்போதும் நான்தான் அவனுக்கு சொல்லிக் கொடுப்பேன் . ஒரு கட்டத்தில் மதியழகனுக்கும் எனக்கும் நட்பு அதிகமானது . நான் அவனை சுருக்கமாக " மதி " என்று கூப்பிட ஆரம்பித்தேன் . அவன் என்னை " வாடா , போடா " என்று கூப்பிட ஆரம்பித்தான் .

அடுத்ததாக மதியழகனிடம் நான் ஆச்சர்யப்பட்ட மற்றொரு விஷயம் , என் வகுப்பு பெண்களிடம் அவனுக்கு இருந்த செல்வாக்கு . பொதுவாக நான் பெண்களிடம் பேசமாட்டேன் . அல்லது அவர்கள் என்னிடம் பேசமாட்டார்கள் . என் ராசி அப்படி . என் வகுப்பில் அனைவரும் அட்டு பிகர்களாக இருந்தாலும் , அதிலும் பார்க்கும்படியாக இருப்பவர்கள் , மணிமாலா , கலைச்செல்வி , வேலுமணி , சங்கீதா , சித்ரா , ரேணுகா போன்றவர்கள் . இவர்களை நான் ரகசியமாக சைட் அடிப்பதுண்டு . ஆனால் ஒரு வார்த்தை பேசியது கிடையாது . அவர்களும் " கண்ணாடி " போட்ட என்னை , " காந்தி " என ஒதுக்கி வைத்திருந்தார்கள் . ஆனால் மதியழகனோடு மட்டும் விசேசமாக நட்பு பாராட்டினார்கள் . இத்தனைக்கும் மதியழகன் கருப்பு . தெற்றுப்பல் வேறு . ஆனாலும் அவனுக்கு பெண்கள் விசயத்தில் ஒரு மச்சம் இருந்தது . இன்றைக்கும் அந்தப் பெண்களிடம் மதியழகன் அலைபேசியில் பேசிவருகிறான் . அந்த அளவுக்கு , பெண்களுக்கும் அவனுக்கும் ஒரு ஆழமான அன்யோன்யம் அடிப்படையிலேயே இருந்தது .

அதன் பிறகு அவன் , எங்கள வகுப்பு வாத்தியார்களை " தனியே " போய் பார்க்க ஆரம்பித்தான் . இதனாலேயே மூன்றாம் வருடத்தின் எங்கள வகுப்பின் " ரெப் " ஆனான் . மூன்று வருடத்தின் முடிவில் மதியழகனை கல்லூரியில் பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருந்தது. தேர்வு முடிவில் , அவன் எழுபது விழுக்காடு பெற , நான் என்பது விழுக்காடு பெற்றேன் . நாங்கள் அதே கல்லூரியில் முதுகலைப் படிப்பு பயின்றோம் . அப்போது தான் நானும் அவனும் ஒன்றாக சினிமா போக ஆரம்பித்தோம் . சினிமாவில் , கதாநாயகனுக்கு ஒரு காமெடி நண்பன் இருந்தால் , அந்தக் கதாநாயகனாக என்னையும் , அந்தக் காமெடி நண்பனாக மதியழகனையும் நான் கற்பனை செய்து கொள்வேன் . ஆனால் பின்னாளில் அது அப்படியே உல்டாவாக மாறிப்போனது .
என் கல்லூரிக் காலங்களில் நான் பெரும்பாலும் மதியழகனுடனேயே சுற்றிக்கொண்டிருப்பேன் . அவன் அழகில் சுமார் என்பதால் , அவனோடு இருக்கும் போது நான் பெண்களையே பார்ப்பதைத் தவிர்த்தேன் . இதனாலேயே என் ஆட்டோ கிராப்பில் ஒரு பக்கம் கூட பசுமையாக இல்லை எனலாம் . ஒரு வழியாக முதுகலைப் படிப்பும் முடிந்தது . நான் கோபிச்செட்டி பாளையத்தில் ஆசிரியர் பணியில் சேர்ந்தேன் . மதியழகன் வேலை தேடிக்கொண்டிருந்தான் . ஆறு மாதங்கள் அவன் வேலை வெட்டி எதுவும் இல்லாமல் தான் இருந்தான் . அவனைப் பார்க்க பரிதாபமாக இருந்தது . ஆனால் ஒரு நாள் , தட தட வென்று எங்கள வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளில் வந்து இறங்கினான் . கையில் புது மொபைல் இருந்தது . பெங்களூரில் ஒரு உயர்ந்த நிறுவனத்தில் , நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்திருப்பதாக அவன் சொன்னதும் சத்தியமாக எனக்கு பொறாமையாக இருந்தது . நான் அப்போது மூவாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தேன் . அவனது சம்பளம் எடுத்த எடுப்பிலேயே பதினெட்டாயிரம் ! அதன் பிறகு மதியழகனின் " கலரே " மாறி விட்டது . அவனைப் பார்த்து நானும் வாத்தியார் வேலையை விட்டுத் தொலைத்து ஒரு தனியார் கம்பனியில் வேலைக்கு சேர்ந்து நாசமாய்ப் போனேன் . ஆனால் மதியழகன் பெங்களூரில் அடி பிச்சு உதறுகிறான் . இரண்டு வருடங்களில் சீனியர் சயன்டிஸ்ட்டாக பதவி உயர்வு பெற்று இன்று நாற்பதாயிரம் சம்பளம் வாங்குகிறான் . என் வகுப்புப் பெண்கள் தங்கள் திருமணத்திற்குக் கூட என்னை அழைப்பதில்லை . மதியழகனை மட்டும் அவன் வீட்டிற்க்கே சென்று வருந்தி வருந்தி அழைக்கிறார்கள் . என் வாத்தியார்களுக்கு என் மூஞ்சியே மறந்திருக்கும் . ஆனால் மதியழகன் இப்போதும் அவர்களோடு தொடர்பில் இருக்கிறான் .

இப்போதெல்லாம் ரப்பர் செருப்பு போட்டுக்கொண்டு , நிறைய எண்ணை வைத்து படிய தலை வாரிக்கொண்டு , முக்கால் பேன்ட் போட்டுக்கொண்டு , மஞ்சள் பையை வைத்துக் கொண்டு , மஞ்ச மாக்கான் மாதிரி எவனாவது தென்பட்டால் , " இவன்ல்லாம் என்னத்த கிழிக்கப் போகிறான் " என்று நான் சத்தியமாக நினைப்பதில்லை ! நீங்களும் நினைக்காதீர்கள் !!!

Comments

Post a Comment

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்குபோட்டுப் பிரிப்பதுதான் ! ஏதோவொன்றை எண்ணைச்சட்டியில் பொரிப்பதுதான் ! நரகாசுரன் நமக்குள்ளே மரிப்பதுதான் ! ஒரு சங்கல்பத்தை நெஞ்சுக்குள் வரிப்பதுதான் ! வண்ண வேடிக்கையை வான் வெளியில் விர