Skip to main content
தோற்றுப் போனவன்






அவன்
அறியப்பட்டான்
உரிமை இழந்த
குடிமை என்று !
உற்றுப் பார்த்தால்
தெரியும்
உண்மையில் அவன்
அடிமை என்று !

அரசைப்
பொறுத்தவரை
அவன் ஒரு
அகதி !
அண்டை நாட்டு
நட்புக் கொடியில்
தெறித்து விட்ட
சகதி !

ஆம்,
அவன்
வேற்று நாட்டு
மண்ணில்
நேற்று நடந்த
போரில்
தோற்றுப் போனவன் !

அவன்
தாய்மொழி கூட
தமிழ் தான் !
அவன் வாழ்வு
நிலையில்லா
நீர்க்குமிழ் தான் !

அவன்
தாய் தந்தையர்
இறந்து விட்டனர்
போரில் !
உறவென்று
யாருமில்லை
அவனுக்குப்
பாரில் !

அவனுக்கு
அடைக்கலம்
கொடுத்தது
சென்னை !
அந்த வகையில்
அதுதான்
அவனது
அன்னை !

அது,
நண்பனொருவனின்
தூரத்து
உறவு !
அதுவும்
மறுக்கப் பட்டிருந்தால்
அடுத்து
அவன் இலக்கு
துறவு !

அவனுக்கென
மாடியில்
ஒதுக்கப்பட்டிருந்தது
ஒரு அறை !
தனிமையை
உணர்த்துவதில்
அது கூட
ஒரு சிறை !

அவனுக்கு
மூன்று வேளையும்
தவறாது
உணவு வரும் !
உண்டுவிட்டுப்
படுத்தால்
உறக்கத்தை
முந்திக்கொண்டு
கனவு வரும் !

அந்தக் கனவுகளில்
முழுக்க முழுக்க
சத்தம் தான் !
ரத்தம் தான் !
யுத்தம் தான் !

ஆனால்
அனைத்தும்
நாளடைவில்
குறைந்து விட்டன !
மனதின் அடியாழத்தில்
அவையாவும்
உறைந்து விட்டன !

அவனிடத்தினின்று
பத்து கல்
தொலைவில் இருந்தது
ஒரு ஆலை !
அங்கு
அவனுக்கும்
கிடைத்தது
ஒரு வேலை !

பணியிடத்தில்
பக்கத்திலேயே
பருவ மொட்டு
ஒருத்தி !
பார்த்துப் பார்த்து
சிரித்தாள்
அவன் மனசையெல்லாம்
இன்பமாய்
வருத்தி !

இவனுக்கும்
காதல்
அரும்பியது !
வேறுதிசை நோக்கி
வாழ்க்கை
திரும்பியது !

ஒரு நாள்
மாலை,

கதவு திறந்ததில்
காலடியில்
கிடந்தது
ஒரு உறை !
பிரித்துப் பார்த்ததில்
உள்ளே
சிவப்பு சிவப்பாய்க்
கறை !

ஆம்,
எவனோ
தன் உதிரத்தை
எழுத்தாக்கியிருந்தான் !

" தோழர் ............."
என்று ஆரம்பித்த
அக்கடிதத்தின்
இறுதி வரி
இப்படியிருந்தது,

" மரம் வீழ்ந்தாலும்
அது விட்டுச்சென்ற
விதைகள்
வீரியம் பெறட்டும்
வீரம் தொடரட்டும்   "

மறுபடியும்
ஒரு போரா ?

நினைத்தாலே
மனதுக்குள்
மூண்டு எழுகிறது
ஆயாசம் !
இப்போதிருக்கும்
வாழ்க்கையோ
தித்திக்கின்ற
பாயாசம் !

" அப்படியானால்
வீழ்ந்தோர்களின்
தியாகமெல்லாம்
வீணாய்ப் போவதா ? "

யாரோ கேட்டார்கள் !

வீழ்ந்தார்கள்
வீழ்ந்தார்கள் என்று
இங்கே
இருப்பவர்களும்
இன்னும் இன்னும்
வீழ்ந்து கொண்டிருந்தால்
நாளை
வாழ்வதற்கு
யாரிருப்பார்கள் ???

அரைநொடி
ஆகவில்லை
அவன்
அக்கடிதத்தைக்
கிழிக்க !
அப்புறம் அவன்
குளியலறை சென்றான்
தன்
நீண்டநாள் தாடியை
மழிக்க !


Comments

  1. முடிவில் சிந்திக்க வைக்கும் கேள்வி...

    ReplyDelete
  2. இக்கவிதை சர்ச்சையை உண்டாக்கும் என்று எதிர்பார்த்தேன். அப்படி எதிர்பார்க்கும் அளவுக்கு நான் பெரிய இவன் இல்லை, ஒரு சாதாரண அவன் ! ஆனாலும் இக்கவிதையின் வீச்சை உணர்ந்து கருத்து தெரிவித்தமைக்கு நண்பர் தனபாலனுக்கு நன்றிகள் ஆயிரம் !

    ReplyDelete
  3. வீழ்ந்தார்கள்
    வீழ்ந்தார்கள் என்று
    இங்கே
    இருப்பவர்களும்
    இன்னும் இன்னும்
    வீழ்ந்து கொண்டிருந்தால்
    நாளை
    வாழ்வதற்கு
    யாரிருப்பார்கள் ???

    என் பார்வையும் இதுதான் நண்பா. நாம் ஒதுங்கியிருந்து வேடிக்கை பார்ப்பதால் ஏற்படும் எண்ணமாகக் கூட இருக்கலாம். சூழ் நிலையின் வட்டத்துள் இருப்பவர்கள் பார்வை வேறாகத்தானே இருக்கும்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்குபோட்டுப் பிரிப்பதுதான் ! ஏதோவொன்றை எண்ணைச்சட்டியில் பொரிப்பதுதான் ! நரகாசுரன் நமக்குள்ளே மரிப்பதுதான் ! ஒரு சங்கல்பத்தை நெஞ்சுக்குள் வரிப்பதுதான் ! வண்ண வேடிக்கையை வான் வெளியில் விர