Skip to main content
குறிப்பு : இந்தக் கவிதை பிரம்மச்சாரி இளைஞர்களுக்கு மட்டும்






'குடி'யுரிமை






இளைஞனே ,


நேற்று மாலை


மதுவருந்தியதற்க்காக நீ


மனம்வருந்தாதே !


மது குடிப்பதற்கான


முழு உரிமையும் உள்ளவன் நீதான் !




பிறந்தவூர் என்பது உனக்கு


மறந்தவூர் ஆகிவிட்டது !




தொலைவில் உள்ளதாலேயே , அது


தொலைந்த ஊர் ஆகிவிட்டது !




சொந்த ஊர் விட்டு ,


பிழைப்புத் தேடி


வந்த ஊர் என்பது


வாழ்க்கையில் மிகவும்


நொந்த ஊர் ஆகிவிட்டது !




பேயைப் போல உழைத்தாலும்


நாயைப் போல நடத்தும்


பணியிடம் என்னும் பிணியிடம் !




காதலிக்க ஆளின்றி


பேதலிக்கும் மனது !




சுகமான


மதியத் தூக்கத்தின் பின்வரும்


சூனிய மாலைகள் !




கடைகளில்


கிடைத்ததைத் தின்று


பேதி வந்து


பாதி செத்தாலும்


நாதியில்லாத நிலை !




வாசலில் அமர்ந்து


வீதியைப் பார்த்து


விரக்தியை வளர்த்து


நீ கழித்த விடுமுறைகள்


எத்தனை எத்தனை ?




பெருங்கூட்டப் புகைவண்டியில்


ஒற்றைக் காலில் நின்றுகொண்டு


இரவெல்லாம் அயராத இமையோடு ,


தோளைவிட்டுப் பெயராத சுமையோடு ,


பயணம் முழுக்க சயனம் இன்றி ,


பாதிஇறந்து பிறந்தவூர் வந்து


பயணக்களைப்பில் பகலெல்லாம்


படுத்துறங்கி படுத்துறங்கி


நீ தொலைத்த பண்டிகை நாட்கள்


எத்தனை எத்தனை ?




வாலிபத்தின் பசிக்கு


காதல் கனி கிடைக்க


வசதியாய் இருக்க வேண்டும் , அல்லது


வனப்பாயிருக்க வேண்டும் !


அது ,


' இருப்பவர்களுக்கு ' மட்டுமேயான


இளமையின் இன்பவிளையாட்டு !


இதுபோன்ற விளையாட்டில்


ஈடுபடத் தகுதியற்ற


உன்னைப் போன்றவர்கள்தான்


உண்மையிலேயே ,


குடிப்பதற்கான


'குடி' யுரிமை பெற்றவர்கள் !




இரவுப்பணி முடித்து ,


பார் மறந்து பாயில் படுத்துறங்க


'பார் ' தேடி நீ போவதொன்றும்


போர் குற்றம் ஆகாதடா !




உனக்கு ,


நயந்து பேச நங்கை இல்லை !


மயங்கிப் பேச மங்கை இல்லை !


கொஞ்சிப் பேச வஞ்சி இல்லை !


சேவை செய்ய பாவை இல்லை !


மாதின் போதை மறுக்கப்பட்ட உனக்கு


மதுவின் போதை கொள்ள


மறுப்பேதும் மண்பதையில் இல்லை !


மனம் போல நீ மதுவருந்து !


இளமைக்கு அது , புதுவிருந்து !




இளைஞனே ,


உனக்கொரு


காதலி கிடைக்காததுதான்


உன் வாலிபத்திற்கு வந்த


உண்மையான இழுக்கு !


குடித்துப்பார் மறைந்துபோகும்


புறவுலகின் ,


தொன்மையான அழுக்கு !




இறுதியாக ஒன்று ,




மனதிற்கினிய மனைவியும் ,


பேர்சொல்லப் பிள்ளையும்


இவ்வாறாக ,


குதூகலித்துக் கொண்டாட


ஒரு குடும்பம்


உனக்கென்று வாய்த்துவிட்டால்


குடிப்பதற்கான முழு உரிமையும்


பகிங்கரமாக உன்னிடமிருந்து


பறிக்கப்படுகிறது என்பதைமட்டும்


புத்தியில் இருத்திக்கொள் !!!








பின்குறிப்பு : பார் , மண்பதை - உலகம் , தொன்மை - பழமை , சயனம் - உறக்கம் .


Comments

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்குபோட்டுப் பிரிப்பதுதான் ! ஏதோவொன்றை எண்ணைச்சட்டியில் பொரிப்பதுதான் ! நரகாசுரன் நமக்குள்ளே மரிப்பதுதான் ! ஒரு சங்கல்பத்தை நெஞ்சுக்குள் வரிப்பதுதான் ! வண்ண வேடிக்கையை வான் வெளியில் விர