Skip to main content
குறிப்பு : இந்தக் கவிதை என் அலுவலக நண்பன் சுரேஷிற்காக .......................



சுரேஷ் ,
உனது பெயரைப் போலவே ,
சிங்கத்தின் பெயர் கூட
'சு' வரிசையில் தான்
ஆரம்பிக்கிறது !


சுரேஷ் ,
'சு' வரிசையில்
உனது பெயர்
ஆரம்பிப்பதாலோ என்னவோ - நீ
சாகசங்களுக்கு சொந்தக்காரன் !
சரித்திரத்தில் இடம்பெறுபவன் !
சிந்தனைகளின் சீர்திருத்தவாதி !
சோதனையிலும் சாதனை செய்பவன் !


சுரேஷ் ,
நீ நடத்திடு
வெற்றியைத் தேடி
ஒரு வீர வேட்டை !
நீ எடுத்திடு
எதிரிகளை விரட்ட
ஒரு வேக சாட்டை !
நீ அமைத்திடு
அன்பால் ஒரு
உறவுக்கோட்டை !
தொடங்கப்போகிறது
இனிதான் உன் ராஜபாட்டை !


சுரேஷ் ,
நீ ,
உழைப்புக்கு அஞ்சாத
வீரத்தளபதி !
நீ ,
உரிமை முழக்கமிடும்
புரட்சித்தளபதி !
நீ ,
வயதில் மூத்தோருக்கு
செல்லத்தளபதி !
நீ ,
அழகைப் பொறுத்தவரை
இன்னொரு இளையதளபதி !
என் போன்ற நண்பனுக்கு
என்றென்றும் நீ அன்புத்தளபதி !


சுரேஷ் ,
நீ ,
சுருங்கச்சொல்லி
விளங்க வைப்பவன் அல்ல !
எதையுமே
விளங்கச்சொல்லி ,
அறிவை மேலும்
துலங்க வைப்பவன் !


சுரேஷ் ,
ஆண்டுக்கணக்காய்
அல்லும் பகலும் ,
அயராது உழைத்து ,
அறிவில் தேக்கிய
அனுபவத் தொழில் நுட்பத்தை
உன் சகஊழியனுக்கு
களங்கமில்லாமல் நீ
கற்றுத்தரும் போதெல்லாம் ,
தன்னையே எரித்துக்கொண்டு
உலகிற்கு ஒளிதரும் தீபம்தான்
சட்டென்று நினைவுக்கு வருகிறது !


சுரேஷ் ,
எதிலும் நீ
தர்க்கம் செய்பவன்
என்பதுதான்
உன் மீதிருக்கும்
ஒரே குற்றச்சாட்டு !
ஆனால்
வரலாற்றின் ஏடுகளை
புரட்டிப்பார்த்தால் ,
வாதிட்டவர்கள் தான்
சாதித்திருக்கிறார்கள்
என்பது புரியும் !
நீ , சாதிக்கப்பிறந்தவன்
வாதிப்பதை நிறுத்தாதே !


சுரேஷ் ,
கருஜெகனும் நீயும்
ஒன்றாக வரும்போதெல்லாம்
வந்தியத்தேவனும்
அருள்மொழித்தேவனும்
வாழ்ந்து வந்த
வரலாறு திரும்புகிறதோ என
வியப்பாய் இருக்கிறது !


சுரேஷ் ,
வெள்ளித்திரையில் ,
வெற்றிகளை
அள்ளிக்குவிக்கும்
அந்தக்காலம்
விரைவிலேயே உன்னிடம்
துள்ளி வரப்போகிறது !
அப்போது பார் !
உன்னை ,
எள்ளி நகையாடியவர்களை எல்லாம் நீ
சொல்லி அடிக்கப்போகிறாய் !
நீ சொல்லி அடிக்கப்போகிறாய் !

Comments

  1. Thanks ji, enakkaga masaala kavidhai ezhudhi ennai vaazhthiyadhaku, keep in touch

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
அபார்ட்மெண்ட் சிறுவனே ................... அடே ! சிறுவா ! உன்னைத்தான் ! இங்கே பார் ! கணினி விளையாட்டை கணநேரம் ஒத்திவை ! கேள் ! விரிந்திருகிறது வீதி !  அதில், விளையாடுவது தானே நீதி ? கட்டம் கட்டு, குறுக்கே கோடிடு ! ஆடலாம் சடுகுடு ! கைக்குட்டை எடு , கண்ணைக் கட்டு ! ஆடு கண்ணாமூச்சி ! ஓடித்தொடுதல் ஆடியதுண்டா ? ஒற்றைக் காலிலும் ஓடித் தொடலாம் ! அதற்குப் பெயர்தான் நொண்டி ! ஆரோக்கியக் காசுகள் சேர்ப்பதில், அதுவொரு அற்புத உண்டி ! அப்புறம் இன்னோர் விளையாட்டு ! ஒருகால் மடக்கிக் குந்து ! தேவையில்லை பந்து ! குச்சியால் குச்சியை உந்து ! எம்பியெழுவதை, ' கில்லித்தட்டு '   -  என்றே நீ சொல்லித்தட்டு !  நிறம் கூறித் துரத்தும் ஆட்டம் பரிச்சையமுண்டா ? திருடன் போலீஸ் தெரியுமா ? நூல் பிடித்தோடி பட்டம் விட்டதில்லையா ? உத்திரத்தில் கயிறு கட்டி தூரி.............? என்னடா உனக்கு எதுவுமே தெரியவில்லை ! மேற்கண்ட விளையாட்டில் வலிமையாகும் உன் தசை ! வெறும் கணினியைத் தட்டுவதில் விரலுக்கு மட்டுமே விசை ! யாருமில்லையா வீட்டில் ? ஓ ! இரவுப்பணி முடித்து இன்னும் உறங்கும் தந்தை ! அழகுநிலையம் சென்று...
கலி , கலாச்சாரம், கற்பு கலி இங்கே முற்றிவிட்டது ! கலாச்சார நதி வற்றிவிட்டது ! நாகரீகத் தீ பற்றிவிட்டது ! ஆபாசப் பாம்பு சுற்றிவிட்டது ! எல்லாம் இங்கே கெட்டு விட்டது ! பண்பாட்டு மரம் பட்டு விட்டது ! எல்லாருமே காமத்தில் கொழுக்கிறார்கள் ! பெரும்பாலோர் பிஞ்சிலேயே பழுக்கிறார்கள் ! சல்லடை போட்டுத் தேடினாலும் கற்புக்கரசர்களை - இங்கு காண முடியாது ! ஸ்ரீ ராமனே வந்தாலும் நூறு சதம் கற்பை - இனி பேண முடியாது ! ஒருத்திக்கு ஒருவன் என்றில்லாத நிலை வரப்போகிறது ! கண்காட்சிக் கூடத்தில் கற்புக்கும் ஒரு சிலை வரப்போகிறது ! கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு சிதையப் போகிறது ! உறவெனும் கோவில் உருத்தெரியாமல் புதையப் போய்கிறது ! அதென்ன அச்சு பிசகாமல் அழகானவர்களுக்கே காதல் வருகிறது ! சொல்லி வைத்தாற்போல சொடக்குப் போடுவதற்குள் மோதல் வருகிறது ! எல்லா காதலர்களும் காது சூடேற பேசுகிறார்கள் காமத்தை ! மோகத்தீயில் வேக வைக்கிறார்கள் அர்த்தராத்திரி சாமத்தை ! அலைபேசியில் அழைக்கும் போது மாறிவிடுகிறது ...