குறிப்பு : இந்தக் கவிதை பிரம்மச்சாரி இளைஞர்களுக்கு மட்டும்
'குடி'யுரிமை
இளைஞனே ,
நேற்று மாலை
மதுவருந்தியதற்க்காக நீ
மனம்வருந்தாதே !
மது குடிப்பதற்கான
முழு உரிமையும் உள்ளவன் நீதான் !
பிறந்தவூர் என்பது உனக்கு
மறந்தவூர் ஆகிவிட்டது !
தொலைவில் உள்ளதாலேயே , அது
தொலைந்த ஊர் ஆகிவிட்டது !
சொந்த ஊர் விட்டு ,
பிழைப்புத் தேடி
வந்த ஊர் என்பது
வாழ்க்கையில் மிகவும்
நொந்த ஊர் ஆகிவிட்டது !
பேயைப் போல உழைத்தாலும்
நாயைப் போல நடத்தும்
பணியிடம் என்னும் பிணியிடம் !
காதலிக்க ஆளின்றி
பேதலிக்கும் மனது !
சுகமான
மதியத் தூக்கத்தின் பின்வரும்
சூனிய மாலைகள் !
கடைகளில்
கிடைத்ததைத் தின்று
பேதி வந்து
பாதி செத்தாலும்
நாதியில்லாத நிலை !
வாசலில் அமர்ந்து
வீதியைப் பார்த்து
விரக்தியை வளர்த்து
நீ கழித்த விடுமுறைகள்
எத்தனை எத்தனை ?
பெருங்கூட்டப் புகைவண்டியில்
ஒற்றைக் காலில் நின்றுகொண்டு
இரவெல்லாம் அயராத இமையோடு ,
தோளைவிட்டுப் பெயராத சுமையோடு ,
பயணம் முழுக்க சயனம் இன்றி ,
பாதிஇறந்து பிறந்தவூர் வந்து
பயணக்களைப்பில் பகலெல்லாம்
படுத்துறங்கி படுத்துறங்கி
நீ தொலைத்த பண்டிகை நாட்கள்
எத்தனை எத்தனை ?
வாலிபத்தின் பசிக்கு
காதல் கனி கிடைக்க
வசதியாய் இருக்க வேண்டும் , அல்லது
வனப்பாயிருக்க வேண்டும் !
அது ,
' இருப்பவர்களுக்கு ' மட்டுமேயான
இளமையின் இன்பவிளையாட்டு !
இதுபோன்ற விளையாட்டில்
ஈடுபடத் தகுதியற்ற
உன்னைப் போன்றவர்கள்தான்
உண்மையிலேயே ,
குடிப்பதற்கான
'குடி' யுரிமை பெற்றவர்கள் !
இரவுப்பணி முடித்து ,
பார் மறந்து பாயில் படுத்துறங்க
'பார் ' தேடி நீ போவதொன்றும்
போர் குற்றம் ஆகாதடா !
உனக்கு ,
நயந்து பேச நங்கை இல்லை !
மயங்கிப் பேச மங்கை இல்லை !
கொஞ்சிப் பேச வஞ்சி இல்லை !
சேவை செய்ய பாவை இல்லை !
மாதின் போதை மறுக்கப்பட்ட உனக்கு
மதுவின் போதை கொள்ள
மறுப்பேதும் மண்பதையில் இல்லை !
மனம் போல நீ மதுவருந்து !
இளமைக்கு அது , புதுவிருந்து !
இளைஞனே ,
உனக்கொரு
காதலி கிடைக்காததுதான்
உன் வாலிபத்திற்கு வந்த
உண்மையான இழுக்கு !
குடித்துப்பார் மறைந்துபோகும்
புறவுலகின் ,
தொன்மையான அழுக்கு !
இறுதியாக ஒன்று ,
மனதிற்கினிய மனைவியும் ,
பேர்சொல்லப் பிள்ளையும்
இவ்வாறாக ,
குதூகலித்துக் கொண்டாட
ஒரு குடும்பம்
உனக்கென்று வாய்த்துவிட்டால்
குடிப்பதற்கான முழு உரிமையும்
பகிங்கரமாக உன்னிடமிருந்து
பறிக்கப்படுகிறது என்பதைமட்டும்
புத்தியில் இருத்திக்கொள் !!!
பின்குறிப்பு : பார் , மண்பதை - உலகம் , தொன்மை - பழமை , சயனம் - உறக்கம் .
Comments
Post a Comment