Skip to main content
பார்வையற்றவன்









அவன் ஒரு
குருடன் !

அந்தப்
பேருந்து நிறுத்தத்திற்கு
எங்கிருந்தோ
அவன்
வந்து சேர்ந்தான் !

என்னைத் தவிர
இன்னும் சிலர்
அங்கே
நின்றிருந்தார்கள் !

நான்
பாக்கெட்டைத் தொட்டு
சில்லறை இருப்பதை
உறுதி செய்துகொண்டேன் !

யாரிடமும்
அவன்
காசு கேட்காதது
கொஞ்சம்
உறுத்தலாக  இருந்தது !

கையிலிருந்த
குச்சியால்
தட்டித் தட்டி
தனக்கான
இடத்தைத்
தேர்ந்தெடுத்து
நின்றுகொண்டான் அவன் !

என்னைப் போலவே
இன்னும் சிலர்
அவனைப்
பரிதாபமாகப்
பார்த்தனர் !

அவன்
எங்கு போகவேண்டும் ?

அவனுக்கான
பேருந்து எது ?

யாரும்
அவனிடம்
கேட்கவில்லை !

அவனும்
யாரிடமும்
கேட்கவில்லை !

நிச்சயம்
இந்தஇடத்திற்கு
அவன்
புதியவன் தான் !

எந்தநம்பிக்கையில்
இங்கே வந்து நிற்கிறான் ?

யாராவது
அவனுக்கு
உதவுங்களேன் !

இவனும்
வாயைத் திறந்து
கேட்கிறானா பார் !

எனக்கும்
அவனை அணுக
கொஞ்சம்
தயக்கமாகஇருந்தது !

எதற்கு
வீண் வம்பு ?

பவித்ராவுக்கு
இதெல்லாம்
சுத்தமாகப்
பிடிக்காது !

மறக்காமல்
தெருமுக்குக் கடையில்
குழந்தைக்கு
பேபி பவுடர்
வாங்கவேண்டும் !

எனக்கான
பேருந்து வந்ததும்
பெருமூச்சு விட்டேன் !

ஜன்னலோரத்தில்
அமர்ந்து
மீண்டும் அவனைப்
பார்த்தேன் !

தனக்கான
பேருந்திற்காக
அவன்
காத்திருந்தான் !

எப்படிக்
கண்டு பிடிப்பான் ?

நடத்துனர்
தெரிந்தவரோ ?

இவனுக்கு
வெளியில்
என்னவேலை ?

வாயைத் திறந்து
யாரிடமாவது
கேட்டால் தானே !

ஒருவேளை
அவன்
கூடவே
ஊமையாகவும்
செவிடாகவும்
இருந்தால் ...............

சுருக்
என்றது !

என்
பேருந்து
புறப்பட்டு விட்டது !

எட்டிப் பார்த்தேன் !

எவனோ
ஒரு இளைஞன்
அவனை
அணுகிக் கொண்டிருந்தான் !

மனசுக்குள்
ஒரு
அசட்டுத் திருப்தி !

Comments

  1. மிகவும் அழகான யதார்த்தமான படைப்பு. நம்மில் பலரும் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் கண்ணிருந்து குருடர்கள் போலவே தான் செயல்பட வேண்டியுள்ளது.

    பகிர்வுக்கு நன்றிகள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. கவிதையின் யதார்த்தத்தை உணர்ந்த தங்களுக்கு நன்றிகள் ஐயா !

      Delete

Post a Comment

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்குபோட்டுப் பிரிப்பதுதான் ! ஏதோவொன்றை எண்ணைச்சட்டியில் பொரிப்பதுதான் ! நரகாசுரன் நமக்குள்ளே மரிப்பதுதான் ! ஒரு சங்கல்பத்தை நெஞ்சுக்குள் வரிப்பதுதான் ! வண்ண வேடிக்கையை வான் வெளியில் விர