பிரம்மச்சரியம்
திருமணம்
இல்லாமல்
வாழ முடியாதா ?
இருமனம்
இணையாமல்
இருக்க முடியாதா ?
இரண்டு மாதங்களில்
அகவை முப்பது
கடக்கப் போகிறது !
முதுமை வந்து
மொத்த உடம்பையும்
அடக்கப் போகிறது !
நிரந்தரம் தான்
இந்தத் தனிமை !
இருக்கவே போவதில்லை
இனி இனிமை !
வற்றி வற்றியே
காய்கிறது
ஆண்ட்ரோஜன் !
பகட்டை நோக்கியே
பாய்கிறது
ஈஸ்ட்ரோஜன் !
தோலில் இல்லை
சிவப்பு !
வாழ்வில் இல்லை
உவப்பு !
நடுத்தரமென்றாலே
இங்கு கசப்பு !
நடப்பதெல்லாம்
வெறும் பசப்பு !
வசந்தத்திற்கு
வைக்கப்பட்டது சிறை !
இனி வாழ்வென்பது
வெறும் அறை !
நிரந்தரமாகி விட்டது
குறை !
இது எந்தப் பாவத்தின்
கறை ?
ஒவ்வொருத்திக்கும்
வேண்டும்
அனைத்திலும்
சிறந்தவன் !
ஒன்று குறைந்தாலும்
அவள்கட்கு
அவன் இறந்தவன் !
கருணையில்லாதவன்
காமன் !
இனி உருவாக மாட்டான்
மருமகனுக்கொரு
மாமன் !
பாழும் உலகில்
பெண்களே இல்லை !
மக்கட்தொகையில்
அவர்கள்
எண்களே இல்லை !
இனி
புகைக்க வேண்டும்
கஞ்சா !
தனிமையை விட
அது
அவ்வளவு பெரிய
நஞ்சா ?
பழகி விட்டது
இந்த
பிரமச்சரியம் !
திருமணம் நடந்தால்
அது
உலக ஆச்சர்யம் !
அடுத்த பிறவியிலாவது
கிட்டுமா
இல்லறத்தின் ஆசி ?
எங்காவது
கிடைப்பாளா
அன்பு செலுத்தும் தாசி ???
திருமணம்
இல்லாமல்
வாழ முடியாதா ?
இருமனம்
இணையாமல்
இருக்க முடியாதா ?
இரண்டு மாதங்களில்
அகவை முப்பது
கடக்கப் போகிறது !
முதுமை வந்து
மொத்த உடம்பையும்
அடக்கப் போகிறது !
நிரந்தரம் தான்
இந்தத் தனிமை !
இருக்கவே போவதில்லை
இனி இனிமை !
வற்றி வற்றியே
காய்கிறது
ஆண்ட்ரோஜன் !
பகட்டை நோக்கியே
பாய்கிறது
ஈஸ்ட்ரோஜன் !
தோலில் இல்லை
சிவப்பு !
வாழ்வில் இல்லை
உவப்பு !
நடுத்தரமென்றாலே
இங்கு கசப்பு !
நடப்பதெல்லாம்
வெறும் பசப்பு !
வசந்தத்திற்கு
வைக்கப்பட்டது சிறை !
இனி வாழ்வென்பது
வெறும் அறை !
நிரந்தரமாகி விட்டது
குறை !
இது எந்தப் பாவத்தின்
கறை ?
ஒவ்வொருத்திக்கும்
வேண்டும்
அனைத்திலும்
சிறந்தவன் !
ஒன்று குறைந்தாலும்
அவள்கட்கு
அவன் இறந்தவன் !
கருணையில்லாதவன்
காமன் !
இனி உருவாக மாட்டான்
மருமகனுக்கொரு
மாமன் !
பாழும் உலகில்
பெண்களே இல்லை !
மக்கட்தொகையில்
அவர்கள்
எண்களே இல்லை !
இனி
புகைக்க வேண்டும்
கஞ்சா !
தனிமையை விட
அது
அவ்வளவு பெரிய
நஞ்சா ?
பழகி விட்டது
இந்த
பிரமச்சரியம் !
திருமணம் நடந்தால்
அது
உலக ஆச்சர்யம் !
அடுத்த பிறவியிலாவது
கிட்டுமா
இல்லறத்தின் ஆசி ?
எங்காவது
கிடைப்பாளா
அன்பு செலுத்தும் தாசி ???
ஒரு 20 வருடத்திற்கு முன்பெல்லாம் முதிர் கன்னிகள் குறித்த கவிதைகள் அதிகம்.இதோ ஒரு முதிர் கண்ணன் பற்றிய கவிதை.காரணம் நாடு முழுதும் உசிலம்பட்டி ஆனதுதான். இதே ரீதியில் போனால் செவ்வாய் கிரகத்துக்குத்தான் போக வேண்டும் பெண் தேட. பெண் குழந்தையை போற்றுங்கள்
ReplyDeleteஅந்த முதிர்கன்னிகள் விட்ட சாபமோ என்னவோ, எங்களைப் போன்ற முதிர் கண்ணன்கள் கடைசி வரை திருமணம் ஆகுமா ஆகாதா என்று புதிர்கண்ணன்களாகவே இருக்கிறோம் !
ReplyDeleteவாசித்து கருத்து சொன்னமைக்கு " அகில உலக முதிர் கண்ணன்களின் " சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நடப்பது எல்லாம் நன்மைக்கு தான் நண்பா ஒரு தேவதையின் வருகைக்காக காத்திருக்க சொல்லுகிறார் கடவுள் காத்திரு ......வரிகளில் தெரிகிறது மனதின் ரணம் வார்த்தைகளில் விழுகிறது கனம்
ReplyDeleteஇரணமான மனதை மயிலிறகால் வருடியது போல இருக்கிறது தங்கள் ஆறுதல் மொழி ! மிக்க நன்றி !
ReplyDelete