வாழ்க தேசியம் !
ஓங்குக நாட்டுப்பற்று !
ஓங்குக நாட்டுப்பற்று !
தொலைக்காட்சியில்
ஓடிக்கொண்டிருந்தது
ஒரு சர்வதேசப் போட்டி !
நான் ,
பார்த்துக் கொண்டிருந்தேன்
ஒய்யாரமாகக்
கால்களை நீட்டி !
அங்கே,
அரையுங்குறையுமாய்
இரு பெண்கள்
வந்தாடினார்கள் !
வியர்க்க வியர்க்க
ஓடி ஓடி
பந்தாடினார்கள் !
இருவரில் ஒருத்தி
என்
தாய்நாட்டுக்காரி !
இன்னொருத்தி,
வேறு எதோ
பேய்நாட்டுக்காரி !
நான்,
மந்திரித்து
விட்டது போல
முந்திரி
தின்றுகொண்டே
சுந்தரிகளை
சுவாரசியமாய்
பார்த்துக்கொண்டிருந்தேன் !
ங்கொக்கமக்கா !
வாங்கியே
ஆகவேண்டும்
தங்கம் !
இல்லையெனில்,
அது
தாய்நாட்டுக்கே
பங்கம் !
சுந்தரிகள்
இருவருமே
நெருங்கி வந்தனர்
வெற்றியை !
அநியாயத்துக்கு
நெளிய வைத்தனர் - என்
நெற்றியை !
அடியேன்,
தொலைக்காட்சியிலேயே
கண்களை
சிறையிட்டேன் !
எல்லா
கடவுளிடமும்
வஞ்சனையில்லாமல்
முறையிட்டேன் !
இறுதியில்,
தாய்நாட்டுக்காரி
தங்கம் வென்றெடுத்தாள் !
தலைகால் புரியாமல்
கத்தினேன் !
கையை மடக்கிக்
காற்றில் குத்தினேன் !
உய் உய் உய் உய் !
வாய்நோக
அடித்தேன் சீட்டி !
ஏமாற்றாமல்
எதிர்பார்த்ததைத்
தந்து விட்டது போட்டி !
அப்பாடா !
இப்போதுதான்
இந்தநாள்
இனிமையாகப்
பூரணமாகும் !
தின்ற முந்திரி
நன்றாக
சீரணமாகும் !
ஆகிவிட்டது !
ஏப்பம் விட்டபடி
எழுந்து வந்தேன்
வீட்டின் வெளியே !
அங்கே,
பக்கத்துவீட்டுப்
பவழமல்லி
என் வீட்டுக்
கொல்லையில்
தலை நீட்டியிருந்தது !
வந்ததே கோபம் !
ங்கொய்யாலே ..........
பக்கத்து வீட்டானை
வார்த்தைகளால்
பொரிந்தேன் !
வேகமாய்
வேட்டியை
வரிந்தேன் !
செடியின் தலையை
அந்தப்புறம்
மடித்தேன் !
அப்புறம்,
அது உதவாதென்று
ஒட்டுமொத்தமாய்
ஒடித்தேன் !
விருட்டென்று
திரும்பி
வீட்டுக்குள் வந்துவிட்டேன் !
அப்போது
அலைபேசி அதிர்ந்தது !
குடிகொண்ட கோபம்
கொஞ்சம்போல உதிர்ந்தது !
எடுத்தால்,
எதிர்முனையில் நண்பன் !
வாடா வா !
தாய்நாடு
தங்கம் வென்றதை
இருவரும்
அங்கம் பூரிக்க
அறிவித்துக் கொண்டோம் !
விருந்துண்டு
வெற்றியைக்
கொண்டாடுவதென
உளப்பூர்வமாய்த்
தெரிவித்துக் கொண்டோம் !
கிளம்பி வந்தேன்
வெளியே !
அங்கே,
பவழமல்லி
பரிதாபமாய்
ஒடிந்து கிடந்தது !
சொல்லப்போனால்
கிட்டத்தட்ட
பாதியளவு
மடிந்து கிடந்தது !
கிடக்கிறது
கழுதை !
தங்கம் வென்றுவிட்டது !
தாய்நாடு
பவழமல்லியாவது !
பக்கத்து வீடாவது !
வாழ்க தேசியம் !
ஓங்குக நாட்டுப்பற்று !
என்ன சொல்ல வரீங்க குரு ...
ReplyDeleteபக்கத்துக்கு வீட்டு மனிதர்களிடம் கருணை காட்டாதவன்
ஒட்டுமொத்த நாட்டின் வெற்றியை ...
தன் சுயத்தின் சுகத்திற்காக கொண்டாடுகிறான் என்றா ?
எதார்த்தத்தை அழகாக எளித வருகிறது .......
இன்னும் கூட எதிர்பார்கிறேன்
நாட்டுப்பற்று என்பது ஒருவகையான வன்முறையாகவே நம்முள் பதிவு செய்யப்பட்டுள்ளது ! அந்த வன்முறை நம் பக்கத்து வீட்டுக்காரனிடமும் பிரதிபலிக்கிறது என்று சொல்லவந்தேன் என்று நினைக்கிறேன் தோழி ! மற்றபடி கொஞ்சம் குருட்டாம் போக்கில் எதுகை மோனை அழகுக்காகவே இக்கவிதை ( ? ) எழுதப்பட்டது என்பதே அப்பட்டமான உண்மை !
ReplyDelete