Skip to main content
இப்படியும் இருங்களேன் ...........




அந்த காலை நேரத் தேநீர்


சுவையாக இருந்தால்


ரசித்துக் குடியுங்களேன் !


அதன் பிறகு அன்று


'தினசரி ' வரவில்லையென்ற எரிச்சலை


துணைவியிடம் காட்ட மாட்டீர்கள் !




விட்டுப் போன பேருந்தை


விரட்டாமல் விட்டுத்தான் பாருங்களேன் !


குறைந்தபட்சம் அன்றைய தினம்


உங்கள் பணப்பை பத்திரமாயிருக்கலாம் !




தேர்வில் தோற்ற உங்கள் மகனைத்


திட்டாமல் தேற்றுங்களேன் !


அடுத்த தேர்வில் அதிசயமாய் அவன்


அற்புத மதிப்பெண்கள் பெறலாம் !




கையேந்தி நிற்கும்


அந்தப் பிச்சைக்காரிக்கு


இருப்பதிலிருந்து


இயன்றதைக் கொடுங்களேன் !


நிகழவிருக்கும் நஷ்டமொன்று


அதனால் தடுக்கப்படலாம் !




உங்களை நோக்கி


துப்பாக்கியை நீட்டும்


உங்கள் எதிரியிடம்


ஒரு புன்னகை புரிந்துதான்


பாருங்களேன் !


அவனது கைகள் அடுத்தநொடியே


அன்பினால் செயலிழந்து போகலாம் !




பேருந்தில்


காலியான அந்த இருக்கையை


நின்றுகொண்டிருக்கும்


நரைக்கிழவிக்கு விட்டுத்தான்


கொடுங்களேன் !


அடுத்த நிறுத்தத்தில் உங்களுக்கு


ஜன்னலோர இருக்கையே


ஜம்மென்று கிடைக்கலாம் !




உங்கள் தலைமையின் தரம்


திருப்தியளிக்கிறதா என்று


உங்கள் ஊழியனிடம் ஒருநாளாவது


கேட்டுப் பாருங்களேன் !


அதன் பிறகு அவன் என்றுமே


உங்களுக்கு உண்மையாயிருக்கலாம் !




ஏதோ சண்டையால்


உங்களோடு பேசாமலிருக்கும்


உங்கள் அலுவலக நண்பனை


ஒரு காபி சாப்பிட


நீங்களாக அழையுங்களேன் !


அதன் பிறகு என்றென்றும்


நீங்கள் நண்பர்களாகவே இருக்கலாம் !




குடித்துக் கழிக்கும்


வாரயிறுதிக் கொண்டாட்டத்தில்


ஈடுபடாமல் தான் இருங்களேன் !


அதனாலேயே


அந்த மாதத்தின் மழை


பொய்க்காமல் பெய்யலாம் !




உலக நன்மையின் பொருட்டு


கணநேரமாவது உங்கள்


கடவுளின் முன்பு


கண்மூடி நில்லுங்களேன் !


அதனால் ,


சீறவிருக்கும் ஒரு சுனாமியும்


சும்மாயிருந்து விடலாம் !!!

Comments

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்குபோட்டுப் பிரிப்பதுதான் ! ஏதோவொன்றை எண்ணைச்சட்டியில் பொரிப்பதுதான் ! நரகாசுரன் நமக்குள்ளே மரிப்பதுதான் ! ஒரு சங்கல்பத்தை நெஞ்சுக்குள் வரிப்பதுதான் ! வண்ண வேடிக்கையை வான் வெளியில் விர