Skip to main content
வாழ்க தேசியம் !
ஓங்குக நாட்டுப்பற்று
!






தொலைக்காட்சியில்
ஓடிக்கொண்டிருந்தது
ஒரு சர்வதேசப் போட்டி !
நான் ,
பார்த்துக் கொண்டிருந்தேன்
ஒய்யாரமாகக்
கால்களை நீட்டி !

அங்கே,
அரையுங்குறையுமாய்
இரு பெண்கள்
வந்தாடினார்கள் !
வியர்க்க வியர்க்க
ஓடி ஓடி
பந்தாடினார்கள் !

இருவரில் ஒருத்தி
என்
தாய்நாட்டுக்காரி !
இன்னொருத்தி,
வேறு எதோ
பேய்நாட்டுக்காரி  !

நான்,
மந்திரித்து
விட்டது போல
முந்திரி
தின்றுகொண்டே
சுந்தரிகளை
சுவாரசியமாய்
பார்த்துக்கொண்டிருந்தேன் !

ங்கொக்கமக்கா !

வாங்கியே
ஆகவேண்டும்
தங்கம் !
இல்லையெனில்,
அது
தாய்நாட்டுக்கே
பங்கம் !

சுந்தரிகள்
இருவருமே
நெருங்கி வந்தனர்
வெற்றியை !
அநியாயத்துக்கு
நெளிய வைத்தனர்  - என்
நெற்றியை !

அடியேன்,
தொலைக்காட்சியிலேயே
கண்களை
சிறையிட்டேன் !
எல்லா
கடவுளிடமும்
வஞ்சனையில்லாமல்
முறையிட்டேன் !

இறுதியில்,
தாய்நாட்டுக்காரி
தங்கம் வென்றெடுத்தாள் !

தலைகால் புரியாமல்
கத்தினேன் !
கையை மடக்கிக்
காற்றில் குத்தினேன் !

உய் உய் உய் உய் !

வாய்நோக
அடித்தேன் சீட்டி !
ஏமாற்றாமல்
எதிர்பார்த்ததைத்
தந்து விட்டது போட்டி !

அப்பாடா !
இப்போதுதான்
இந்தநாள்
இனிமையாகப்
பூரணமாகும் !
தின்ற முந்திரி
நன்றாக
சீரணமாகும் !

ஆகிவிட்டது !

ஏப்பம் விட்டபடி
எழுந்து வந்தேன்
வீட்டின் வெளியே !

அங்கே,

பக்கத்துவீட்டுப்
பவழமல்லி
என் வீட்டுக்
கொல்லையில்
தலை நீட்டியிருந்தது !

வந்ததே கோபம் !
ங்கொய்யாலே ..........

பக்கத்து வீட்டானை
வார்த்தைகளால்
பொரிந்தேன் !
வேகமாய்
வேட்டியை
வரிந்தேன் !

செடியின் தலையை
அந்தப்புறம்
மடித்தேன் !
அப்புறம்,
அது உதவாதென்று
ஒட்டுமொத்தமாய்
ஒடித்தேன் !

விருட்டென்று
திரும்பி
வீட்டுக்குள் வந்துவிட்டேன் !

அப்போது
அலைபேசி அதிர்ந்தது !
குடிகொண்ட கோபம்
கொஞ்சம்போல உதிர்ந்தது !

எடுத்தால்,
எதிர்முனையில் நண்பன் !

வாடா வா !

தாய்நாடு
தங்கம் வென்றதை
இருவரும்
அங்கம் பூரிக்க
அறிவித்துக் கொண்டோம் !
விருந்துண்டு
வெற்றியைக்
கொண்டாடுவதென
உளப்பூர்வமாய்த்
தெரிவித்துக் கொண்டோம் !

கிளம்பி வந்தேன்
வெளியே !

அங்கே,

பவழமல்லி
பரிதாபமாய்
ஒடிந்து கிடந்தது !
சொல்லப்போனால்
கிட்டத்தட்ட
பாதியளவு
மடிந்து கிடந்தது !

கிடக்கிறது
கழுதை !

தங்கம் வென்றுவிட்டது !
தாய்நாடு

பவழமல்லியாவது !
பக்கத்து வீடாவது !

வாழ்க தேசியம் !
ஓங்குக நாட்டுப்பற்று ! 

Comments

  1. என்ன சொல்ல வரீங்க குரு ...
    பக்கத்துக்கு வீட்டு மனிதர்களிடம் கருணை காட்டாதவன்

    ஒட்டுமொத்த நாட்டின் வெற்றியை ...

    தன் சுயத்தின் சுகத்திற்காக கொண்டாடுகிறான் என்றா ?

    எதார்த்தத்தை அழகாக எளித வருகிறது .......

    இன்னும் கூட எதிர்பார்கிறேன்

    ReplyDelete
  2. நாட்டுப்பற்று என்பது ஒருவகையான வன்முறையாகவே நம்முள் பதிவு செய்யப்பட்டுள்ளது ! அந்த வன்முறை நம் பக்கத்து வீட்டுக்காரனிடமும் பிரதிபலிக்கிறது என்று சொல்லவந்தேன் என்று நினைக்கிறேன் தோழி ! மற்றபடி கொஞ்சம் குருட்டாம் போக்கில் எதுகை மோனை அழகுக்காகவே இக்கவிதை ( ? ) எழுதப்பட்டது என்பதே அப்பட்டமான உண்மை !

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்குபோட்டுப் பிரிப்பதுதான் ! ஏதோவொன்றை எண்ணைச்சட்டியில் பொரிப்பதுதான் ! நரகாசுரன் நமக்குள்ளே மரிப்பதுதான் ! ஒரு சங்கல்பத்தை நெஞ்சுக்குள் வரிப்பதுதான் ! வண்ண வேடிக்கையை வான் வெளியில் விர