தோற்றுப் போனவன்
அவன்
அறியப்பட்டான்
உரிமை இழந்த
குடிமை என்று !
உற்றுப் பார்த்தால்
தெரியும்
உண்மையில் அவன்
அடிமை என்று !
அரசைப்
பொறுத்தவரை
அவன் ஒரு
அகதி !
அண்டை நாட்டு
நட்புக் கொடியில்
தெறித்து விட்ட
சகதி !
ஆம்,
அவன்
வேற்று நாட்டு
மண்ணில்
நேற்று நடந்த
போரில்
தோற்றுப் போனவன் !
அவன்
தாய்மொழி கூட
தமிழ் தான் !
அவன் வாழ்வு
நிலையில்லா
நீர்க்குமிழ் தான் !
அவன்
தாய் தந்தையர்
இறந்து விட்டனர்
போரில் !
உறவென்று
யாருமில்லை
அவனுக்குப்
பாரில் !
அவனுக்கு
அடைக்கலம்
கொடுத்தது
சென்னை !
அந்த வகையில்
அதுதான்
அவனது
அன்னை !
அது,
நண்பனொருவனின்
தூரத்து
உறவு !
அதுவும்
மறுக்கப் பட்டிருந்தால்
அடுத்து
அவன் இலக்கு
துறவு !
அவனுக்கென
மாடியில்
ஒதுக்கப்பட்டிருந்தது
ஒரு அறை !
தனிமையை
உணர்த்துவதில்
அது கூட
ஒரு சிறை !
அவனுக்கு
மூன்று வேளையும்
தவறாது
உணவு வரும் !
உண்டுவிட்டுப்
படுத்தால்
உறக்கத்தை
முந்திக்கொண்டு
கனவு வரும் !
அந்தக் கனவுகளில்
முழுக்க முழுக்க
சத்தம் தான் !
ரத்தம் தான் !
யுத்தம் தான் !
ஆனால்
அனைத்தும்
நாளடைவில்
குறைந்து விட்டன !
மனதின் அடியாழத்தில்
அவையாவும்
உறைந்து விட்டன !
அவனிடத்தினின்று
பத்து கல்
தொலைவில் இருந்தது
ஒரு ஆலை !
அங்கு
அவனுக்கும்
கிடைத்தது
ஒரு வேலை !
பணியிடத்தில்
பக்கத்திலேயே
பருவ மொட்டு
ஒருத்தி !
பார்த்துப் பார்த்து
சிரித்தாள்
அவன் மனசையெல்லாம்
இன்பமாய்
வருத்தி !
இவனுக்கும்
காதல்
அரும்பியது !
வேறுதிசை நோக்கி
வாழ்க்கை
திரும்பியது !
ஒரு நாள்
மாலை,
கதவு திறந்ததில்
காலடியில்
கிடந்தது
ஒரு உறை !
பிரித்துப் பார்த்ததில்
உள்ளே
சிவப்பு சிவப்பாய்க்
கறை !
ஆம்,
எவனோ
தன் உதிரத்தை
எழுத்தாக்கியிருந்தான் !
" தோழர் ............."
என்று ஆரம்பித்த
அக்கடிதத்தின்
இறுதி வரி
இப்படியிருந்தது,
" மரம் வீழ்ந்தாலும்
அது விட்டுச்சென்ற
விதைகள்
வீரியம் பெறட்டும்
வீரம் தொடரட்டும் "
மறுபடியும்
ஒரு போரா ?
நினைத்தாலே
மனதுக்குள்
மூண்டு எழுகிறது
ஆயாசம் !
இப்போதிருக்கும்
வாழ்க்கையோ
தித்திக்கின்ற
பாயாசம் !
" அப்படியானால்
வீழ்ந்தோர்களின்
தியாகமெல்லாம்
வீணாய்ப் போவதா ? "
யாரோ கேட்டார்கள் !
வீழ்ந்தார்கள்
வீழ்ந்தார்கள் என்று
இங்கே
இருப்பவர்களும்
இன்னும் இன்னும்
வீழ்ந்து கொண்டிருந்தால்
நாளை
வாழ்வதற்கு
யாரிருப்பார்கள் ???
அரைநொடி
ஆகவில்லை
அவன்
அக்கடிதத்தைக்
கிழிக்க !
அப்புறம் அவன்
குளியலறை சென்றான்
தன்
நீண்டநாள் தாடியை
மழிக்க !
அவன்
அறியப்பட்டான்
உரிமை இழந்த
குடிமை என்று !
உற்றுப் பார்த்தால்
தெரியும்
உண்மையில் அவன்
அடிமை என்று !
அரசைப்
பொறுத்தவரை
அவன் ஒரு
அகதி !
அண்டை நாட்டு
நட்புக் கொடியில்
தெறித்து விட்ட
சகதி !
ஆம்,
அவன்
வேற்று நாட்டு
மண்ணில்
நேற்று நடந்த
போரில்
தோற்றுப் போனவன் !
அவன்
தாய்மொழி கூட
தமிழ் தான் !
அவன் வாழ்வு
நிலையில்லா
நீர்க்குமிழ் தான் !
அவன்
தாய் தந்தையர்
இறந்து விட்டனர்
போரில் !
உறவென்று
யாருமில்லை
அவனுக்குப்
பாரில் !
அவனுக்கு
அடைக்கலம்
கொடுத்தது
சென்னை !
அந்த வகையில்
அதுதான்
அவனது
அன்னை !
அது,
நண்பனொருவனின்
தூரத்து
உறவு !
அதுவும்
மறுக்கப் பட்டிருந்தால்
அடுத்து
அவன் இலக்கு
துறவு !
அவனுக்கென
மாடியில்
ஒதுக்கப்பட்டிருந்தது
ஒரு அறை !
தனிமையை
உணர்த்துவதில்
அது கூட
ஒரு சிறை !
அவனுக்கு
மூன்று வேளையும்
தவறாது
உணவு வரும் !
உண்டுவிட்டுப்
படுத்தால்
உறக்கத்தை
முந்திக்கொண்டு
கனவு வரும் !
அந்தக் கனவுகளில்
முழுக்க முழுக்க
சத்தம் தான் !
ரத்தம் தான் !
யுத்தம் தான் !
ஆனால்
அனைத்தும்
நாளடைவில்
குறைந்து விட்டன !
மனதின் அடியாழத்தில்
அவையாவும்
உறைந்து விட்டன !
அவனிடத்தினின்று
பத்து கல்
தொலைவில் இருந்தது
ஒரு ஆலை !
அங்கு
அவனுக்கும்
கிடைத்தது
ஒரு வேலை !
பணியிடத்தில்
பக்கத்திலேயே
பருவ மொட்டு
ஒருத்தி !
பார்த்துப் பார்த்து
சிரித்தாள்
அவன் மனசையெல்லாம்
இன்பமாய்
வருத்தி !
இவனுக்கும்
காதல்
அரும்பியது !
வேறுதிசை நோக்கி
வாழ்க்கை
திரும்பியது !
ஒரு நாள்
மாலை,
கதவு திறந்ததில்
காலடியில்
கிடந்தது
ஒரு உறை !
பிரித்துப் பார்த்ததில்
உள்ளே
சிவப்பு சிவப்பாய்க்
கறை !
ஆம்,
எவனோ
தன் உதிரத்தை
எழுத்தாக்கியிருந்தான் !
" தோழர் ............."
என்று ஆரம்பித்த
அக்கடிதத்தின்
இறுதி வரி
இப்படியிருந்தது,
" மரம் வீழ்ந்தாலும்
அது விட்டுச்சென்ற
விதைகள்
வீரியம் பெறட்டும்
வீரம் தொடரட்டும் "
மறுபடியும்
ஒரு போரா ?
நினைத்தாலே
மனதுக்குள்
மூண்டு எழுகிறது
ஆயாசம் !
இப்போதிருக்கும்
வாழ்க்கையோ
தித்திக்கின்ற
பாயாசம் !
" அப்படியானால்
வீழ்ந்தோர்களின்
தியாகமெல்லாம்
வீணாய்ப் போவதா ? "
யாரோ கேட்டார்கள் !
வீழ்ந்தார்கள்
வீழ்ந்தார்கள் என்று
இங்கே
இருப்பவர்களும்
இன்னும் இன்னும்
வீழ்ந்து கொண்டிருந்தால்
நாளை
வாழ்வதற்கு
யாரிருப்பார்கள் ???
அரைநொடி
ஆகவில்லை
அவன்
அக்கடிதத்தைக்
கிழிக்க !
அப்புறம் அவன்
குளியலறை சென்றான்
தன்
நீண்டநாள் தாடியை
மழிக்க !
முடிவில் சிந்திக்க வைக்கும் கேள்வி...
ReplyDeleteஇக்கவிதை சர்ச்சையை உண்டாக்கும் என்று எதிர்பார்த்தேன். அப்படி எதிர்பார்க்கும் அளவுக்கு நான் பெரிய இவன் இல்லை, ஒரு சாதாரண அவன் ! ஆனாலும் இக்கவிதையின் வீச்சை உணர்ந்து கருத்து தெரிவித்தமைக்கு நண்பர் தனபாலனுக்கு நன்றிகள் ஆயிரம் !
ReplyDeleteவீழ்ந்தார்கள்
ReplyDeleteவீழ்ந்தார்கள் என்று
இங்கே
இருப்பவர்களும்
இன்னும் இன்னும்
வீழ்ந்து கொண்டிருந்தால்
நாளை
வாழ்வதற்கு
யாரிருப்பார்கள் ???
என் பார்வையும் இதுதான் நண்பா. நாம் ஒதுங்கியிருந்து வேடிக்கை பார்ப்பதால் ஏற்படும் எண்ணமாகக் கூட இருக்கலாம். சூழ் நிலையின் வட்டத்துள் இருப்பவர்கள் பார்வை வேறாகத்தானே இருக்கும்.