Skip to main content
குறிப்பு : இந்தக் கவிதை என் அலுவலக நண்பன் சுரேஷிற்காக .......................



சுரேஷ் ,
உனது பெயரைப் போலவே ,
சிங்கத்தின் பெயர் கூட
'சு' வரிசையில் தான்
ஆரம்பிக்கிறது !


சுரேஷ் ,
'சு' வரிசையில்
உனது பெயர்
ஆரம்பிப்பதாலோ என்னவோ - நீ
சாகசங்களுக்கு சொந்தக்காரன் !
சரித்திரத்தில் இடம்பெறுபவன் !
சிந்தனைகளின் சீர்திருத்தவாதி !
சோதனையிலும் சாதனை செய்பவன் !


சுரேஷ் ,
நீ நடத்திடு
வெற்றியைத் தேடி
ஒரு வீர வேட்டை !
நீ எடுத்திடு
எதிரிகளை விரட்ட
ஒரு வேக சாட்டை !
நீ அமைத்திடு
அன்பால் ஒரு
உறவுக்கோட்டை !
தொடங்கப்போகிறது
இனிதான் உன் ராஜபாட்டை !


சுரேஷ் ,
நீ ,
உழைப்புக்கு அஞ்சாத
வீரத்தளபதி !
நீ ,
உரிமை முழக்கமிடும்
புரட்சித்தளபதி !
நீ ,
வயதில் மூத்தோருக்கு
செல்லத்தளபதி !
நீ ,
அழகைப் பொறுத்தவரை
இன்னொரு இளையதளபதி !
என் போன்ற நண்பனுக்கு
என்றென்றும் நீ அன்புத்தளபதி !


சுரேஷ் ,
நீ ,
சுருங்கச்சொல்லி
விளங்க வைப்பவன் அல்ல !
எதையுமே
விளங்கச்சொல்லி ,
அறிவை மேலும்
துலங்க வைப்பவன் !


சுரேஷ் ,
ஆண்டுக்கணக்காய்
அல்லும் பகலும் ,
அயராது உழைத்து ,
அறிவில் தேக்கிய
அனுபவத் தொழில் நுட்பத்தை
உன் சகஊழியனுக்கு
களங்கமில்லாமல் நீ
கற்றுத்தரும் போதெல்லாம் ,
தன்னையே எரித்துக்கொண்டு
உலகிற்கு ஒளிதரும் தீபம்தான்
சட்டென்று நினைவுக்கு வருகிறது !


சுரேஷ் ,
எதிலும் நீ
தர்க்கம் செய்பவன்
என்பதுதான்
உன் மீதிருக்கும்
ஒரே குற்றச்சாட்டு !
ஆனால்
வரலாற்றின் ஏடுகளை
புரட்டிப்பார்த்தால் ,
வாதிட்டவர்கள் தான்
சாதித்திருக்கிறார்கள்
என்பது புரியும் !
நீ , சாதிக்கப்பிறந்தவன்
வாதிப்பதை நிறுத்தாதே !


சுரேஷ் ,
கருஜெகனும் நீயும்
ஒன்றாக வரும்போதெல்லாம்
வந்தியத்தேவனும்
அருள்மொழித்தேவனும்
வாழ்ந்து வந்த
வரலாறு திரும்புகிறதோ என
வியப்பாய் இருக்கிறது !


சுரேஷ் ,
வெள்ளித்திரையில் ,
வெற்றிகளை
அள்ளிக்குவிக்கும்
அந்தக்காலம்
விரைவிலேயே உன்னிடம்
துள்ளி வரப்போகிறது !
அப்போது பார் !
உன்னை ,
எள்ளி நகையாடியவர்களை எல்லாம் நீ
சொல்லி அடிக்கப்போகிறாய் !
நீ சொல்லி அடிக்கப்போகிறாய் !

Comments

  1. Thanks ji, enakkaga masaala kavidhai ezhudhi ennai vaazhthiyadhaku, keep in touch

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்குபோட்டுப் பிரிப்பதுதான் ! ஏதோவொன்றை எண்ணைச்சட்டியில் பொரிப்பதுதான் ! நரகாசுரன் நமக்குள்ளே மரிப்பதுதான் ! ஒரு சங்கல்பத்தை நெஞ்சுக்குள் வரிப்பதுதான் ! வண்ண வேடிக்கையை வான் வெளியில் விர