Skip to main content
குறிப்பு : சுத்தக்காரர்கள் இக்கவிதையைப் படிக்க வேண்டாம் !











சுகாதாரம்


   


சுகாதார அமைச்சர்
பள்ளிக்கு வருகிறாராம் !

கிழிந்து விட்டது
ஒட்டுமொத்த உற்சாகமும்
அழிந்து விட்டது !

தலைமையாசிரியர்
தலையில் அடித்துக் கொண்டார் !

உடனடியாக
அணி பிரிக்கப்பட்டது !
பணி ஒதுக்கப்பட்டது !

சுற்றுப்புறத்தில்
வீசியது
சுத்தத்தின் புயல் !
அங்கே
ஒவ்வொருவனும் ஆனான்
ஒரு குட்டி முயல் !

கூட்டலும், பெருக்கலும்
தரையில் நிகழ,
சொடுக்கப்பட்ட பம்பரமாய்
யாவரும் சுழல,

பித்தம் பிடித்தது போல
யுத்தம் செய்வது போல
யாவரும் அங்கே
சுத்தம் செய்தார்கள் !

ஓடி ஓடி
சுவரெல்லாம்
வெள்ளையடித்தார்கள் !
தேடித் தேடி
தூசியைக்
கொள்ளையடித்தார்கள் !

வேர்த்து வேர்த்து
கோலங்கள் இடப்பட்டன !
பார்த்துப் பார்த்து
பூஞ்செடிகள் நடப்பட்டன !

தலைமையாசிரியர்
மூக்கு விடைத்தபடி
மேற்பார்வை பார்த்தார் !

நோட்டம்
முடிந்ததும்
கூட்டம் நடந்தது !

பாக்கி இருப்பவை
பட்டியல் போடப்பட்டன !

அதன் படி,

வளாகமெங்கும்
வண்ணங்கள் தீட்டப்பட,
ஆங்காங்கே
கம்பீரமாய்
கொடிகள் நாட்டப்பட,
வாழ்த்துரைகள்
மீண்டும் மீண்டும்
வாசித்துக் காட்டப்பட,
நேரம் இல்லையென்று
கழிவறை மட்டும்
கமுக்கமாய்ப் பூட்டப்பட,

அந்த நாளும்
வந்து விட்டது !

ஆர்ப்பரித்தது
பார் !
கூடி நின்றது
ஊர் !
வரிசை கட்டியது
கார் !
தோற்றுப் போனது
தேர் !

அமைச்சர்
வந்திறங்கினார் !

இருமுறை
இருமினார் !
தொண்டையை
செருமினார் !

வெயில் ஆகாமல்
வியர்வையில்
பிசுபிசுத்தார் !
அப்புறம் குனிந்து
உதவியிடம்
கிசுகிசுத்தார் !

உதவி,
தலைமையாசிரியரை
நெருங்கி,
அவர் காதோடு
சொன்னார்,

" தலைவருக்கு
கொஞ்சம் போல சர்க்கரை !
சில நிமிடங்கட்கு ஒருமுறை
சிறுநீர் கழித்தாக வேண்டும் !
கொஞ்சம் உங்கள்
கழிவறையைக் காட்டுங்கள் ! "



Comments

  1. பள்ளி பருவத்தின்
    நினைவுகளை
    மீள் பிரசுரிக்கிறது

    உங்கள் வரிகள்

    வரி வரியை
    பள்ளியை சுற்றி
    வட்டம் போட்டு இருக்கிறீர்கள் ....

    நிதர்சனம் கண் முன்
    நிழலாடுது .........

    சமூகத்தின் அவலத்தை
    சாட்டையால் அடித்தது போல ......

    சுத்தம் செய்ய வேண்டிய இடம் தவிர
    அனைத்தும் சுத்தம் .........

    மனித மனம் போல
    அசுத்தத்தின் மறைவிடங்கள்

    ஆழ வெளிபடுகிறது கவிதையில்

    பாராட்டுக்கள் ..........

    ReplyDelete
  2. அப்பா ! கவிதை என்று நான் நினைத்துக் கொண்டு எழுதியதை விட அதற்கு கவிதையாக ஒரு பின்னூட்டம் இட்டுள்ளீர்களே, அது இன்னும் கவிதையாக இருக்கிறது ! சில நேரங்களில், ஆட்டைக் கொண்டு போய் சிம்மாசனத்தில் ஏற்றினால், அது கம்பீரமாகத் தெரியுமாம் ! அது போலத் தான், உங்கள் சிம்மாசனப் பின்னூட்டத்தில் எனது ஆட்டுக் கவிதை கம்பீரமாய்த் தெரிகிறது ! நன்றி

    ReplyDelete
    Replies
    1. எதையும் பிரமாண்டமாய் பார்க்கும் அதே கண்தான் புள்ளியையும் பார்க்கிறது

      நன்றி நண்பா

      Delete

Post a Comment

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்குபோட்டுப் பிரிப்பதுதான் ! ஏதோவொன்றை எண்ணைச்சட்டியில் பொரிப்பதுதான் ! நரகாசுரன் நமக்குள்ளே மரிப்பதுதான் ! ஒரு சங்கல்பத்தை நெஞ்சுக்குள் வரிப்பதுதான் ! வண்ண வேடிக்கையை வான் வெளியில் விர