Skip to main content
பார்வையற்றவன்









அவன் ஒரு
குருடன் !

அந்தப்
பேருந்து நிறுத்தத்திற்கு
எங்கிருந்தோ
அவன்
வந்து சேர்ந்தான் !

என்னைத் தவிர
இன்னும் சிலர்
அங்கே
நின்றிருந்தார்கள் !

நான்
பாக்கெட்டைத் தொட்டு
சில்லறை இருப்பதை
உறுதி செய்துகொண்டேன் !

யாரிடமும்
அவன்
காசு கேட்காதது
கொஞ்சம்
உறுத்தலாக  இருந்தது !

கையிலிருந்த
குச்சியால்
தட்டித் தட்டி
தனக்கான
இடத்தைத்
தேர்ந்தெடுத்து
நின்றுகொண்டான் அவன் !

என்னைப் போலவே
இன்னும் சிலர்
அவனைப்
பரிதாபமாகப்
பார்த்தனர் !

அவன்
எங்கு போகவேண்டும் ?

அவனுக்கான
பேருந்து எது ?

யாரும்
அவனிடம்
கேட்கவில்லை !

அவனும்
யாரிடமும்
கேட்கவில்லை !

நிச்சயம்
இந்தஇடத்திற்கு
அவன்
புதியவன் தான் !

எந்தநம்பிக்கையில்
இங்கே வந்து நிற்கிறான் ?

யாராவது
அவனுக்கு
உதவுங்களேன் !

இவனும்
வாயைத் திறந்து
கேட்கிறானா பார் !

எனக்கும்
அவனை அணுக
கொஞ்சம்
தயக்கமாகஇருந்தது !

எதற்கு
வீண் வம்பு ?

பவித்ராவுக்கு
இதெல்லாம்
சுத்தமாகப்
பிடிக்காது !

மறக்காமல்
தெருமுக்குக் கடையில்
குழந்தைக்கு
பேபி பவுடர்
வாங்கவேண்டும் !

எனக்கான
பேருந்து வந்ததும்
பெருமூச்சு விட்டேன் !

ஜன்னலோரத்தில்
அமர்ந்து
மீண்டும் அவனைப்
பார்த்தேன் !

தனக்கான
பேருந்திற்காக
அவன்
காத்திருந்தான் !

எப்படிக்
கண்டு பிடிப்பான் ?

நடத்துனர்
தெரிந்தவரோ ?

இவனுக்கு
வெளியில்
என்னவேலை ?

வாயைத் திறந்து
யாரிடமாவது
கேட்டால் தானே !

ஒருவேளை
அவன்
கூடவே
ஊமையாகவும்
செவிடாகவும்
இருந்தால் ...............

சுருக்
என்றது !

என்
பேருந்து
புறப்பட்டு விட்டது !

எட்டிப் பார்த்தேன் !

எவனோ
ஒரு இளைஞன்
அவனை
அணுகிக் கொண்டிருந்தான் !

மனசுக்குள்
ஒரு
அசட்டுத் திருப்தி !

Comments

  1. மிகவும் அழகான யதார்த்தமான படைப்பு. நம்மில் பலரும் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் கண்ணிருந்து குருடர்கள் போலவே தான் செயல்பட வேண்டியுள்ளது.

    பகிர்வுக்கு நன்றிகள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. கவிதையின் யதார்த்தத்தை உணர்ந்த தங்களுக்கு நன்றிகள் ஐயா !

      Delete

Post a Comment

Popular posts from this blog

அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
அபார்ட்மெண்ட் சிறுவனே ................... அடே ! சிறுவா ! உன்னைத்தான் ! இங்கே பார் ! கணினி விளையாட்டை கணநேரம் ஒத்திவை ! கேள் ! விரிந்திருகிறது வீதி !  அதில், விளையாடுவது தானே நீதி ? கட்டம் கட்டு, குறுக்கே கோடிடு ! ஆடலாம் சடுகுடு ! கைக்குட்டை எடு , கண்ணைக் கட்டு ! ஆடு கண்ணாமூச்சி ! ஓடித்தொடுதல் ஆடியதுண்டா ? ஒற்றைக் காலிலும் ஓடித் தொடலாம் ! அதற்குப் பெயர்தான் நொண்டி ! ஆரோக்கியக் காசுகள் சேர்ப்பதில், அதுவொரு அற்புத உண்டி ! அப்புறம் இன்னோர் விளையாட்டு ! ஒருகால் மடக்கிக் குந்து ! தேவையில்லை பந்து ! குச்சியால் குச்சியை உந்து ! எம்பியெழுவதை, ' கில்லித்தட்டு '   -  என்றே நீ சொல்லித்தட்டு !  நிறம் கூறித் துரத்தும் ஆட்டம் பரிச்சையமுண்டா ? திருடன் போலீஸ் தெரியுமா ? நூல் பிடித்தோடி பட்டம் விட்டதில்லையா ? உத்திரத்தில் கயிறு கட்டி தூரி.............? என்னடா உனக்கு எதுவுமே தெரியவில்லை ! மேற்கண்ட விளையாட்டில் வலிமையாகும் உன் தசை ! வெறும் கணினியைத் தட்டுவதில் விரலுக்கு மட்டுமே விசை ! யாருமில்லையா வீட்டில் ? ஓ ! இரவுப்பணி முடித்து இன்னும் உறங்கும் தந்தை ! அழகுநிலையம் சென்று...
கலி , கலாச்சாரம், கற்பு கலி இங்கே முற்றிவிட்டது ! கலாச்சார நதி வற்றிவிட்டது ! நாகரீகத் தீ பற்றிவிட்டது ! ஆபாசப் பாம்பு சுற்றிவிட்டது ! எல்லாம் இங்கே கெட்டு விட்டது ! பண்பாட்டு மரம் பட்டு விட்டது ! எல்லாருமே காமத்தில் கொழுக்கிறார்கள் ! பெரும்பாலோர் பிஞ்சிலேயே பழுக்கிறார்கள் ! சல்லடை போட்டுத் தேடினாலும் கற்புக்கரசர்களை - இங்கு காண முடியாது ! ஸ்ரீ ராமனே வந்தாலும் நூறு சதம் கற்பை - இனி பேண முடியாது ! ஒருத்திக்கு ஒருவன் என்றில்லாத நிலை வரப்போகிறது ! கண்காட்சிக் கூடத்தில் கற்புக்கும் ஒரு சிலை வரப்போகிறது ! கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு சிதையப் போகிறது ! உறவெனும் கோவில் உருத்தெரியாமல் புதையப் போய்கிறது ! அதென்ன அச்சு பிசகாமல் அழகானவர்களுக்கே காதல் வருகிறது ! சொல்லி வைத்தாற்போல சொடக்குப் போடுவதற்குள் மோதல் வருகிறது ! எல்லா காதலர்களும் காது சூடேற பேசுகிறார்கள் காமத்தை ! மோகத்தீயில் வேக வைக்கிறார்கள் அர்த்தராத்திரி சாமத்தை ! அலைபேசியில் அழைக்கும் போது மாறிவிடுகிறது ...