Skip to main content
இப்படியும் இருங்களேன் ...........




அந்த காலை நேரத் தேநீர்


சுவையாக இருந்தால்


ரசித்துக் குடியுங்களேன் !


அதன் பிறகு அன்று


'தினசரி ' வரவில்லையென்ற எரிச்சலை


துணைவியிடம் காட்ட மாட்டீர்கள் !




விட்டுப் போன பேருந்தை


விரட்டாமல் விட்டுத்தான் பாருங்களேன் !


குறைந்தபட்சம் அன்றைய தினம்


உங்கள் பணப்பை பத்திரமாயிருக்கலாம் !




தேர்வில் தோற்ற உங்கள் மகனைத்


திட்டாமல் தேற்றுங்களேன் !


அடுத்த தேர்வில் அதிசயமாய் அவன்


அற்புத மதிப்பெண்கள் பெறலாம் !




கையேந்தி நிற்கும்


அந்தப் பிச்சைக்காரிக்கு


இருப்பதிலிருந்து


இயன்றதைக் கொடுங்களேன் !


நிகழவிருக்கும் நஷ்டமொன்று


அதனால் தடுக்கப்படலாம் !




உங்களை நோக்கி


துப்பாக்கியை நீட்டும்


உங்கள் எதிரியிடம்


ஒரு புன்னகை புரிந்துதான்


பாருங்களேன் !


அவனது கைகள் அடுத்தநொடியே


அன்பினால் செயலிழந்து போகலாம் !




பேருந்தில்


காலியான அந்த இருக்கையை


நின்றுகொண்டிருக்கும்


நரைக்கிழவிக்கு விட்டுத்தான்


கொடுங்களேன் !


அடுத்த நிறுத்தத்தில் உங்களுக்கு


ஜன்னலோர இருக்கையே


ஜம்மென்று கிடைக்கலாம் !




உங்கள் தலைமையின் தரம்


திருப்தியளிக்கிறதா என்று


உங்கள் ஊழியனிடம் ஒருநாளாவது


கேட்டுப் பாருங்களேன் !


அதன் பிறகு அவன் என்றுமே


உங்களுக்கு உண்மையாயிருக்கலாம் !




ஏதோ சண்டையால்


உங்களோடு பேசாமலிருக்கும்


உங்கள் அலுவலக நண்பனை


ஒரு காபி சாப்பிட


நீங்களாக அழையுங்களேன் !


அதன் பிறகு என்றென்றும்


நீங்கள் நண்பர்களாகவே இருக்கலாம் !




குடித்துக் கழிக்கும்


வாரயிறுதிக் கொண்டாட்டத்தில்


ஈடுபடாமல் தான் இருங்களேன் !


அதனாலேயே


அந்த மாதத்தின் மழை


பொய்க்காமல் பெய்யலாம் !




உலக நன்மையின் பொருட்டு


கணநேரமாவது உங்கள்


கடவுளின் முன்பு


கண்மூடி நில்லுங்களேன் !


அதனால் ,


சீறவிருக்கும் ஒரு சுனாமியும்


சும்மாயிருந்து விடலாம் !!!

Comments

Popular posts from this blog

அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
அபார்ட்மெண்ட் சிறுவனே ................... அடே ! சிறுவா ! உன்னைத்தான் ! இங்கே பார் ! கணினி விளையாட்டை கணநேரம் ஒத்திவை ! கேள் ! விரிந்திருகிறது வீதி !  அதில், விளையாடுவது தானே நீதி ? கட்டம் கட்டு, குறுக்கே கோடிடு ! ஆடலாம் சடுகுடு ! கைக்குட்டை எடு , கண்ணைக் கட்டு ! ஆடு கண்ணாமூச்சி ! ஓடித்தொடுதல் ஆடியதுண்டா ? ஒற்றைக் காலிலும் ஓடித் தொடலாம் ! அதற்குப் பெயர்தான் நொண்டி ! ஆரோக்கியக் காசுகள் சேர்ப்பதில், அதுவொரு அற்புத உண்டி ! அப்புறம் இன்னோர் விளையாட்டு ! ஒருகால் மடக்கிக் குந்து ! தேவையில்லை பந்து ! குச்சியால் குச்சியை உந்து ! எம்பியெழுவதை, ' கில்லித்தட்டு '   -  என்றே நீ சொல்லித்தட்டு !  நிறம் கூறித் துரத்தும் ஆட்டம் பரிச்சையமுண்டா ? திருடன் போலீஸ் தெரியுமா ? நூல் பிடித்தோடி பட்டம் விட்டதில்லையா ? உத்திரத்தில் கயிறு கட்டி தூரி.............? என்னடா உனக்கு எதுவுமே தெரியவில்லை ! மேற்கண்ட விளையாட்டில் வலிமையாகும் உன் தசை ! வெறும் கணினியைத் தட்டுவதில் விரலுக்கு மட்டுமே விசை ! யாருமில்லையா வீட்டில் ? ஓ ! இரவுப்பணி முடித்து இன்னும் உறங்கும் தந்தை ! அழகுநிலையம் சென்று...
கலி , கலாச்சாரம், கற்பு கலி இங்கே முற்றிவிட்டது ! கலாச்சார நதி வற்றிவிட்டது ! நாகரீகத் தீ பற்றிவிட்டது ! ஆபாசப் பாம்பு சுற்றிவிட்டது ! எல்லாம் இங்கே கெட்டு விட்டது ! பண்பாட்டு மரம் பட்டு விட்டது ! எல்லாருமே காமத்தில் கொழுக்கிறார்கள் ! பெரும்பாலோர் பிஞ்சிலேயே பழுக்கிறார்கள் ! சல்லடை போட்டுத் தேடினாலும் கற்புக்கரசர்களை - இங்கு காண முடியாது ! ஸ்ரீ ராமனே வந்தாலும் நூறு சதம் கற்பை - இனி பேண முடியாது ! ஒருத்திக்கு ஒருவன் என்றில்லாத நிலை வரப்போகிறது ! கண்காட்சிக் கூடத்தில் கற்புக்கும் ஒரு சிலை வரப்போகிறது ! கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு சிதையப் போகிறது ! உறவெனும் கோவில் உருத்தெரியாமல் புதையப் போய்கிறது ! அதென்ன அச்சு பிசகாமல் அழகானவர்களுக்கே காதல் வருகிறது ! சொல்லி வைத்தாற்போல சொடக்குப் போடுவதற்குள் மோதல் வருகிறது ! எல்லா காதலர்களும் காது சூடேற பேசுகிறார்கள் காமத்தை ! மோகத்தீயில் வேக வைக்கிறார்கள் அர்த்தராத்திரி சாமத்தை ! அலைபேசியில் அழைக்கும் போது மாறிவிடுகிறது ...