உழைப்பு
வாழ்க்கையே
வெறுத்து விட்டது !
உழைத்து உழைத்தே
உடம்பு,
சிறுத்து விட்டது !
காலையிலேயே
கல்லொன்று
காலைத்
தடுக்கியது !
' போகாதே ' என்று
புத்திமதியை
மண்டைக்குள்
முடுக்கியது !
அப்போதே
கணித்திருக்க வேண்டும் !
போகவேண்டாமென
பாழும் மனதைப்
பணித்திருக்க வேண்டும் !
கஷ்ட காலம் !
பிசகிவிட்டது !
சொந்தக்காரன்
செத்துவிட்டான்
என்று,
அன்று
சக ஊழியன்
வரவில்லை !
அது,
அடிக்கடி
அவன் சொல்லும்
சாக்கு !
அவனைப்
பொருத்தமட்டில்
நான் ஒரு
பேக்கு !
மேலதிகாரி,
வேலை எனும்
கல்லில் போட்டு
துவைத்து விட்டான் !
உட்கார்ந்தபடியே
உள்ளிருக்கும்
உதிரத்தை
சுவைத்து விட்டான் !
முன்மண்டையில்
முடியில்லாத எவனோ
மேலிடத்திலிருந்து
வருகிறானாம் !
அனைத்தையும்
ஆய்ந்து
' நலமே' என்று
சான்றிதழ்
தருகிறானாம் !
அதற்கு நானா
அகப்பட்டேன் ?
ம்ஹ்ம் !
இந்த வேலையில்
எங்கே நான்
சுகப்பட்டேன் ?
ஸ்ஸ்ஸ் யப்பா !
எவ்வளவு
வேலை !
கரும்பைப் போல்
பிழிந்து விட்டது
ஆலை !
யாவும் முடிந்து
வெளியே
வருவதற்குள்
ஓடு போலத்
தேய்ந்து விட்டேன் !
ஒட்டுமொத்தமாய்
ஓய்ந்து விட்டேன் !
அப்போது
கருப்பாய்
மாறியது வானம் !
கேட்கத்தொடங்குமா
மழையின் கானம் ?
அதோ !
வந்து விட்டது
மழைத்துளி !
மணிக்கட்டில்
விழுந்தது
முதல் துளி !
இடி எனும்
தடியால்
வானத்தை
யாரோ
அடிக்க,
மின்னல் வந்து
விரிசல் போல
வெடிக்க
சும்மா,
பிளந்து கொண்டு
கொட்டியது ஆகாயம் !
அப்போது
சட்டெனத்
தோன்றியது
ஒரு கேள்வி !
கணப்பொழுதில்
கனன்றது
எண்ணத்தின் வேள்வி !
யாருக்காக
இந்த மழை ?
நாளெல்லாம்
நான் சிந்திய
வியர்வைக்காகத்தான்
இப்படி
விடாது பொழிகிறதா
வானம் ?
ச்சே ச்சே !
அப்படியெல்லாம்
இருக்காது !
ஆனாலும்
ஆனாலும்
தேகம் ஏன்
இப்படி சிலிர்க்கிறது ?
கண்களில் ஏன்
கண்ணீர் துளிர்க்கிறது ?
அம்மம்மா !
என்ன ஒரு
நிறைவு !
இன்பத்திற்கு
இங்கே என்ன
குறைவு ?
அதன் பிறகு
வீடு வந்தேன் !
உணவு உண்டேன் !
உழைப்பின் பரிசாய்
உலகம் மறந்து
உறங்கினேன் !
வாழ்க்கையே
வெறுத்து விட்டது !
உழைத்து உழைத்தே
உடம்பு,
சிறுத்து விட்டது !
காலையிலேயே
கல்லொன்று
காலைத்
தடுக்கியது !
' போகாதே ' என்று
புத்திமதியை
மண்டைக்குள்
முடுக்கியது !
அப்போதே
கணித்திருக்க வேண்டும் !
போகவேண்டாமென
பாழும் மனதைப்
பணித்திருக்க வேண்டும் !
கஷ்ட காலம் !
பிசகிவிட்டது !
சொந்தக்காரன்
செத்துவிட்டான்
என்று,
அன்று
சக ஊழியன்
வரவில்லை !
அது,
அடிக்கடி
அவன் சொல்லும்
சாக்கு !
அவனைப்
பொருத்தமட்டில்
நான் ஒரு
பேக்கு !
மேலதிகாரி,
வேலை எனும்
கல்லில் போட்டு
துவைத்து விட்டான் !
உட்கார்ந்தபடியே
உள்ளிருக்கும்
உதிரத்தை
சுவைத்து விட்டான் !
முன்மண்டையில்
முடியில்லாத எவனோ
மேலிடத்திலிருந்து
வருகிறானாம் !
அனைத்தையும்
ஆய்ந்து
' நலமே' என்று
சான்றிதழ்
தருகிறானாம் !
அதற்கு நானா
அகப்பட்டேன் ?
ம்ஹ்ம் !
இந்த வேலையில்
எங்கே நான்
சுகப்பட்டேன் ?
ஸ்ஸ்ஸ் யப்பா !
எவ்வளவு
வேலை !
கரும்பைப் போல்
பிழிந்து விட்டது
ஆலை !
யாவும் முடிந்து
வெளியே
வருவதற்குள்
ஓடு போலத்
தேய்ந்து விட்டேன் !
ஒட்டுமொத்தமாய்
ஓய்ந்து விட்டேன் !
அப்போது
கருப்பாய்
மாறியது வானம் !
கேட்கத்தொடங்குமா
மழையின் கானம் ?
அதோ !
வந்து விட்டது
மழைத்துளி !
மணிக்கட்டில்
விழுந்தது
முதல் துளி !
இடி எனும்
தடியால்
வானத்தை
யாரோ
அடிக்க,
மின்னல் வந்து
விரிசல் போல
வெடிக்க
சும்மா,
பிளந்து கொண்டு
கொட்டியது ஆகாயம் !
அப்போது
சட்டெனத்
தோன்றியது
ஒரு கேள்வி !
கணப்பொழுதில்
கனன்றது
எண்ணத்தின் வேள்வி !
யாருக்காக
இந்த மழை ?
நாளெல்லாம்
நான் சிந்திய
வியர்வைக்காகத்தான்
இப்படி
விடாது பொழிகிறதா
வானம் ?
ச்சே ச்சே !
அப்படியெல்லாம்
இருக்காது !
ஆனாலும்
ஆனாலும்
தேகம் ஏன்
இப்படி சிலிர்க்கிறது ?
கண்களில் ஏன்
கண்ணீர் துளிர்க்கிறது ?
அம்மம்மா !
என்ன ஒரு
நிறைவு !
இன்பத்திற்கு
இங்கே என்ன
குறைவு ?
அதன் பிறகு
வீடு வந்தேன் !
உணவு உண்டேன் !
உழைப்பின் பரிசாய்
உலகம் மறந்து
உறங்கினேன் !
உழைப்பின் வலி
ReplyDeleteஉள்ளத்தின் சோர்வு
இயலாமையின் சோகம்
இத்தனையும் தாண்டி
மழையை கண்டு மனதை மீட்டுகொள்ளும்
உணர்வு ..............அருமை குரு
உழைப்பாளியின் நிலை கண்முன் காட்சியாய் சோகத்தை பிழிகிறது
வார்த்தைகளில் தெறிக்கும் மோனையும் எதுகையும் படிபவருக்கு சந்தத்தின் சத்தத்தை அதிகரிக்கிறது
அருமை
உண்மையில் தங்களின் பின்னூட்டம் தான் இந்தக் கவிதைக்கு அழகூட்டுகிறது தோழி ! மற்றபடி, டி.ராஜேந்திரையும் , கவிஞர் வாலியையும் பின்பற்றி எழுதிய கவிதை இது !
ReplyDelete