Skip to main content
முகநூல் அழகி






முதன் முதலில்


முகநூலில் அவள்


முகம் பார்த்தேன் !




பால்நிலவொளி


பளிங்குக்கல்லில்


பட்டுத்தெறித்தது போல


பைங்கிளியவள்


பட்டொளிவீசிக்கொண்டிருந்தாள் !




" நான் நலம்


நீ நலமா ? " என்று


நாசுக்கானதொரு


நேசவரியை அனுப்பிவைத்து


நாட்கணக்காய்


நகம்கடித்துக் காத்திருந்தேன் !




நான்கு நாட்கள் கழித்து


நான் யார் என்பதை


யூகிக்க முடியாமல்


" யார் இது ? " என்று


ஒரே ஒருவரியை மட்டும்


ஒப்புக்கு அனுப்பியிருந்தாள் !




எதிர்பாராத அவள்


எதிர்வினை கண்டு


மேற்கொண்டு என்ன செய்வதென


மேலும் மேலும் யோசிக்கலானேன் !




நான்


அனுப்பியது போன்றதொரு


அன்புத்தூதை அநேகமாக


ஆயிரம் பேராவது


அவளுக்கு அனுப்பியிருப்பார்கள் .


அவளும் அவைகளை


அழகாக மறுத்து மறுத்து


வெறுத்துப் போயிருப்பாள் !


நான் அவளுக்கு அந்த


ஆயிரத்தோடு ஒருவனாய்


ஆவதா ? அல்லது


ஆயிரத்தில் ஒருவனாய்


ஆவதா ? என்பதை


ஆண்டவனால் கூட


அனுமானிக்க முடியாது என்று


அடிமனதில் ஒரு அவலக்குரல்


அடிக்கடி சொல்லித்தொலைத்தது !




கொதிநீருள்ள


கண்ணாடிக் குடுவையை


கைகளில் வைத்துக்கொண்டு


கயிற்றின் மீது நடக்கிறாயே


கடன்காரா ! என்று


மனசாட்சி மௌனமாய்


மனதிற்குள் சிரித்தது !




இருந்தாலும்


இயன்றவரை


முயன்று பார்ப்பதை


அனுபவத்திலும் சிறிது


பயின்று பார்ப்போமே என்று ,


" நான் இன்னார் .


இங்கு பணிபுரிகிறேன்


உன்னோடு நட்புச்செய்ய


உவப்பாய் உள்ளேன்


விருப்பமிருந்தால்


விருப்பம் தெரிவி ! " என்று


நாகரிகமாய் நயந்து


அனுப்பினாலும்


பதில் வருமோ வராதோ என


பயந்து காத்திருந்தேன் !




பத்து நாளாகியும்


பதில் வராததால்


" போடி இவளே ! " என்று


பிழைப்பைப் பார்க்கப்


புகுந்த போது ,


முகநூலில் அவள்தன்


முகவுரை அனுப்பியிருப்பதை


மின்னஞ்சல் ஒன்று


மின்னல் போல அறிவித்ததில்


இதயத்தில் ஓர்


இன்பப்பின்னல்


இதமாய் வந்து விழுந்தது !




முகவுரை அனுப்பியவளுக்கு


பக்கத்தை நிரப்பி


பதிலுரை எழுதி ,


பதில் வருமா என


பைத்தியகாரன் போல


பரிதவித்திருந்தேன் !




சிலநாட்கள் கழித்து


சாவகாசமாக ,


" சரி " என்று மட்டும்


செய்தியனுப்பினாள்


சதிகாரி !




அடுத்ததாக அவளது


அலைபேசி எண் கேட்டு


அறிவுகெட்டு அரைவரியில்


அனுப்பினேன் மறுசெய்தி !


சுக்கிரன் எனக்கு


சூனியம் வைத்து விட்டான் போலும் !


பழையபடியே


பத்து நாளாகியும்


பதிலில்லை !




ஆனாலும் ஒரு


நப்பாசையில் ,


அவள் மீதிருந்த


தப்பாசையில் ,


முகநூலை ,


மீண்டும் மீண்டும் திறந்தேன் !


அன்றாட அலுவலை


அடிக்கடி மறந்தேன் !


அவள் நினைவாலேயே


மனத்தால் மட்டும்


மறுபடி மறுபடி இறந்தேன் !




மாதம் ஒன்று


உருண்டு போயிருந்த போது


அவள் முகம்


என் மனத்திரையில்


இருண்டு போயிருந்தது !


பிழைப்பு


பிழைத்திருத்தம் செய்யப்பட்டு


பழையபடி பங்கமில்லாமல் நடந்தது !




ஆனால் ,




மந்தகாசமான


ஒரு வெள்ளிக்கிழமை


மாலையில் ,


முகநூலை


மறுபடியும் திறந்தபோது


மற்றொருத்தியின்


முகம் பார்த்தேன் !




தங்கத் துகள் கொண்டு


அங்கம் செய்தது போல


மினு மினுவென


மின்னிக்கொண்டிருந்தாள் அந்த


முகநூல் அழகி !!!




" நான் நலம்
நீ நலமா ? " என்று
நாசுக்கானதொரு
நேசவரியை அனுப்பிவைத்து
நாட்கணக்காய்
நகம்கடித்துக் காத்திருக்கலானேன் !!!






குறிப்பு : முகநூல் - face book




Comments

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்குபோட்டுப் பிரிப்பதுதான் ! ஏதோவொன்றை எண்ணைச்சட்டியில் பொரிப்பதுதான் ! நரகாசுரன் நமக்குள்ளே மரிப்பதுதான் ! ஒரு சங்கல்பத்தை நெஞ்சுக்குள் வரிப்பதுதான் ! வண்ண வேடிக்கையை வான் வெளியில் விர